Saturday 30 May 2020

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (76-281)


76. 'டெசோ' மாநாட்டில் தேசியத் தலைவர்கள்!
மதுரையில் நடைபெற்ற "டெசோ' மாநாட்டில் கலந்துகொண்டு ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ராமராவ் ஆற்றிய உரையின் சில பகுதிகள் வருமாறு:

""இந்த மக்கள் மகாசமுத்திரத்தில், ஒவ்வொருவர் முகத்திலும் கவலையைக் காண்கிறேன். இலங்கையில் நம் தமிழ்க்குடிமக்கள் படும் கஷ்டத்தை நினைக்கும்போது நம் கண்கள் குளமாகின்றன. மக்களைக் காப்பாற்ற வேண்டிய அரசாங்கமே வன்முறையைக் கடைப்பிடிக்கிறது. மக்களை அடக்கி ஒடுக்குகிறது...
சிறுபான்மையினருக்கு அன்பு காட்டி, கட்டிக்காத்து, பெரும்பான்மையினரையும் வளர்ப்பது எந்த அரசிற்கும் தலையாய கடமையாகும். சிறுபான்மையினர் அதிகமாக உள்ள பகுதிகளில் அவர்களுடைய மொழி, மதம், இனம், இதர உரிமைகள் காக்கப்பட வேண்டியது போக, அவர்களிடமிருந்து சாதாரண குடிமக்களுக்குரிய உரிமைகளைக்கூடப் பறித்து ஆதரவற்றவர்களாகச் செய்யும் முறையை என்னென்பது?
சிறுபான்மை-மைனாரிட்டி வர்க்கத்தினர் இருக்கும் பகுதியில் அவர்களுக்கு அவசியமான பாதுகாப்பு கொடுப்பது அரசியல் நீதி அல்லவா? இதை இலங்கை அரசாங்கம் மறந்தது ஏன்? இது நியாயமா? இது தர்மமா? இது பொறுக்குமா?
தர்மத்தின் பெயரால், சட்டத்தின் பெயரால், குடியரசு, ஜனநாயகம் என்ற உயர் அரசியல் முறையின் பெயரால், பண்பாட்டின் பெயரால், இந்த மாபெரும் அநீதிக்குத் தீர்வு காண அறைகூவல் விடுக்கிறேன். பரிகாரம் -பிராயச்சித்தம் செய்யக் கோருகிறேன்.
இங்கே நாம் விடுக்கும் அறைகூவல் அனைவரது காதுகளிலும் விழவேண்டாமா? அனைவரது இல்லங்களிலும் எதிரொலிக்க வேண்டாமா? சுதந்திரம் நமக்கு உயிர் என்று சொல்லிக்கொடுத்தது சீவகசிந்தாமணி. உயிர் கொடுக்கும் தமிழரின் சுதந்திரம் பறிபோகக்கூடாது''
என்.டி.ராமராவ் தமிழில் பேசியபோது கரவொலி விண்ணைப் பிளந்தது.
பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஏ.பி.வாஜ்பாய் பேசியதாவது:
""இலங்கையிலே தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய துயரத்தையும் -அதன் காரணமாகத் தமிழர்கள் எல்லாம் கொண்டிருக்கும் வேதனையையும் மனதில் கொண்டு அவைகளில் பங்குகொள்வதற்கு இங்கே வந்திருக்கிறேன்.
இலங்கையிலே தமிழர்கள் படுகிற அவதி உங்களை மட்டுமல்ல, இந்தியாவையே பாதிக்கக்கூடிய பிரச்னையாகும். அந்தத் தமிழர்களின் அவதி நம்முடைய அவதி. அவர்களுடைய கஷ்டம் நம்முடைய கஷ்டம். அந்நாட்டுத் தமிழர்களுடைய ரத்தம் நம்முடைய ரத்தம். அவர்களுடைய உணர்வுகளோடு நாங்களும் ஒன்றுபட்டு இருக்கின்றோம் என்பதைக் காட்டிக்கொள்ள நாம் இங்கே கூடியிருக்கிறோம்.
தமிழ் மக்களைக் கஷ்டப்படுத்திக்கொண்டிருக்கும் ஜெயவர்த்தனாவிற்கு இந்த மாநாடு ஓர் எச்சரிக்கையாக விளங்க வேண்டும். இந்தக் கூட்டத்தைக் கண்டபிறகாவது மத்திய அரசு தனது மெத்தனப்போக்கைக் கைவிட வேண்டும். தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இந்தியா, இலங்கையிலே நடைபெறும் மனித வேட்டைகளைப் பார்த்துக்கொண்டு, சகித்துக்கொண்டிருக்காது என்பதை மெய்ப்பிக்க வேண்டும்''
கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் (எஸ்) பிரிவுத் தலைவர் உண்ணிக்கிருஷ்ணன் கூறியதாவது:
""இலங்கைத் தமிழர்கள் அங்கே போய் குடியேறியவர்கள் அல்ல. அவர்கள் அந்த மண்ணின் பூர்வீகக் குடிகள். அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஆனாலும் அவர்கள் தாங்கள் மானத்தோடு வாழ ஓர் இடம் வேண்டுமென்று கேட்கிறார்கள்.
இலங்கையிலே, தங்களுடைய மண்ணிலே, தங்களுடைய தனித்தன்மையைக் காப்பாற்றிக்கொள்ள அவர்கள் வாழவேண்டுமென்றுதான் கேட்கிறார்கள். அதிலே என்ன தவறு இருக்கமுடியும்?
பல லட்சக்கணக்கான தமிழ்மக்கள் மீது ஜெயவர்த்தனா ஒரு யுத்தப் பிரகடனமே செய்திருக்கின்றார். இலங்கையிலே தமிழர்களுக்கு நடக்கின்ற கொடுமை இங்கேயிருக்கக்கூடிய நமக்கும் ஆபத்து வரவிருக்கின்றது என்பதற்கான அறிகுறி.
ராஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமரானதிலிருந்து துரதிருஷ்டவசமாக இந்தியாவின் வெளிநாட்டுக்கொள்கையில் மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. தமிழர்களின் நிலைமையை, பிரச்னையைப் புரிந்துகொள்ள அவர் மறுக்கிறார். இலங்கைத் தமிழர்களே, தொடர்ந்து போராடுங்கள். இறுதி வெற்றி உங்களுக்கே''
அகாலிதளப் பிரதிநிதியான பல்வந்த்சிங் ராமுவாலியா எம்.பி. பேசியதிலிருந்து:
""இலங்கையில் போராடும் தமிழர்களின் வீரத்திற்கு என்னுடைய வணக்கம். இலங்கையில் காற்று உள்ளவரையிலும், நீர் உள்ள வரையிலும், நிலம் உள்ள வரையிலும் தமிழர்களின் கலாசாரம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்குத் தொடர்ந்து நீடிக்கும். ஆயிரம் ஜெயவர்த்தனாக்கள் வந்தாலும் அவர்கள் போவார்களே தவிர, அவர்களுடைய முயற்சியால் உங்களது கலாசாரத்தை, தனித்தன்மையை அழித்துவிட முடியாது. தமிழர்களே, உங்களுடைய போராட்டத்திற்கு எங்களது ஆதரவு என்றென்றும் உண்டு''
மாநாட்டில் டாக்டர் சுப்ரமணியன்சுவாமி பேசியது:
""இலங்கையில் தவித்துக்கொண்டிருக்கும் என் சகோதர சகோதரிகளுக்கு நான் கூறுகிறேன் -என் குரல் உங்களுக்குக் கேட்குமானால், நான் சொல்வதைக் கேளுங்கள் -கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். இந்தியா எப்போதும் உங்கள் பக்கம்தான். நாங்கள் விரைவில் உங்களுக்கு உதவ வருவோம். ஜெயவர்த்தனாவே கேளும். உமது முதுமைப் பருவத்தில் உமது மூளை மழுங்காமல் இருந்தால், உமது காதுகள் செவிடாகாமல் இருந்தால் கேளும். தமிழர்கள் தனியாக இல்ல. அவர்கள் பக்கம் 80 கோடி இந்தியர்கள் இருக்கின்றார்கள். தமிழர்களுக்கு நீர் செய்யும் கொடுமைகளுக்குப் பிரதியாகத் திரும்ப அனுபவிக்கும் நேரம் வந்தே தீரும்''
கர்நாடக அரசுக் கொறடா பெருமாள் பேசுகையில், ""இந்திய ஒருமைப்பாட்டில் ராஜீவ் காந்திக்கு அக்கறை இருக்குமானால் ஈழத்தமிழர் பிரச்னைக்கு மத்திய அரசு உடனடித் தீர்வு கண்டிட வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.
