ஒரு
கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு - 15
* 1992-93 காலப்
பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல
கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள்.
“ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டார்கள்?”, “ஏன் ஏனைய இயக்கப் போராளிகள் புலிகளால் அழிக்கப்பட்டார்கள்?” போன்ற கேள்விகளால் இளநிலைப் போராளிகளாய் இருந்த நாங்கள் திணறிப்போன சந்தர்ப்பங்கள் அநேகமிருந்தன.
உண்மையில் அந்தக் கேள்விகளுக்கான விளக்கம் அப்போதெல்லாம் எங்களுக்கே சரிவரத் தெரிந்திருக்கவில்லை.
“ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டார்கள்?”, “ஏன் ஏனைய இயக்கப் போராளிகள் புலிகளால் அழிக்கப்பட்டார்கள்?” போன்ற கேள்விகளால் இளநிலைப் போராளிகளாய் இருந்த நாங்கள் திணறிப்போன சந்தர்ப்பங்கள் அநேகமிருந்தன.
உண்மையில் அந்தக் கேள்விகளுக்கான விளக்கம் அப்போதெல்லாம் எங்களுக்கே சரிவரத் தெரிந்திருக்கவில்லை.
* 1995 ஒக்ரோபர் மாதம் இராணுவத்தினர்
வடமராட்சியைக் கைப்பற்றி வலிகாமத்தை முழுமையாகக் கைப்பற்றும் நடவடிக்கையை
முடுக்கியபோது பிரபாகரன் எவரும்
எதிர்பார்த்திராத அதிரடி முடிவொன்றை எடுத்தார். வலிகாமத்திலிருந்து அனைத்து மக்களும் உடனடியாக வெளியேற
வேண்டும் என்ற முடிவு மக்களுக்கு ஒலிபெருக்கிகள் மூலம் அவசர அவசரமாக
அறிவிக்கப்பட்டது....... வீடுவாசல்கள், சொத்துச்
சுகங்கள், தோட்டங்கள், செல்லப் பிராணிகள் என அத்தனையையும்
பிரிந்து குறிக்கப்பட்ட சில மணித் தியாலங்களில் ஐந்து இலட்சம் மக்கள் நாவற்குழி
பாலம் கடந்த நிகழ்வை எப்படிப் பதிவு செய்தாலும் புரியவைக்க முடியாத மாபெரும் மனித
அவலம் என்றே கூற வேண்டும்.
** மயானத்தில்
அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக
ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள்!