Showing posts with label தாக்குதல்கள். Show all posts
Showing posts with label தாக்குதல்கள். Show all posts

Friday, 24 July 2020

தமிழரின் தாகம் தமிழீழ தாயகமா? - கிழக்கான் ஆதம்

கிழக்கின் விடுவிப்பின்போது அங்கு சென்ற ஜனாதிபதிக்கு மாலை அணிவித்த இந்து மத குருவை புலிகள் சுட்டுக் கொன்றனர். இது எதனைக் காட்டுகிறது எனறால் புலிகள் எவ்வளவுதான் அவர்களின் அடாவடித்தனங்களை பாமர மக்கள் மீது பிரயோகித்தும் சகோதர படுகொலைகள் புரிந்தும் இன்னும் மக்கள் மனதார புலிகளை ஆதரிக்கவில்லை என்பதையும் அவர்கள் அமைதியான சுபீட்சமான வாழ்வையே விரும்புகின்றனர் என்பதையுமே காட்டுகிறது.


அல்பிரட் துரையப்பா முதல் இன்று சிறைபிடித்து சுட்டுக்கெல்லப்படுகின்ற வன்னி பாமர மக்கள்வரை அனைவர் மீதும் புலிகள் தொடர்ந்து தங்கள் ஆயுதகங்கால் மட்டும் தமிழ் மக்களை ஆண்டு வந்திருப்பது புலிகளின் தாகம் தமிழரின் தாகமல்ல என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

“தலைவர் சொல்லாமல் அடிப்பதை ஜனாதிபதி சொல்லியடித்தார்” -கிழக்கான் ஆதம்

இனி நான் சும்மா இருக்க மாட்டேன்! இந்த 2006ம் ஆண்டு பெப்ரவரி இருபத்தி மூன்றாம் திகதி ஜெனிவாவில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்தைக்குப் பிறகு புலிகள் இருபது குண்டுவெடிப்புச் சம்பவங்களை நடத்தியிருக்கிறார்கள் நாற்பத்தேழு இராணுவ அதிகாரிகளையும் இருபத்தெட்டு அப்பாவி மக்களையும் கொன்றிருக்கிறார்கள் நூற்றி முப்பத்தொன்பது பேருக்கு படுகாயம் ஏற்பட்டிருக்கிறது

-2006
ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் திகதிய இரானுவத் தளபதி மீதான தற்கொலைத் தாக்குதலின் பின்னர் மேதகு ஜனாதிபதியாற்றிய உரையிலிருந்து-

Thursday, 23 July 2020

கிழக்கு பிளவும் வெருகல் படுகொலையும் விட்டுச்சென்றவை – (வெருகல் படுகொலை நினைவு தினம்.10.04.2004)


அன்றொருகாலம் தமிழீழ விடுதலை புலிகள் “அசைக்கமுடியாத சக்திகளாய் இருந்தனர்.1976ம் ஆண்டு உருவாக்கப்பட்ட புலிகள் அமைப்பின் தலைவரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் யாராலும் வெல்லப்பட முடியாதவர் அனுமானுஷ” சக்தி படைத்தவர் என்கின்ற ஒளிவட்டங்களின் சொந்தக்காரராய் இருந்தார்.

இந்த புலிகள் அமைப்பானது தனது 27வருடகால வரலாற்றில் கடந்துவந்த சவால்களும், நெருக்கடிகளும் எண்ணற்றவை.ஆனால் அவையனைத்தையும் தாண்டி வென்று நின்றவர்கள்தான் புலிகள். ஆனால் 2004ம் ஆண்டு புலிகள் எதிர்கொள்ள நேர்ந்த கிழக்கு பிளவுஅவர்களுக்கு மாபெரும் சவாலொன்றை விடுத்தது.

புலிகளின் பௌத்த மதத்திற்கு எதிரான தாக்குதல்கள்:- எஸ்.எம்.எம் பஷீர்

உலகமெல்லாம் வலம்வரும் வீரமும், விவேகமும் கொண்ட தமிழர்களாக தங்களைக் கருதுபவர்கள் புலிகளின் மதரீதியான திட்டமிட்ட தாக்குதல்கள் குறித்து தங்கள் நிலைப்பாட்டினை எவ்வாறு வெளிக்காட்டி வந்திருக்கின்றார்கள் என்பது வரலாறு பதிவுசெய்துகொண்டே வருகின்றது

உள்ளுரப் பெருமிதம்கொண்டு அத்தகையத் தாக்குதல்களை தமிழர்களின் வீரமாய் ஆராதிப்பதும் மறுபுறம் நாக்கூசாது உது சிங்களக் காடையன்கள் கiதிகளைக் கொண்டு செய்விச்சதல்லோஎன்றோ அல்லது இனம்புரியாத நபர்களன்றோ நேர்மைத் திறனின்றி வஞ்சனையுடன் கூறுமிவர்கள்தான் இன்று புலம்பெயர் உலகின் பெரும்பான்மை மக்கள்.

Wednesday, 22 July 2020

தற்குறி பிரபாகரனின் தரம்கெட்ட கொடுஞ்செயல்.

கொடப்பிட்டிய ஜும்ஆ பள்ளிவாசலில் புலிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதல்
 
இன்று (10-03-09) இலங்கையின் தென்கரையோர நகரான மாத்தறையில் முஸ்லிம்களின் மீலாத்விழா நிகழ்வின் போது தற்கொலைப் படையை அனுப்பி பாரிய அனர்த்தம் ஒன்றை தமிழீழவிடுதலைப் புலிகள் மேற்கொண்டுள்ளனர். 10 மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதனால் லட்சக்கணக்கான முஸ்லிம்களின் மனவுணர்வுகள் துன்பத்திற்குள்ளாக்கப் பட்டுள்ளன. 

மீலாத்துவிழா எனப்படும் முகமது நபியின் பிறந்தநாளான இன்று புனித ஸ்தலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தாக்குதலானது  தற்குறி பிரபாகரனின் தரங்கெட்ட கொடுஞ்செயல்களின் தன்மையை உலகுக்கு இன்னுமொருமுறை உணர்த்தியுள்ளது.