தெலுங்கு தேசக்கட்சி பொதுச்செயலாளர் உபேந்திரா எம்.பி. பேசுகையில், ""இலங்கைத் தமிழர் பிரச்னை உள்நாட்டுப் பிரச்னை என்று ராஜீவ் காந்தி சொல்வாரானால், நடுநிலை நாடுகள் மாநாட்டில் நமீபியா பிரச்னையை, பாலஸ்தீனப் பிரச்னையை அவர் எதற்காக எழுப்பினார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே போடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் அத்தனையும் கடைப்பிடிக்கப்படவில்லை.
இப்பொழுது சிதம்பரம் தலைமையில் சென்றிருக்கிற குழுவின் பேச்சுவார்த்தைகளும் எந்த முடிவுக்கும் கொண்டு வரபோவதில்லை. அப்படி முடிவிற்கு வந்தாலும் நிச்சயமாக அதனை ஜெயவர்த்தனா நிறைவேற்றப்போவதுமில்லை. கொடுத்த வாக்குறுதிகளை மீறுவது ஜெயவர்த்தனாவுக்கு வாடிக்கை'' என்றார்.
காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் அப்துல் ரஷீத் காபூலி எம்.பி. பேசும்போது, ""இலங்கைத் தமிழர் பிரச்னை -இங்கேயுள்ள தமிழர்கள் பிரச்னை மாத்திரமல்ல; இந்தியா பூராவும் இருக்கின்ற மக்கள் குமுறி எழவேண்டிய -கவலைக்குரிய, பிரச்னை என்பதால், இந்தப் பிரச்னையைத் தீர்க்க நாம் வழிகாண வேண்டும்...
இலங்கையில் தமிழர்கள் இனப் படுகொலைக்கு ஆளாக்கப்பட்டுக் கொன்று குவிக்கப்படுவதை இந்தியா உணர்ந்துகொள்ள வேண்டும். இந்தப் பிரச்னையை உடனடியாகத் தீர்ப்பதற்கு வழிவகைகளைக் கண்டாக வேண்டும்'' என்றும் அவர் குறிப்பிட்டார்.
திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி மாநாட்டில் பேசும்போது, ""எங்கள் தமிழர்கள் கொடுமைகளை அனுபவிக்கும்போது, இது ஏதோ தமிழ்நாட்டுப் பிரச்னை என்று பிரதமர் ராஜீவ் காந்தி இதுவரை சுட்டிக்காட்டி வந்தாலும் -தேசவிரோத சக்தி என்று சொன்னாலும் இப்போது வாஜ்பாய், பகுகுணா மற்றும் பல்வேறு தலைவர்கள் எங்களோடு குரல் கொடுக்கும்போது இனி என்ன சொல்ல முடியும்...
மத்திய அரசே இனிமேல் தயவுசெய்து செப்படி விளையாட்டுக்களையெல்லாம் விளையாட வேண்டாம். எங்கள் இனம் அழிக்கப்படுவதை நாங்கள் ஒருக்காலும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இல்லாவிட்டால் அந்த முயற்சியில் நாங்களும் அழிந்துபோகத் தயாராகிவிட்டோம்'' என்று குறிப்பிட்டார்.
மாநாட்டில் வரவேற்புரை நிகழ்த்திய ப.நெடுமாறன் பேசுகையில், ""இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு ஓர் அகில இந்திய வடிவம் கொடுக்கவும், இந்தியா முழுவதிலுமுள்ள அனைவரின் ஆதரவையும் இப்பிரச்னைக்குத் திரட்டவும், இது வெறும் தமிழர் பிரச்னை அல்ல; இந்தியாவின் தேசிய பிரச்னைகளில் ஒன்று என்பதை எடுத்துக்காட்டவும் இம்மாநாடு நடத்தப்படுகிறது...
இந்திய அரசின் முயற்சியால் 1985-ஆம் ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த உடன்பாடு ஒரு மோசடி நடவடிக்கையாக்கப்பட்டிருப்பதை நான் நேரில் கண்டேன். போர் நிறுத்த உடன்பாடு அமலில் இருந்ததாகச் சொல்லப்பட்ட மூன்று மாத காலத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டார்கள். லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்கள் சொந்த நாட்டில் வாழமுடியாமல் இந்தியாவில் இரண்டு லட்சம் பேரும், மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களும் அகதிகளாகச் சிதறிக் கிடக்கிறார்கள்... இலங்கைத் தமிழர்களின் பிரச்னையை இந்தியாவின் தேசியப் பிரச்னையாகக் கருதி, உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழர் பகுதிகளில் நேரில் சென்று 23 நாள்கள் சுற்றிப்பார்த்து அறிந்து வந்து சொல்கிறேன். அழிவின் விளிம்பில் நிற்கும் அந்த மக்களின் ஒரே நம்பிக்கை இந்தியாதான். அவர்களை அழிவிலிருந்து காப்பாற்றமுடியும் -காப்பாற்ற வேண்டும்'' என்றார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் ஏ.கே.ஏ. அப்துல் சமது பேசும்போது, ""அந்த நாட்டில் ஒரு சமஷ்டி அரசியல் இருக்கவேண்டும் என்றுதான் தமிழ் மக்கள் ஆசைப்பட்டார்கள். ஆனாலும் அவர்களது கோரிக்கை புறக்கணிக்கப்பட்ட காரணத்தினால் சிங்களவரோடு சேர்ந்து வாழ முடியாததினாலேயே, இலங்கைத் தமிழர்கள் பிரிந்து வாழ்கிறோம் என்று சொல்கிற நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு உரிமைகள் முறையாக அளிக்கப்பட வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.
77: சார்க் மாநாடும் விடுதலைப்புலிகளின் ஆயுதப் பறிப்பும்!
உண்மையில் "விடுதலைப் புலிகள்' என்பது பிரபாகரன் சார்ந்த இயக்கம் மட்டுமே. இலங்கையில் போராளிக்குழுக்கள் பல இருப்பினும், தமிழகப் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களைப் பொறுத்து அவையனைத்துமே "போராளி' என்பதைக் குறிக்க, "விடுதலைப் புலிகள்' என்றே குறிப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தன.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை மட்டும்தான் முதல்வர் எம்.ஜி.ஆர். வெளிப்படையாக ஆதரித்தார். ஏனைய போராளிக்குழுக்களால் ஏற்பட்ட பிரச்னைகளும், பொதுமக்கள் மத்தியில் விடுதலைப் புலிகள் செய்ததாகத்தான் கருதப்பட்டன. அதனால் விடுதலைப் புலிகளை ஆதரித்த முதல்வர் எம்.ஜி.ஆர். நிர்வாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பல சிக்கல்களையும் பிரச்னைகளையும் சந்திக்க நேர்ந்தது.
1986-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி தீபாவளியன்று சென்னை சூளைமேட்டிலும், தஞ்சை ஒரத்தநாட்டிலும் நடைபெற்ற இருவேறு சம்பவங்கள் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தின.
சூளைமேட்டில் ஆட்டோ ஓட்டுநருக்கும், ஒரு போராளிக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்தப் போராளி தான் தங்கியிருந்த இடத்திலிருந்து மேலும் சிலருடன் வெளிப்பட்டார். அவர் கையில் துப்பாக்கி இருந்தது. கூடியிருந்த கூட்டத்தை நோக்கி அதைப் பிரயோகிக்கவும் தமிழகத்தைச் சேர்ந்த முதுநிலைப் பட்டதாரி வாலிபர் ஒருவர் இறந்தார்.
இதனால் அந்தப் போராளியைக் கைது செய்ய நேர்ந்தது. அவர் பெயர் டக்ளஸ் தேவானந்தா. அப்போது அவர் ஈபிஆர்எல்எஃப் அமைப்பைச் சேர்ந்தவராக இருந்தார். பின்னர் ஈ.பி.டி.பி. என தனி இயக்கம் கண்டு இலங்கை அரசில் அவரும் தற்போது ஓர் அங்கமாக உள்ளார். என்றாலும் அவரைப் பற்றிய செய்தி வெளியாகையில் "விடுதலைப்புலி சுட்டதில் ஒருவர் மரணம்' என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.
