Showing posts with label ராஜீவ் காந்தி. Show all posts
Showing posts with label ராஜீவ் காந்தி. Show all posts

Wednesday, 10 June 2020

இலங்கை தமிழர்களை காப்பாற்ற போய் படுகொலை செய்யப்பட ராஜீவ் காந்தி.


இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் வரை தமிழ் வெள்ளாள சிங்கள கொவிகம மேட்டுக் குடியினர் அரசியல் இணக்கத்தோடு தான் இருந்தார்கள். 1915ல் முஸ்லிம் வியாபாரிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தில் சுமார் 2௦ சிங்கள தலைவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இங்கிலாந்து வரை சென்று அவர்களுக்காக வாதாடி விடுதலை வாங்கிக் கொடுத்தவர் தமிழினத் தலைவர் பொன். ராமநாதன் அவர்கள்.
இலங்கை சுதந்திரம் அடைந்த பின்பு பார்லிமெண்டில் 50/50 பங்கு கேட்டது முதலே இனப்பிரச்சனை ஆரம்பித்து விட்டது. சிங்கள் தேசியவாதமானது சிங்கள-பவுத்த தேசியவாதமாக பரிணாமம் அடைந்தது.

Monday, 8 June 2020

தமிழகத்தில் புலிகளால் கொல்லப்பட்ட பத்மநாபா - கலைக்கப்பட்ட திமுக ஆட்சி

ஜூன் 19ம் நாள் ஒப்பற்ற ஈழபோராளி பத்மநாபாவின் நினைவுநாள், கோடம்பாக்கத்தில் அவர் 1990ல் மரித்தபொழுதே ஈழம் இனி மலராது என அடித்து சொன்ன அனுபவஸ்தவர்கள் உண்டு, தமிழர்களின் பெரும் சிந்தனை செல்வம் அழிக்கபட்டுவிட்டது, இனி ஈழதமிழருக்கு மிஞ்சுவது கண்ணீரும்,ரத்த ஆறும் என்பது அன்றே குறிக்கபட்டது.
பத்மநாபாவின் மரணம் தமிழகத்தை பெரும் சுடுகாடாக்கும் திட்டத்தின் முதல்புள்ளி, இனி என்னவெல்லாம் நடக்குமோ என மனிதநேயம் கொண்டோர்கள் எல்லாம் அஞ்சி புலம்ப அதற்கு விடை மறுவருடம் மே 21 1991ல் கிடைத்தது.

Friday, 22 May 2020

தி.மு.க. இலங்கைத் தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை ?

கலைஞர் கேள்வி-பதில்கள்
கேள்வி: உலகத் தமிழர்களையெல்லாம் நீங்கள் ஏமாற்றி அவர்கள் காதில் பூ சுற்ற முயலுகிறீர்கள் என்கிறாரே ஒரு தலைவர்?
கலைஞர்: நான் உலகத் தமிழர்களையெல்லாம் ஏமாற்றுகிறேனா இல்லையா என்பதை உலகத் தமிழர்கள் அறிவார்கள். உலகத் தமிழர்களுக்காக உழைப்பவர்கள் யார், தியாகம் செய்தவர்கள் யார், செய்பவர்கள் யார், வேடம் போடுபவர்கள் யார், தமிழர் பாதுகாப்பு என்ற பெயரால் ஆதாயம் தேடிக்கொள்ள முயலுபவர்கள் யார் என்பதையெல்லாம் உலகத் தமிழர்கள் நன்றாகவே உணருவார்கள்.

Talking Heads: Anton Balasingham (Aired: July 2006)

ராஜீவ் காந்தியை கொலை செய்தது விடுதலைப்புலிகள் தான், அதற்கு இந்திய மக்களிடம் மன்னிப்புக்கோருகிறோம். இது வரலாற்று ரீதியான தவறு என்றும் ஆனால் இதை இந்தியாவும் இந்திய மக்களும் மறந்து, பெருந்தன்மையாக நடந்து கொண்டு, இந்தச் சம்பவத்தைப் பின் தள்ளிவிட்டு, இனப்பிரச்சினையை ஒரு மாறுபட்ட கோணத்தில் அணுகவேண்டும் என்று விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் அண்டன் பாலசிங்கம் கூறியுள்ளார்.