அறிவியல் பார்வைக்கு
முன் உடைந்து நொருங்கும் கற்பனைக்கதைகள்
சேது சமுத்திரத் திட்டம் குறித்து கடந்த மூன்றாண்டுகளாகப் பல்வேறு சிக்கல்களைச் சிலர் உருவாக்கி வருகின்றனர். இப்போது புதியதாக மதத்தின் பெயரால் ஒரு சிக்கலைக் கொண்டு வந்திருக்கின்றனர். இவர்களுடைய நோக்கம் சேதுக் கால்வாய் வந்துவிடக்கூடாது என்பதைத் தவிர வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. முதலில் பவளப்பாறைகள் என்றார்கள். இப்போது இராமர் பாலம் என்கிறார்கள்.
மன்னார் வளைகுடாவில் உள்ள நீளமான மணல் திட்டை அகழ்வுப் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்றும் இந்து அமைப்புகள், கட்சிகள் கூறி வருகின்றனர். இது தொடர்பாக இந்து அமைப்புகள் லக்னோ உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கையும் தொடுத்து, அகழ்வுப் பணியை நிறுத்தி வைக்க முயற்சி செய்தனர். ஆனால், உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்புத் தெரிவித்து விட்டது.
சேது சமுத்திரத் திட்டம் குறித்து கடந்த மூன்றாண்டுகளாகப் பல்வேறு சிக்கல்களைச் சிலர் உருவாக்கி வருகின்றனர். இப்போது புதியதாக மதத்தின் பெயரால் ஒரு சிக்கலைக் கொண்டு வந்திருக்கின்றனர். இவர்களுடைய நோக்கம் சேதுக் கால்வாய் வந்துவிடக்கூடாது என்பதைத் தவிர வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. முதலில் பவளப்பாறைகள் என்றார்கள். இப்போது இராமர் பாலம் என்கிறார்கள்.
மன்னார் வளைகுடாவில் உள்ள நீளமான மணல் திட்டை அகழ்வுப் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்றும் இந்து அமைப்புகள், கட்சிகள் கூறி வருகின்றனர். இது தொடர்பாக இந்து அமைப்புகள் லக்னோ உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கையும் தொடுத்து, அகழ்வுப் பணியை நிறுத்தி வைக்க முயற்சி செய்தனர். ஆனால், உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்புத் தெரிவித்து விட்டது.