அதேநாளில் ஒரத்தநாட்டில் "பிளாட்' இயக்கத்தைச் சேர்ந்த இருவர், குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறு செய்ததால் அவர்கள் பேரிலும் நடவடிக்கை எடுக்க நேர்ந்தது. இந்தச் செய்தியும் விடுதலைப்புலி குடிபோதையில் கலாட்டா என்றுதான் வெளியாயிற்று.
மேற்கண்ட இரு சம்பவங்களும் தமிழின விரோதிகளின் சதியால் நடந்த சம்பவங்களே! இச்சம்பவங்களில் கைதானவர்கள் விரைவிலேயே விடுதலையானார்கள். இதற்கு மத்திய உளவுப் பிரிவைச் சேர்ந்த, தமிழகத்தில் இருந்த, உயர் அதிகாரி ஒருவர் கொடுத்த நெருக்கடியே காரணம் என்றும் தகவல்கள் வெளியாயின. இந்த உயர் அதிகாரி ஏன் நெருக்குதல் கொடுக்க வேண்டும் என்பது புதிராக இருந்தது!
இந்த இரு சம்பவங்களின் காரணமாக, 3.11.1986 அன்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன், ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் - இருவரும் சென்னைக் கோட்டையில் முதலமைச்சர் எம்.ஜி.ஆரைச் சந்தித்து, ஈழப் போராட்டத்தைக் களங்கப்படுத்தும் "போலி இயக்கங்களின்' மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்கள்.
தொடர்ந்து, பெங்களூரில் நடைபெற இருந்த தெற்காசிய மாநாட்டுக்கு வரும் ஜெயவர்த்தனாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவிருந்த பிரதமர் ராஜீவ் காந்திக்கு சில குறிப்புகள் அடங்கிய மனுவினையும் அளித்தனர்.
இதேநேரத்தில், முதலமைச்சர் எம்.ஜி.ஆரை புது தில்லி வருமாறு மத்திய அரசு அழைத்திருந்தது. அதனையொட்டி (7.11.1986) அவர் தில்லி சென்றிருந்தபோது போராளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. 15.11.1986-இல் நடைபெற இருக்கும் சார்க் மாநாட்டில் இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா கலந்துகொள்ள இருப்பதால், போராளிகளால் அவருக்கு எந்தவிதப் பிரச்னையும் வரக்கூடாது என்றும் சொல்லப்பட்டது.
ஏற்கெனவே சென்னை விமான நிலையத்தில் ஏர் லங்கா விமானத்துக்கு வைக்கப்பட இருந்த "பார்சல் வடிவிலான' வெடிகுண்டை, வேறு ஏதோ பொருள் என்று ஒதுக்கி வைத்திருந்தாலும், குண்டை வைத்த பானாகொடை மகேசன் குழுவைச் சேர்ந்த ஒரு போராளி தொலைபேசியில் விடுத்த எச்சரிக்கையைச் சட்டை செய்யாமல் இருந்த காரணத்தாலும் குண்டு வெடித்தது. அதில் 21 பேர் இறந்தார்கள்.
இந்தச் சம்பவமும் சென்னை சூளைமேடு, தஞ்சை-ஒரத்தநாடு உள்ளிட்ட சம்பவங்களும் அண்மையில் நடைபெற்றிருந்த காரணத்தால், இவ்வியக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க, டிஜிபி மோகன்தாசுக்கு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உத்தரவிட்டாரே தவிர, விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கும்படி கூறவில்லை.
ஆனால், டிஜிபி மோகன்தாசோ, விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுத்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்திடமிருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தார். தொடர்ந்து பிரபாகரனை வீட்டுக் காவலிலும் வைத்தார். இந்தச் சம்பவங்கள் வீடியோவாக எடுக்கப்பட்டு, அந்தக் காட்சி இலங்கை ரூபவாகினியிலும் உடனடியாக ஒளிபரப்பப்பட்டது.
இந்தச் செய்தி, தமிழகப் பத்திரிகைகளிலும் வெளி வந்தது. இதனைக் கண்ட எம்.ஜி.ஆருக்கு டிஜிபி மோகன்தாஸ் மீது சந்தேகம் எழுந்தது. தனக்கு நேர்ந்த உடல்நிலையைப் பயன்படுத்தி மோகன்தாஸ் "மற்றவர்களுக்கு செவி சாய்க்க' ஆரம்பித்து விட்டாரோ என்கிற ஐயப்பாடு அவருக்கு எழுந்தது.
சார்க் மாநாட்டுக்கு இடையில், ஜெயவர்த்தனாவுடன் இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிட்டிருந்தபடியால் எம்.ஜி.ஆரும் பெங்களூருக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இந்தப் பிரச்னையில் தனக்கு உதவியாகப் பிரபாகரனையும் பெங்களூர் வரவேண்டும் என்றும் அவர்களை அழைக்கும்படியும் மத்திய அரசை அவர் வலியுறுத்தினார்.
15.11.1986 அன்று சார்க் மாநாடு தொடங்கியது. ராஜீவ் காந்தியும் - ஜெயவர்த்தனாவும் சந்தித்து இலங்கைப் பிரச்னை குறித்து விவாதித்தார்கள். ராஜீவ் காந்தி எம்.ஜி.ஆர். கருத்தையும் கேட்டார். "இலங்கையில் வலிமையான இயக்கம் விடுதலைப் புலிகள்தான். களத்தில் நின்று போராடுவது அந்த அமைப்புதான். அவர்களின் கருத்தைக் கேட்பது நல்லது' என்றார் எம்.ஜி.ஆர்.
இதன்பேரில் மத்திய அரசு விடுதலைப் புலிகள் இயக்கத்தை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. பிரபாகரன், அன்டன் பாலசிங்கம், திலகர் ஆகியோர் தனி விமானத்தில் பெங்களூர் சென்றனர். சற்றும் எதிர்பாராத இந்தத் திருப்பம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. குறிப்பாக, மறுநாள் பத்திரிகைகள், இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவிக்கும் ஜெயவர்த்தனாவை எம்.ஜி.ஆருடன் பிரபாகரனும் மற்ற தலைவர்களும், சந்தித்ததாகச் செய்தி வெளியிட்டன.
தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய டி.ஜி.பி. மோகன்தாசுக்கு முதல்வர் எம்.ஜி.ஆரின் முடிவு அதிர்ச்சி வைத்தியமாக அமைந்தது.
78: பிரபாகரனின் பட்டினிப் போர்!
சார்க் மாநாட்டின்போது விடுதலைப் புலிகளையும் கலந்தாலோசிக்க வைத்த எம்.ஜி.ஆரின் சமயோஜிதம், போராளிகள் மற்றும் இலங்கைத் தமிழ் மக்களின் நலனில் ஆர்வம் காட்டுபவர்களின் பாராட்டைப் பெற்றது என்றாலும், ஒரு சிலரால் கடுமையாக விமர்சிக்கவும் செய்யப்பட்டது. 18.11.1986 அன்று சட்டமன்றத்திலும் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது முதல்வருக்காக, அன்றைய உணவு அமைச்சராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் இதுகுறித்து விளக்குகிறார்.
"இந்தியப் பிரதமர் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது, பிரதமருக்குத் தேவையான, அவர் விரும்புகிற காரியங்களில் கலந்து கொள்வதற்குத்தான் நேற்றும் அதன் முன்தினமும் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அங்கே இருந்தார்கள். பிரதமரை இரண்டு முறை முதலமைச்சர் சந்தித்தார்கள். அப்போது போராடுகிற இலங்கைத் தமிழர்களுடைய உணர்வுகளையும், இங்கே உள்ள தமிழ் மக்களுடைய உணர்வுகளையும் எடுத்துச் சொல்கிற அளவுக்கு, அந்தத் தீர்வுக்கு பிரதமருக்கு உறுதுணையாக இருந்தார்கள். இந்தியப் பிரதமரோடு நாம் பேசும்போது, நமக்குத் துணையாக போராளிகள் இருந்தார்கள். நாங்கள் ஸ்ரீலங்கா அரசைச் சந்தித்ததாகவோ மற்றும் போராளிகள் ஸ்ரீலங்கா அரசைச் சந்தித்ததாகவோ வந்த செய்திகள் சரியானது அல்ல' என்றார்.
