இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் வரை தமிழ் வெள்ளாள
சிங்கள கொவிகம மேட்டுக் குடியினர் அரசியல் இணக்கத்தோடு தான் இருந்தார்கள். 1915ல் முஸ்லிம் வியாபாரிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தில் சுமார்
2௦ சிங்கள தலைவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இங்கிலாந்து வரை சென்று
அவர்களுக்காக வாதாடி விடுதலை வாங்கிக் கொடுத்தவர் தமிழினத் தலைவர் பொன். ராமநாதன்
அவர்கள்.
இலங்கை
சுதந்திரம் அடைந்த பின்பு பார்லிமெண்டில் 50/50 பங்கு கேட்டது முதலே
இனப்பிரச்சனை ஆரம்பித்து விட்டது. சிங்கள் தேசியவாதமானது சிங்கள-பவுத்த
தேசியவாதமாக பரிணாமம் அடைந்தது.