Showing posts with label 2006. Show all posts
Showing posts with label 2006. Show all posts

Sunday, 21 June 2020

Pottuvil massacre 17 Sep 2006: LTTE behind Pottuvil massacre: Sole survivor


The funerals of 11 murdered Muslims have taken place in eastern Sri Lanka.

Their bodies were found after they had apparently gone to repair an irrigation system. Local Muslims have called for an inquiry into how the men died.

Hundreds of angry Muslims earlier gathered outside a mosque in Ampara where the bodies were displayed.
The government accused the Tamil Tigers of the killings, but the rebels have blamed the army, pointing out that they happened in a government-held area

Tuesday, 16 June 2020

2006 ஜூலை 21- மாவிலாறை பூட்டி நான்காம் ஈழப்போரை தொடங்கி வைத்த சொர்ணம்: - 22

ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு: 

பிரபாகரனின் ஒப்புதலுடன் 2006 ஜூலை 21ம் தேதி மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!
இறுதிப் போரின் ஆரம்பத் தாக்குதல்கள் அனைத்துமே புலிகள் தமது பலத்தைப் பரீட்சித்துப் பார்ப்பதற்காக ஏற்படுத்திக் கொண்ட களங்களாகவே அமைந்திருந்தன.
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமான இறுதி யுத்தத்தின் முதலாவது கட்டம் கிழக்கு மாகாணத்தில் முடிவுக்கு வந்திருந்தது.
திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் அனைத்தையும் இராணுவத்தினர் கைப்பற்றினார்கள்.
இறுதியாக, 2007 ஜூலை 11இல் குடும்பிமலையும் (தொப்பிக்கல்) இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வீழ்ந்தது.
புலிகளின் ஆயுதக் கப்பல்கள் இலங்கை கடற்படையால் தாக்கியழிக்கப்பட்டதன் காரணமாக இயக்கத்திடம் கைவசமிருந்த ஆட்லறி பீரங்கிகளுக்குத் தேவையான எறிகணைகள் மற்றும் வெடிபொருட்களைத் தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து பெற்று யுத்தத்தில் தாராளமாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியம் இல்லாமல் போனது.
2007க்குப் பின்னரான காலப் பகுதியில் வன்னிப் பெருநிலப் பரப்பு மட்டுமே புலிகளின் கைவசமிருந்த ஒரேயொரு தளமாக அமைந்திருந்தது.
எந்தச் சமூகத்தை வாழவைக்க வேண்டுமென்பதற்காக நாம் போராடப் போனோமோ அதே சமூகத்தின் சீரழிவு நிலைக்கும் நாமே காரணமாக இருந்தோம்.

Sunday, 7 June 2020

அம்பாறை முஸ்லீம் மக்களுக்கு எதிராக புலிகள் துண்டுப்பிரசுரம்


அம்பாறையில் வாழுகின்ற முஸ்லீம்களை வெளியேறச்சொல்லி புலிகள் துண்டுப்பிரசும் மூலம் அறிவித்துள்ளனர். இப்பிரசுரம் அம்பாறையில் உள்ள முஸ்லீம்கள் மத்தியில் பதட்டத்தை உருவாக்கியுள்ளது. இவ்வருட ஆரம்பத்தில் மூதூரில் இதுபோன்ற துண்டுப்பிரசுரம் வெளியிட்டபின் முஸ்லீம்கள் வெளியேறாததைத்தொடர்ந்து மூதூரில் இராணுவத்தாக்குதல்களை பலவந்தமாக மேற்கொண்ட புலிகள் அங்கு வாழ்ந்த மக்களை அகதிகளாக இடம்பெயர வைத்தனர்.

Wednesday, 3 June 2020

மூதூர் வெளியேற்றம் (சிறப்புக் கட்டுரை)

 மூதூர் முஸ்லிம்கள் மூதூரை விட்டு வெளியேறிவிட வேண்டும். வெளியேறத் தவறினால் இரத்த ஆறு ஓடும் என 29.05.2006 அன்று புலிகள் துண்டுப்பிரசுரம் மூலம் மக்களை அச்சுறுத்தியிருந்தனர். பின்னர் வழமைபோலவே அப்பிரசுரத்துக்கும் தமக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என மறுத்தனர்.

அதேநேரம் புலிகளின் அச்சுறுத்தலுக்கு பணிந்து வெளியேற வேண்டாம், நாம் பூரண பாதுகாப்புத் தருவோம் என 01.06.2006 அன்று மூதூர் இராணுவம் ஓர் துண்டுப் பிரசுரத்தை வெளியிட்ட தோடல்லாமல் அதனை ஒலி பெருக்கி மூலமும் அறிவித்தது.

மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றம் : ஒரு அவல வரலாறு


நினையாப் பிர­கா­ர­மாக புலி­களால் இராப் பொழுதில் ஒலி­பெ­ருக்கி மூலம் வெளி­யேறச் சொல்லி கால் நடை­யாக சுமார் 60 கிலோ­மீற்றர் தூரம் வெயிலில் விரட்­டப்­பட்ட மூதூர் மற்றும் தோப்பூர் முஸ்­லிம்­களின் வர­லாறு.


கையிலும் மடி­யிலும் எது­வுமே இல்லை. நடந்த களைப்பால் உடல் சோர்ந்து தளர்ந்தி­ருந்­தது. உள்­ளமும் துய­ரத்தை எண்ணி உருகிக் கொண்­டி­ருந்­தது. பசி, தாகம், சோர்வு, மனதில் ஒரு வித­மான விரக்தி! இவர்கள் எங்­களை வெளி­யேற்றப் போவதை கொஞ்சம் முன் கூட்­டியே அறி­வித்­தி­ருந்தால் எங்­க­ளது பிள்­ளை­களின் சாப்­பாட்­டுக்­கா­வது எதை­யென்­றாலும் எடுத்து வந்­தி­ருக்­கலாமே?

மூதூர் வெளியேற்றம் - 2006

மூதூர் மக்களின் துயரங்களை ஆவணமாக்கும் சிறுமுயற்சி!

''1990களின் வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்புச் செய்து வெளியேற்றிய அதே காலகட்டத்தில், கிழக்கு மாகாணம் பூராகவும் வாழும் முஸ்லிம்களை தமது மண்ணிலிருந்து வெளியேற்ற விடுதலைப் புலிகள் எடுத்த முயற்சியை, முஸ்லிம்கள் துணிந்து நின்று தமது மண்ணிலேயே காலூண்றி எதிர்த்ததனால்தான் அவர்களால் அங்கு இனச்சுத்திகரிப்புச் செய்யப்படாத வரலாற்றுடன் இன்னமும் வாழ முடிகிறது. இல்லையேல் 1990களில் வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றத்தில் நிகழ்ந்த துயரமும் வாழ்வும்தான் கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கும் கிடைத்திருக்கும். இதுதான் யதார்த்தமான நிலவரமுமாகும்''.