இலங்கைத் தமிழர் பிரச்னையைப் பொறுத்தவரை, சோதனைகள் சூழ்ந்த நேரத்திலும் சவால்களை எதிர்கொண்டபோதும் எம்.ஜி.ஆர். தனது கொள்கையை விட்டுக்கொடுத்து யாருக்கும் அடிபணிந்ததில்லை.
அதே நேரத்தில், "விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவரை வீட்டுக் காவலில் வைக்கவும், ஆயுதப் பறிப்புக்கும் மத்திய அரசு உத்தரவிடவில்லை' என்று அப்போதைய பாதுகாப்பு இணையமைச்சர் ப.சிதம்பரம் பேட்டியளித்தார். அப்படியானால் அந்த உத்தரவு யாரால் பிறப்பிக்கப்பட்டது என்று பத்திரிகைகளில் கேள்வி எழுப்பப்பட்டது.
எம்.ஜி.ஆர். - பிரபாகரன் இடையே பிளவை ஏற்படுத்தும் ஒரு முயற்சியை டிஜிபி மோகன்தாஸ் மேற்கொண்டதால் ஏற்பட்ட இந்தப் பிரச்னைக்கு யார் மீதும் பழிபோடாமல் எவ்வளவோ சிக்கல்களுக்கும் மத்தியில் ஆயுதப் பறிப்புக்கான முழுப் பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டார் முதல்வர் எம்.ஜி.ஆர்.
பிரபாகரன், இதற்கிடையில் தன்னிடம் பறித்த ஆயுதங்கள் மற்றும் தகவல் தொடர்புக் கருவிகளைத் திரும்ப ஒப்படைக்கக் கோரி 22.11.1986 அன்று சாகும்வரை தண்ணீர் கூட அருந்தாத உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
இதன் காரணமாகத் தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டது. மத்திய அரசு கூறியதாக வானொலி, தொலைக்காட்சிகளில், "விடுதலைப் புலிகளிடமிருந்து ஆயுதங்கள் - தகவல் தொடர்புக் கருவிகள் பறிக்கப்பட்டது இந்திய அரசின் உள்துறைக்குத் தெரியாது. இது அதிர்ச்சியாக உள்ளது' என்று செய்தி வெளியானது. இதுவும் மறைமுகமாக எம்.ஜி.ஆர். மீது பழிசுமத்துவதாக ஆயிற்று.
பிரபாகரனின் பட்டினிப் போர் இரண்டாவது நாளாக தொடர, எம்.ஜி.ஆர். தனது அதிரடி நடவடிக்கையாக, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனிடம் பறிக்கப்பட்ட ஆயுதங்களை உடனடியாக ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், தனக்குத் துரோகம் இழைத்த டிஜிபி மோகன்தாசை, காவல் துறை தலைமை இயக்குநர் பதவியிலிருந்து நீக்கி, காவலர் வீட்டு வசதி வாரியத்திற்கு அவரைப் பணி மாற்றம் செய்து உத்தரவிட்டார். (ஆதாரம்: எம்.ஜி.ஆரும் ஈழத் தமிழரும் - வே. தங்கநேயன்).
இதே சம்பவத்தை பழ.நெடுமாறன் தனது "பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் (1988)' என்கிற நூலில் எழுதும்போது வேறொரு தகவலைத் தருகிறார். அது வருமாறு: ""பிரபாகரன் பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டார். வடக்கு மாநிலத்தின் முதலமைச்சர் பதவியை இப்போதைக்கு ஏற்றுக்கொண்டு சிங்கள அரசுடன் ஒரு உடன்பாட்டிற்குப் பிரபாகரன் ஒப்புக்கொண்டால் பின்னர் அவருக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்வதாக இந்திய அரசின் சார்பில் ஆசை வார்த்தை காட்டப்பட்டது. இதில் எப்படியும் பிரபாகரனை ஒப்புக்கொள்ள வைத்துவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் இந்திய அரசு செயல்பட்டது'' என்று குறிப்பிட்டுள்ளார் அவர்.
""தெற்காசிய மாநாடு முடிந்து தனது நாட்டிற்குப் புறப்படவிருந்த ஜெயவர்த்தனாவை 3 மணி நேரம் தாமதிக்கும்படி பிரதமர் ராஜீவ் காந்தி வேண்டிக் கொண்டார். அவரும் தனது பயணத்தை ஒத்தி வைத்துவிட்டு அங்கு தங்கினார். இந்த 3 மணி நேரமும் பிரபாகரனுக்குக் கடும் சோதனையாக இருந்தது. தனது லட்சியத்தை எள்ளளவும் விட்டுக் கொடுக்க பிரபாகரன் தயாராக இல்லை. முதலமைச்சர் எம்.ஜி.ஆர். வற்புறுத்தியும் அவர் இணங்கவில்லை'' என்றும் குறிப்பிட்டிருக்கிறார் பழ.நெடுமாறன்.
பெங்களூர் சார்க் மாநாட்டின்போது, இலங்கை அரசு கொடுத்த திட்டத்தையொட்டி தமிழர் விடுதலைக் கூட்டணியால் அளிக்கப்பட்டிருந்த பதில்களும் பரிசீலிக்கப்பட்டன. எல்லாம் முடிந்த நிலையில் இலங்கை அரசு, வடக்கு-கிழக்கு மாகாணங்களை இணைக்கும் கோரிக்கையைக் கிடப்பில் போட மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு மத்தியில் திருகோணமலையை சிங்களர் மாவட்டமாக்கும் திட்டமொன்றை முன் வைத்தது. இத்திட்டத்தைத் தமிழர்கள் முற்றாக நிராகரித்தார்கள்.
இரு இந்திய அமைச்சர்கள் குழுவினரின் முன் இலங்கை அரசால் (19-12-1986) வைக்கப்பட்ட தீர்வில் (அ) அம்பாறையைத் தவிர்த்து கிழக்கு மாகாணம் அமைத்தல் (ஆ) கிழக்கு மாகாணத்துக்கு மாகாணசபை நிறுவுதல் (இ) வடக்கு மாகாணத்துக்கும் கிழக்கு மாகாணத்துக்கும் நிறுவனரீதியாலான இணைப்பு (ஈ) வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் பூர்வீகமாக வாழ்கின்ற மக்களின் கருத்து அறிதல் (உ) ஜனாதிபதியால் நியமிக்கப்படும் துணை ஜனாதிபதி பதவியை உருவாக்கி, அதில் சிறுபான்மையினரை அமர்த்துதல் (ஊ) கிழக்கு மாகாணத்திலுள்ள ஐந்து முஸ்லிம் எம்.பி.க்கள், இந்தியா வந்து, இந்தியப் பிரதிநிதியின் முன்னிலையில் தமிழ்த் தலைவர்களுடன் தொடர்புள்ள விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துதல் -ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தன.
இந்த "ஊ' பகுதி அம்சம் குறித்து, இந்தியப் பேச்சுவார்த்தைக் குழு புதுதில்லி திரும்புவதற்கு முன்பாகவே தங்களின் நிராகரிப்பை, கிழக்குப் பகுதி முஸ்லிம்கள் தெரிவித்தனர். இலங்கையும் இத் தீர்வில் இருந்து உடனடியாகப் பின்வாங்கியது. தமிழர் அமைப்புகளுக்கு இத் தீர்வு பற்றிய தகவல் எதுவும் இந்திய-இலங்கைத் தரப்பில் தெரிவிக்கப்படவே இல்லை. (ஆதாரம்: ஐசஈஐஅ நதஐகஅசஓஅ ஊஐஅநஇஞ க்ஷஹ் தஹத்ங்ள்ட் ஓட்ஹக்ண்ஹழ்-டஹஞ்ங் 160-163).
பேச்சு வார்த்தைகளால் இனி பயனிருக்காது என்பது போராளிக் குழுக்களுக்கும், எம்.ஜி.ஆர். தலைமையிலான தமிழக அரசுக்கும் தெளிவாகவே தெரிந்து விட்டது!
79: எம்.ஜி.ஆரின் துணிவும், தெளிவும்!
ஈழத் தமிழர்களுக்காக எம்.ஜி.ஆர். நடத்திய பேரணி ராணுவ நடவடிக்கை மூலமே தீர்வு என்கிற கோட்பாட்டில் நம்பிக்கை வைத்து ஜெயவர்த்தனா செயல்படுவதன் மூலம் இனி பேச்சுவார்த்தைகள் பயனளிக்காது என்பது உறுதியாயிற்று. இதன் காரணமாக தமிழர்கள் பகுதியில் பயம் தொற்றிக் கொண்டது.
