அம்பாறை மாவட்டத்தின் வீரமுனைக் கிராமம் விடுதலைப் புலிகளின் ஆதரவு நிலைப்பாட்டில் தீவிரமாக செயற்பட்ட கிராமங்களில் ஒன்றாகும். அம்பாறை மாவட்டத்தில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் வீரமுனை மற்றும் அதன் அயல்கிராமங்களைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள். அதன் காரணமாக இந்தக் கிராம மக்களுக்கு புலிகளின் பாரிய பின்புலம் மற்றும் உடனடி உதவிகள் என்பன தாராளமாக கிடைத்து வந்தது.