Showing posts with label ஜெயசிக்குறு. Show all posts
Showing posts with label ஜெயசிக்குறு. Show all posts

Sunday, 14 June 2020

ஜெயசிக்குறு சமரின் காலம் ‘கஞ்சிக் காலம்’ எனப் போராளிகளால் அழைக்கப்பட்டது. - 5

ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு- 5

ஜெயசிக்குறுமுறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது.  ஜெயந்தன், அன்பரசி படையணிகள்  கிழக்கு  மாகாணத்திலிருந்து  காடுகளுக்கூடாகப் பல நூறு மைல்களைக் கால்நடையாகவே நடந்து வந்து யுத்தத்தில் பங்கெடுத்திருந்தார்கள்.

முள்ளியவளை புதன்வயல் பகுதியில் அமைந்திருந்த அன்பரசி படையணி முகாமுக்கு அரசியல் வகுப்புகளை நடத்துவதற்காகப் பல தடவைகள் போயிருக்கிறேன்.
ஜெயசிக்குறு சமரின் காலம் கஞ்சிக் காலம்எனப் போராளிகளால் அழைக்கப்பட்டது. 
கிழக்கு மாகாணப் போராளிகளின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் இல்லாதிருந்திருந்தால் விடுதலைப் புலிகள் இயக்கம்    பாரிய வெற்றிகளைப் பெற்றிருக்கவே முடியாது!
பத்துத் தடவைகளாகக் காயமடைந்த ஒரு போராளி மீண்டும் பதினோராவது தடவையாக யுத்த களத்துக்கு அனுப்பப்பட்டுப் போராடிய சம்பவங்களும் இருந்தன.