போராளிகள் இயக்கங்களில் களத்தில் நிற்பவர்கள் என்று அடையாளம் காணப்பட்ட விடுதலைப் புலிகள், ஈரோஸ் ஆகிய இரண்டு அமைப்புகளையும் பலப்படுத்துவது என்றும், தமிழக அரசின் நிலையை தெளிவுபடுத்துவது என்றும் எம்.ஜி.ஆர். முடிவுக்கு வந்தார். விடுதலைப் புலிகளுக்கு 3 கோடி ரூபாயும், ஈரோஸ் அமைப்புக்கு ரூ.1 கோடி ரூபாயும் வழங்குவது என்றும் முடிவு செய்து அவ்வமைப்புகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அங்கீகரிப்பது மட்டுமல்ல, அந்த அமைப்பிலுள்ள பெண் வீராங்கனைகளையும் சட்டமன்றத்தில் பாராட்டியது முக்கிய வரலாற்று நிகழ்வாகும். எந்தெந்த விஷயங்களை சட்டமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்பதைக் கிட்டத்தட்ட ஒருமணி நேரம் வரை ஆலோசித்து முடிவு செய்து, அவ் விளக்கத்தை முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சார்பில், பண்ருட்டி ராமச்சந்திரன் அளிக்க உத்தரவிட்டார்.
தமிழக சட்டமன்றப் பேரவையில் 27.4.1987 அன்று பண்ருட்டி ராமச்சந்திரன் நிகழ்த்திய உரை வருமாறு:
""இலங்கைத் தமிழர்கள் பிரச்னை குறித்து இலங்கை அரசும் அவர்களோடு நெருங்கிய நண்பர்களும் அதை அறிந்தோ அறியாமலோ, அதேபோல இந்திய திருநாட்டிலேயுள்ள சில பத்திரிகைகளும், சில நேரங்களில் தொலைக்காட்சிகளும், வானொலிகளும் கூட சில சம்பவங்களைச் சரியான முறையில் நாட்டு மக்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதில்லை. ஆகவே, அந்த பனிப்படலத்தை நீக்கி, உண்மை நிலையை விளக்க வேண்டுவது இந்த அரசின் தலையாய கடமையாகும்.
இலங்கை அரசை எடுத்துக்கொண்டால் கடந்த கால அனுபவம் என்னவென்றால், இன வெறியையும், மத வெறியையும், மொழி வெறியையும் மையமாக வைத்து செயல்படுகின்ற ஓர் அரசைத்தான் நாம் இலங்கையில் பார்க்கிறோம். இதற்கு ஆதாரங்களைத் தேடி அலைய வேண்டிய அவசியம் நிச்சயமாக இல்லை.
சில தினங்களுக்கு முன் இலங்கை பாராளுமன்றத்தில் பேசிய அந்த நாட்டின் பிரதம அமைச்சர் பிரேமதாசா, அண்மையில் திருகோணமலையிலும், கொழும்புவிலும் நடந்து விட்ட வெடிகுண்டு சம்பவங்கள் பற்றி பேசினார். அவர் பேசியதில் தவறு இல்லை. ஆனால் அவர் பேசியபோது இலங்கை அரசினுடைய உண்மையான சொரூபம், (ட்ரு கலர்ஸ்) என்ன என்பதை நாமெல்லாம் தெளிவாகப் புரிந்து கொள்ளும் அளவுக்கு பேசியிருக்கிறார். அவர் பேசுகின்ற பொழுது சொன்னது:
‘‘ரட்ங்ய் ற்ட்ங் ப்ண்ஸ்ங்ள் ர்ச் ர்ன்ழ் ல்ங்ர்ல்ப்ங் ஹழ்ங் ண்ய் க்ஹய்ஞ்ங்ழ், ஜ்ங் ஹழ்ங் ய்ர்ற் ல்ழ்ங்ல்ஹழ்ங்க் ற்ர் ஞ்ர் ண்ய் ச்ர்ழ் ஹ ல்ர்ப்ண்ற்ண்ஸ்ரீஹப் ள்ர்ப்ன்ற்ண்ர்ய். எமது மக்கள் உயிருக்கு ஆபத்து என்றால் அரசியல் தீர்வுக்கு நாங்கள் தயாராக இல்லை'' இந்த "எமது மக்கள்' என்றால் யார்? இதுவரையில் ராணுவத்தினாலும், காவல் துறையினராலும் வடபுலத்திலேயும், கிழக்கு மாகாணத்திலேயும் கொல்லப்பட்ட தமிழர்கள் அல்ல. திருகோணமலையிலே, கொழும்புவிலே நடந்த வெடிகுண்டு சம்பவங்களின் விளைவாக சிங்களவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்றவுடன் ஒரு நாட்டின் அரசு, அந்த அரசின் சார்பிலே பேசுகின்ற பிரதமர் என்ன சொல்லுகின்றார் என்றால், "எமது மக்கள்' என்று.
"எமது மக்கள்' என்றால் யார்? எமது மக்கள் என்பது சிங்களவர்கள் என்றால் ஏனைய தமிழ் மக்கள் யார்? அவர்கள் அந்த நாட்டு மக்கள் அல்லவா? மண்ணின் மைந்தர்கள் அல்லவா?
மேலும் அவர் இந்தியாவைப் பற்றிச் சொல்லும்பொழுது க்ஷங்ஸ்ரீஹன்ள்ங் ஜ்ங் ஜ்ஹய்ற் ச்ழ்ண்ங்ய்க்ள்ட்ண்ல் ஜ்ண்ற்ட் ஐய்க்ண்ஹ ஜ்ங் ஸ்ரீஹய்ய்ர்ற் க்ஷங்ற்ழ்ஹஹ் ர்ன்ழ் ல்ங்ர்ல்ப்ங்(இந்தியாவோடு நட்புறவு வேண்டுமென்பதற்காக எமது மக்களை நாங்கள் கைவிடமாட்டோம்) என்று கூறுகிறார். ஆகவே அவர் சிங்களவர்களின் பிரதமராக இருக்கிறாரே தவிர, சிங்களவர்களின் பிரதிநிதியாக இருக்கிறாரே தவிர, இலங்கையிலே உள்ள அனைத்து மக்களினுடைய பிரதமராக இருக்கிறாரா என்பதை நாம் தயவுசெய்து எண்ணிப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
எப்பொழுது ஒற்றுமை வரும்? எல்லோரும் ஒன்று என்கின்ற எண்ணம் ஏற்படுகின்றபொழுது ஒற்றுமை வரும். அவர்களே ஒன்றாக நினைக்காமல் தமிழ் மக்களை வேறாக நினைக்கின்ற பொழுது நீங்களும் நானும் சேர்ந்தா இலங்கையில் ஒற்றுமையை உருவாக்கப் போகிறோம்? இதை இலங்கையிலே இருக்கின்ற சிங்கள மக்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அந்த மக்களின் சார்பிலே நடைபெறுகிற ஒரு அரசின் சார்பில் ஜெயவர்த்தனா இன்றைக்குப் பேசுகிறபொழுது ரங் ஹழ்ங் ச்ர்ழ் ல்ங்ஹஸ்ரீங். ரங் ஹழ்ங் ச்ர்ழ் ற்ஹப்ந்ள் (நாங்கள் சமாதானத்தை விரும்புகிறோம். பேச்சுவார்த்தைக்குத் தயாராய் இருக்கிறோம்) என்று கூறுகிறார். ஆனால் இதே ஜெயவர்த்தனா 1983-ஆம் ஆண்டு இனப்படுகொலை நடைபெற்றபொழுது, மக்களுக்கு விடுத்த அறிக்கையிலே அவர் பேசுகிறபொழுது சிங்கள மக்களை எண்ணித்தான் "எமது மக்கள் ஆபத்துக்கு உள்ளானால் நான் சும்மா இருக்க முடியுமா? எமது மக்கள் சும்மா இருப்பார்களா? என்று கேட்டார்.
இவர்கள் ‘‘ஞன்ழ் டங்ர்ல்ப்ங்’’ எமது மக்கள் என்கின்றார்களே. அப்படியானால் ஏனைய மக்கள் யார்? அவர்கள் இலங்கைப் பிரஜைகள் அல்லவா? (பட்ங்ய் ஜ்ட்ர் ஹழ்ங் ற்ட்ங் ர்ற்ட்ங்ழ் ல்ங்ர்ல்ப்ங்?) இந்த உள்ளுணர்வு அவர்களுக்கு இருக்கின்றவரை அவர்கள் பேச்சுவார்த்தையிலே ஈடுபடுகிறோம் என்று சொல்வதை எந்த அளவிற்கு நாம் ஏற்றுக்கொள்ள முடியும்.
