Showing posts with label 50/50. Show all posts
Showing posts with label 50/50. Show all posts

Tuesday, 23 June 2020

தந்தை செல்வாவின் ‘சுதந்திர தனிநாடு’ என்னும் ஏட்டுச் சுரைக்காயை பிரபாகரன் காவித்திரிந்ததன் விளைவே முள்ளிவாய்க்கால் அவலம்!!


கடந்து வந்த பாதையைத் திருப்பிப் பார்த்தல் – யதீந்திரா
(சுமந்திரனின் நாடாளுமன்ற உரையை முன்னிறுத்திஒரு விவாதத்திற்கான அழைப்பு)

செல்வநாயகத்தால் 1976ல் வட்டுக்கோட்டையில் முன்மொழியப்பட்ட ‘சுதந்திர தனிநாடு’ என்னும்ஏட்டுச் சுரைக்காயை சுயபரீசீலனையற்றுகாவித்திரிவதில் கர்வம் கொண்ட ஒருவராகவேபிரபாகரனின் காலம் கழிந்தது…….அந்த கர்வத்திற்காக பிரபாகரன் தொடர்ச்சியாக செய்துவந்த தவறுகளின் விளைவுதான்முள்ளிவாய்க்கால் அவலம்..


எதிர்காலத்தை வரையறுக்க விரும்பினால் கடந்த காலத்தைப் படி – கன்பியுசியஸ்

2014ம் ஆண்டு வரவு-செலவுத்திட்டத்தின் வெளியுறவு அமைச்சுக்கான நிதியொதுக்கீடுகள் மீதான சூழ்நிலை விவாதத்தின்போதுதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆற்றிய உரையின் மீதான ஒரு பிரதிபலிப்பாகவேஇக்கட்டுரை அமைகிறது.