பிரேமதாசா இந்தியாவைப் பற்றி குறிப்பிடுகிறபொழுது, "எங்களுடைய எதிரிகளை அவர்கள் தொடர்ந்து ஆதரிப்பார்களானால் நாங்கள் வேறுபுறத்திற்குத் திரும்புவோம்' என்று சொல்கிறார்.
ஆகவே, அங்குள்ள தமிழ் மக்களை அங்குள்ள குடிமக்களாக அவர்கள் கருதவில்லை. அந்த நாட்டு மக்களாக எண்ணவில்லை. அவர்கள் உள்ளக்கிடக்கையை அவர்களாகவே ஆத்திரம் வந்தவுடன் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அந்த உள்ளத்தில் தமிழ் மக்களை அந்நிய மக்களாகப் பகைவர்களாகக் கருதுகிறார்களே தவிர வேறு அல்ல.
அப்படிக் கருதுகின்ற வரையிலும் எப்படி அந்த நாட்டிலே ஒற்றுமை வளரும்? எப்படி இறையாண்மை இருக்கும்? அதை நாம் போய் எப்படி உருவாக்க முடியும் என்பது நிச்சயமாக இந்த அரசுக்குத் தெரியவில்லை.
அந்நாட்டுப் பிரதமர் பிரேமதாசா மேலும் கூறுகிறார். ""அரசியல் தீர்வுக்கு நாங்கள் தயார் இல்லை. அரசியல் தீர்வு வேண்டுமென்று எந்த நண்பராவது சொன்னால் அந்த நண்பர்தான் எங்களது மிகப் பெரிய எதிரி'' என்கிறார். அரசியல் தீர்வு என்று சொல்கின்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் ரர்ழ்ள்ற் ங்ய்ங்ம்ஹ் அல்ல; ஊண்ழ்ள்ற் ங்ய்ங்ம்ஹ் அல்ல; க்ஷண்ஞ்ஞ்ங்ள்ற் ங்ய்ங்ம்ஹ் என்கிற உணர்வு வருகிறது என்றால் இந்திய அரசையும், நம்மையும் பற்றி அவர்கள் எத்தகைய மனப் போக்கைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவேதான் அங்கே இலங்கை மக்களின் சார்பிலே நடைபெறுகின்ற அரசினுடைய இர்ய்ற்ங்ய்ற் ஹய்க் இட்ஹழ்ஹஸ்ரீற்ங்ழ்அதைப் பொறுத்துத்தான் பேச்சுவார்த்தையுடைய தன்மைகள் அமையும். பேச்சுவார்த்தையே கூடாது என்பது நமது நோக்கம் அல்ல.
ஆனால், இலங்கை அரசைப் பொறுத்தவரையில் பேச்சுவார்த்தையில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. பேச்சுவார்த்தையை அவர்கள் விரும்பவில்லை. பேச்சுவார்த்தையை அவர்கள் முகமூடியாகப் பயன்படுத்துகிறார்களே தவிர, உண்மையிலேயே அவர்கள் ராணுவத் தீர்விலேதான் மிகுந்த நம்பிக்கை வைத்து அதற்குத் திட்டமிட்டு செயல்படுகிறார்கள் என்பதுதான் நம்முடைய கணிப்பு, கருத்து.
அதை முதல்வர் பாரதப் பிரதமரிடமும் இந்திய அரசிடமும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம் பாரதப் பிரதமரைச் சந்தித்து முதல்வர் கடிதம் கொடுத்தபோதும் தெளிவாகச் சொன்னார்கள். பிரதமர் எடுத்த பல்வேறு முயற்சிகளைக் குறிப்பிட்டுக் காட்டிவிட்டு, நமது முதல்வர் கடிதத்தில் கூறுவதாவது:
""உங்களுடைய உண்மையான முயற்சிகளுக்கு மாறாக, இலங்கை அரசு அரசியல் தீர்வை விரும்பவில்லை. அதற்கு மாறாக ராணுவத் தீர்வுக்கு அவர்கள் சென்றுவிட்டார்கள் என்று நாங்கள் கருதுகிறோம் ஐய் ள்ல்ண்ற்ங் ர்ச் ஹ்ர்ன்ழ் ள்ண்ய்ஸ்ரீங்ழ்ங் ங்ச்ச்ர்ழ்ற்ள், ஜ்ங் ச்ங்ங்ப் ற்ட்ஹற் ஹப்ப் ர்ச் ஹ ள்ன்க்க்ங்ய்,ற்ட்ங் நழ்ண் கஹய்ந்ஹய் எர்ஸ்ங்ழ்ய்ம்ங்ய்ற் ட்ஹள் ள்ஜ்ண்ற்ஸ்ரீட்ங்க் ர்ஸ்ங்ழ் ற்ர் ம்ண்ப்ண்ற்ஹழ்ஹ் ர்ல்ற்ண்ர்ய் ண்ய்ள்ற்ங்ஹக் ர்ச் ஹழ்ழ்ண்ஸ்ண்ய்ஞ் ஹற் ஹ ல்ர்ப்ண்ற்ண்ஸ்ரீஹப் ள்ர்ப்ன்ற்ண்ர்ய்'' என்றார்.
அதோடு மட்டுமல்ல, சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணத்திலே இருந்தபோது நம்முடைய முதல்வர் பாரதப் பிரதமருக்கு அனுப்பிய தந்தியில் குறிப்பிட்டார்கள். 9-3-1987 அன்று கொடுத்த அந்தத் தந்தியில் எங்களுக்கு வருகின்ற தகவல்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. இலங்கை அரசானது ராணுவத் தீர்வை நடத்துவதற்கு முடிவு எடுத்து விட்டது என்றுதான் நாங்கள் கருதுகிறோம்.
‘‘பட்ங்ள்ங் ழ்ங்ல்ர்ழ்ற்ள் ர்ய்ப்ஹ் ஸ்ரீர்ய்ச்ண்ழ்ம் ர்ன்ழ் ச்ங்ஹழ் ற்ட்ஹற் ற்ட்ங் நழ்ண் கஹய்ந்ஹய் எர்ஸ்ங்ழ்ய்ம்ங்ய்ற் ட்ஹள் க்ங்ஸ்ரீண்க்ங்க் ற்ர் ச்ண்ய்க் ஹ ம்ண்ப்ண்ற்ஹழ்ஹ் ள்ர்ப்ன்ற்ண்ர்ய் ற்ர் ற்ட்ங் ங்ற்ட்ண்ய்ண்ஸ்ரீ ல்ழ்ர்க்ஷப்ங்ம் க்ஷஹ் ஹய்ய்ண்ட்ண்ப்ண்ஹற்ண்ய்ஞ் ற்ட்ங் பஹம்ண்ப்ள்.’’
அதனைத் தொடர்ந்து முதல்வர் எழுதிய கடிதத்தில்,
யாழ்ப்பாணம் பகுதியிலே இருக்கக் கூடிய அப்பாவி மக்கள் மீது இலங்கை அரசு முழு ராணுவத் தாக்குதலைத் தொடங்கியிருக்கிறது என்பதையும் சொல்லியிருக்கிறார்கள்.
மக்கள் மீது முப்படைகளையும் ஏவியிருக்கிறார்கள். ராணுவத்தின் மூலம் தாக்குதல் நடத்துகிறார்கள். விமானம் மூலம் குண்டு வீசுகிறார்கள். தமிழர்கள் தப்பித்து வெளியே செல்ல முடியாமல் கடல் வழியையும் தடை செய்கிறார்கள்.
""இலங்கை அரசியல் தீர்வுக்குப் போராடவில்லை. எங்கள் நாட்டின் ஒற்றுமையையும் இறையான்மையையும் பாதுகாக்கப் போராடுகிறோம். அமைதிக்குப் பிறகுதான் பேச்சுவார்த்தை'' என்று இலங்கைப் பிரதமர் பேசுகிறார்.
அமைதியை ஏற்படுத்தியபின்தான் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்றால் அமைதி எப்போது ஏற்படும்? நான் கேட்க விரும்புவதெல்லாம், இந்த அரசு கேட்பதெல்லாம் அமைதி என்றால் சுடுகாட்டு அமைதியா? என்பதுதான்.
80 : தமிழக அரசின் தைரியமான முடிவு!
முதல்வர் எம்.ஜி.ஆர் சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன் சட்டப் பேரவையில் நிகழ்த்திய உரையின் தொடர்ச்சி...
""இலங்கையில் நடப்பது சட்டத்தின் ஆட்சியல்ல, காட்டு தர்பார் (In Sri Lanka, there is no rule of law but only the law of jungle). ஆகவே, இலங்கை அரசினுடைய போக்கு, அது கையாளுகின்ற தன்மை, அதனுடைய பண்பு, அதனுடைய இயல்பு இவற்றை எல்லாம் பார்க்கிறபோது அவர்களுடைய பேச்சுவார்த்தையைப் பற்றியோ அல்லது அவர்கள் கையாளுகின்ற முறையைப் பற்றியோ கட்டாயம் தீர்க்கமாக சிந்தித்துத் தமிழ் மக்களுக்குச் சொல்ல நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
இன்னும் ஒரு வேடிக்கை என்னவென்றால், அந்த நாட்டின் பிரதமர் கூறுகின்றார். அவர்களுடைய நாட்டிலே உள்ள ஜனநாயகத்தை அழிப்பதற்கு முயலுகின்ற சில பிரிவினரை அழித்து, ஒழிப்பதற்கு உலகிலுள்ள அவர்களின் நண்பர் உதவி செய்ய வேண்டும் என்கிறார்.
இலங்கையில் ஜனநாயகம் என்று ஒன்று உண்டா? பாராளுமன்றத்திலே இருப்பவர்கள் மக்களைச் சந்தித்து தேர்ந்தெடுக்கப்படாமலேயே தங்களுடைய பாராளுமன்ற காலத்தை நீட்டிக் கொண்டார்களே. இதுதான் ஜனநாயகமா? அவ்வளவு சொல்வானேன்? ஜனநாயகம் என்பதே தமிழர்கள் வாழுகிற இலங்கையின் கிழக்குப் பகுதியிலும், வடக்குப் பகுதியிலும் எங்கே இருக்கிறது. இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து ஒன்று காவல் துறை ராஜ்யம், இல்லை என்றால் ராணுவ ராஜ்யம். அவர்கள் ராணுவத்தால் ஆட்சி செய்யப்படுகிறார்களே தவிர, எப்போதாவது சுதந்திரக் காற்றை சுவாசித்திருக்கிறார்களா? சுவாசிக்க அனுமதிக்கத்தான் செய்தார்களா?
ஒருவேளை சிங்களவர்களுக்கு வேண்டுமானால் ஜனநாயகம் இருக்கலாம். தமிழர்களைக் கொல்லுகிற ஜனநாயகமாக அது இருக்கலாம்.
போராட்டத்தில் முன்னிலையில் இருக்கக்கூடிய அந்த மக்களுக்கு வேண்டிய உதவிகளை, அந்த மக்களுக்கு வேண்டிய உற்சாகத்தையும் தருவதிலேதான். அந்த மக்கள் இத்தகைய போக்கை முறியடிப்பதற்கும், இலங்கை அரசின் முகமூடிகளை கிழித்து எறிவதற்கும் வாய்ப்பு இருக்குமே தவிர, நாம் இங்கே இருந்து கொண்டு அரசியல் தீர்வா, ராணுவத் தீர்வா என்று பேசுவது பயன் தராது. அரசியல் தீர்வுதான் காணவேண்டுமே தவிர ராணுவத் தீர்வு நிரந்தரமான தீர்வு ஆகாது.
விடுதலை இயக்கங்களின் வரலாற்றை படித்தவர்களுக்குத் தெரியும். விடுதலை உணர்வு கொண்டவர்கள் சிறுபான்மை மக்களானாலும் சரி, பெரும்பான்மை மக்களானாலும் சரி, எந்த பெரிய ஏகாதிபத்திய வல்லரசுகளானாலும் அவர்களை வீழ்த்த முடியாது என்பது உலக நாடுகளின் வரலாறு.
வேண்டுமானால் சில வெற்றிகள் அங்கும் இங்கும் கிடைக்கலாம். சில சண்டைகளில் வேண்டுமானால் வெற்றி பெறலாம். ஆனால் இறுதிப் போரில் வெற்றியடையப்போவது என்னவோ விடுதலைப் போராளிகள்தான்(ரஹழ் ஜ்ண்ப்ப் க்ஷங் ஜ்ர்ய் க்ஷஹ் ப்ண்க்ஷங்ழ்ஹற்ண்ர்ய் ச்ர்ழ்ஸ்ரீங்ள்). ஆகவே ஒரு இயக்கத்தின் மீது இரண்டு மூன்று குண்டுகள் போடுவதானாலும் 100, 200 பேர்களின் மீது தாக்குதல் நடத்தி கொன்றுவிட்டதனால் வெற்றி பெறலாம் என்று நினைத்தால் அது பகல் கனவாக முடியுமே தவிர வேறு அல்ல.
ராணுவத் தீர்வை மேற்கொண்ட நாடுகள் உலகத்தில் எப்படியெல்லாம் பிரிந்தன, என்ன வகையிலே சீர்குலைந்தன என்பதைத்தான் பார்க்க முடியுமே தவிர, நிச்சயமாக அவர்களுக்கு அதனால் பலன் விளைந்ததாக வரலாறு கிடையாது.
அப்படிப் பார்க்கிறபோது இன்றைக்கு இலங்கையிலே இருக்கிற தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பாக விடுதலைப் புலிகள் இயக்கம்-எல்.டி.டி.இ. அமைப்பினர் இருக்கிறார்கள். அவர்களுக்குத் துணையாக ஈரோஸ் இருக்கிறார்கள். மற்ற இயக்கங்கள் இல்லை என்று சொல்லவில்லை. இருக்கிறார்கள். அங்கே இருந்து அவர்களால் பணியாற்ற முடியவில்லை.
சிங்கள ராணுவத்திற்கு எதிராக அங்கே விடுதலைப் புலிகள்தான் தன்னந்தனியாக நின்று போராடி உயிர்த் தியாகம் செய்து வருகிறார்கள். சொல்வார்களே... கண்ணீரும் செந்நீரும் கொட்டி சுதந்திரப் பயிர்வளர்த்தார்கள் என்று அப்படி அவர்கள் வளர்க்கிறார்கள்.
பொதுவாக ஆண்கள் செந்நீரைச் சிந்துவார்கள், பெண்கள் கண்ணீரைச் சிந்துவார்கள். ஆனால் இலங்கை தமிழ் பகுதியைப் பொறுத்தவரைக்கும் பெண்களும் ஆண்களோடு சேர்ந்து செந்நீரைச் சிந்துகிறார்கள். ஆண்கள் ஆனாலும் சரி பெண்கள் ஆனாலும் சரி அத்தனை பேரும் சேர்ந்து இலங்கை அரசின் சர்வாதிகாரப் போக்கை, அந்த பாசிச போக்கை எதிர்த்து உயிர்த் தியாகம் செய்கிறார்கள். அவர்களை எல்லாம் நாம் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். அவர்களுக்கு உதவி செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம்.
ஜனவரி மாதத்திலிருந்து ஏற்பட்ட பொருளாதாரத் தடையின் காரணமாக நலிந்து, மெலிந்து, வாடி, வதங்கி, வாழ வழியற்று, வீட்டிலும் கூட இருக்க முடியாமல் வீதியிலே கூட நடமாட முடியாமல் காடுகளிலேயும் புதர்களிலேயும் மறைந்து வாழ்கின்ற லட்சோபலட்சம் ஏழைகளுக்கு அவர்களுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்க வேண்டிய மருந்துகள் கொடுக்கக்கூட வழி இல்லாத நிலைமை இருக்கிறது.
நம்முடைய தாய் உள்ளம்கொண்ட முதல்வர் அவர்கள், அந்த மக்களுக்கு மனிதாபிமானத்தோடு, மனித நேயத்தோடு நம்மால் ஆன உதவிகளை, அவர்களுக்கு வேண்டிய உணவு வகைகளை அல்லது மருந்துகள் மற்றவைகள் கொடுக்கும் வகையில் அங்கேயிருந்து ஓடி இங்கே வந்திருக்கக்கூடிய தமிழர்களுக்கும், அங்கேயே இருக்கிற தமிழர்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் பயன் தர முடியுமா என்று யோசித்துப் பார்த்தது. அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதிலே புரட்சித் தலைவர் அவர்கள் தனது தலையாய விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்.
இலங்கைத் தமிழர்களுக்காகப் பாடுபடுகின்ற இயக்கங்களுக்கு நாம் நம்முடைய ஆதரவையும் உதவியையும் செய்கிற அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகிற வகையிலும், இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் ஏற்கெனவே சுமார் ஐந்து கோடி ரூபாய் நிதியுதவியாக தந்திருக்கிறார்கள். புரட்சித் தலைவர் அவர்கள் அந்த ஐந்து கோடி ரூபாயிலிருந்து உடனடியாக நான்கு கோடி ரூபாயை பாதிக்கப்படுகிற அந்த மக்களுக்கு உணவு வகையிலும், உடுக்கிற உடை வகையிலும், மருந்து வகையிலும், மற்ற மற்ற தேவைகளிலும் உதவிட அந்த மக்களைக் காப்பாற்றுவதற்கு அரசு இன்றே உத்தரவு வழங்கவிருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அரசைப் பொறுத்தவரையிலும் புரட்சித் தலைவர் அவர்களைப் பொறுத்தவரையிலும் இன்றைக்கு அந்தத் தமிழ் மக்களுக்காக, இங்கே மட்டுமல்ல, அங்கேயும் போராடுகிற மக்களுக்காகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் என்னென்ன உதவிகளைச் செய்யவேண்டுமோ அதை இந்த அரசு செய்ய முன்வரும்'' (சட்டமன்றத்தில் 27-4-87).
எம்.ஜி.ஆர். சார்பில் நிகழ்த்தப்பட்ட அந்தச் சட்டப்பேரவை உரை இன்றளவும் ஈழத் தமிழர்தம் மனதில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்ட ஒரு சாசனமாகத் திகழ்கிறது.
81 : விடுதலைப் போராட்டத்தில் திருப்புமுனை
அன்றைய நிகழ்வுகளை பண்ருட்டி இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆரும் ஈழத் தமிழரும்-வே.தங்கநேயன்) நினைவு கூர்கிறார்.
""எம்.ஜி.ஆர்., பிரபாகரன் நட்புத்தான் பணம் கொடுக்க வைத்தது. நான்தான் கொடுத்தேன் நாலுகோடி. மூன்று கோடி எல்.டி.டி.க்கும் ஒரு கோடி ஈரோசுக்கும்.
""இந்த பணம் ஒரு நாள் அரசு ஊழியர்களிடம் இருந்து வசூல் செய்ததை எடுத்து கொடுத்தார். அப்ப வந்து தமிழர் பகுதியில், இலங்கை அரசு குண்டுமாரி பொழிந்தது. அங்ககுள்ள மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கணும்னா ராஜீவ்காந்தி முன்வரல. நீங்க கொடுக்கலனா பரவாயில்லை நாங்க பணம் கொடுக்கிறோம் என்றார் எம்.ஜி.ஆர். அந்த மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளட்டும் என்று சொல்லி கொடுத்தார். உடனே ராஜீவ்காந்தி அலறியடித்துக்கிட்டு இன்னொரு நாட்டுல போர்க்களம் நடத்துறத்துக்கு நம்ம நாட்டுல இருந்து பணம் கொடுத்தா என்ன ஆகிறது அந்த மாதிரி கொடுக்க கூடாது அப்படினு சொல்லி அலறியடிச்சுகிட்டு ஆளை அனுப்பிச்சாரு. அப்ப நாங்க சொன்னோம் மனிதாபிமான பணிகளுக்காக எல்.டி.டி.யியும் ஈரோசும் ஒரு அமைப்பு வைச்சிருக்காங்க அதுக்கு பணம் கொடுத்தோம்னு.
""அதாவது அன்று காலை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களைப் பார்க்கிறேன். "என்ன எல்லோரும் நம்மள கைவிட்டுடாங்க நாம ஏதாவது பண்ணணும்னாரு. அதோடு நம் ஆட்கள் சண்டை போடுவதற்கு ரெடியா இருக்காங்க, பணம் இல்ல ஆயுதம் வாங்குவதற்கு, பணம் கொடுத்திடுவோம் பாதுகாத்துக் கொள்ளட்டும்' என்றார். சரின்னு ஒத்துக்கிட்டு வீட்டில் இருந்து நேரேபோய் நாலுகோடி அறிவிச்சு பேசுகிறோம்.
""அப்ப என்ன முதலமைச்சர் சொல்கிறாருன்னா, இதனால ஆட்சி போனாலும் பரவாயில்லை. பணம் கொடுத்திடுவோம். அதாவது இந்திய அரசாங்கத்தை மீறி, அரசியல் சட்டத்தை மீறி, அந்நிய நாட்டு உறவுகளுக்கு பாதகமாக இலங்கையில் போராடுகின்ற விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி உதவி ஒரு அரசாங்கமே செய்யுதுன்னா, அது சட்டவிரோத நடவடிக்கை நம்ம ஆட்சியை கலைப்பாங்க. கலைச்சாக்கூட பரவாயில்லை. நம்ம வெளிய போயிரலாம்னு உறுதியாக இருந்தாங்க.''
எம்.ஜி.ஆர். அரசின் முடிவை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வரவேற்றதோடு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இது ஒரு "திருப்பு முனை' என்று கூறியது. "ஈரோஸ்' இயக்கமும் தனது வரவேற்பை தெரிவித்துக் கொண்டது.
நிதியுதவி வழங்கியதைக் கேட்ட ஜெயவர்த்தனா கொதித்து எழுந்து ""இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் உள்ள தமிழர்களுக்கு உணவு, மருந்து பொருள்களை வழங்கப் போவதாக தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரன் கூறியிருக்கிறார். நாங்களே உணவு அளிக்க முடியும். அதற்கு இந்திய பணம் தேவை இல்லை. உணவுப் பொருள்கள் என்றால் எம்.ஜி.ஆரின் பாஷையில் ஆயுதங்கள் என்று பொருள் இருக்கலாம். விடுதலை புலிகள் இயக்கம் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் தனிப்படை'' - (தினமணி 30-4-87) என்றார்.
இதனைத் தொடர்ந்து கொழும்பு நகரத்தில் புத்த கோவிலுக்கு எதிரே 10,000 சிங்கள மாணவர்களை எம்.ஜி.ஆருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த ஜெயவர்த்தன உசுப்பிவிட்டார்.
நிதியளிப்பு குறித்து அப்போதைய அரசவைக் கவிஞர் - புலவர் புலமைப்பித்தன் கூறுவதாவது:
""தனிப்பட்ட இன உணர்வு காரணத்தினால்தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரிக்க முன்வந்தார். முதலிலே உமாவுக்கு (உமாமகேஸ்வரன் என்ற முகுந்தன்) பணம் கொடுத்திருக்கிறார். தம்பிக்கு (பிரபாகரன்) பணம் கொடுத்திருக்கிறார்.
""ஆனால் அதற்கு பின்னாலே உமாவின் மீது துளிக் கூட நம்பிக்கை ஏற்படவில்லை. தம்பியின் மீது இருந்த முழுமையான நம்பிக்கை காரணமாக அவர் ஒருவர் மட்டும்தான் களத்தில் இருப்பார் என்று முடிவு செய்த காரணத்தினால் எவ்வளவு என்று யாருக்கும் தெரியாத அளவுக்கு உதவி செய்தார்.
""ரிசர்வ் பேங்கில் இருந்து தமிழ்நாட்டு அரசின் சார்பாக 4 கோடி ரூபாய் விடுதலைப் புலிகள் மற்றும் ஈரோஸ் இயக்கங்களுக்கு கொடுத்தார் என்றால், அவர் எந்த அளவுக்கு மிகத் துணிச்சலோடு இருந்தார் என்பதை அறியலாம்.
""தமிழீழம் விடுதலை பெற்றுவிடும் என்கிற ஒரு முழுமையான நம்பிக்கை உருவாகிற சூழ்நிலையில் - தமிழீழம் விடுதலை பெறுவது, தங்களுக்கு மிகவும் கெடுதலான காரியமாக அமைந்துவிடும் என்று நம்பினார்கள் இந்தியத் தரப்பினர்.
நாளை:
82 missing தப்பினார் பிரபாகரன்!
 
மூலம்: தினமணி
ஆக்கம்: பாவை சந்திரன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.