ஒரு
கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு: 24
''இறுதிப்போரின்
பிரதான இலக்காக பிரபாகரனே குறி வைக்கப்பட்டிருந்தார் என்பது புலிகளால்
புரிந்துகொள்ளப்பட்டது''.
* பிரபாகரனின்
இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர்
தாக்குதல் நடத்திய இலங்கை ராணுவம்.
• 2007 செப்டம்பரில் இலங்கைப் படையினரால் மன்னாரில்
ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை பெரும் நிலப் பிரதேசங்களை ஆக்கிரமித்தபடி வேகமாக
முன்னேறி வந்து கொண்டிருந்தது.
• 2007ல் விமானத் தாக்குதலில் தமிழ்செல்வன் மரணம்.
* முன்னைய
காலங்களைப் போலன்றி, இராணுவத்தினர்
தந்திரமான ஊடுருவித் தாக்குதல்கள் மூலமும் எமது கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களை
வேகமாகக் கைப்பற்றினார்கள்.
* இராணுவத்தினரின்
‘ஜெயசிக்குறு’ படையெடுப்புக்
காலப்பகுதியில் புலிகளுக்குச் சாதகமாக இருந்த வன்னிக் காடுகளின் அனைத்துச்
சூட்சுமங்களையும் இராணுவத்தினர் இப்போது நன்றாக அறிந்து உள்வாங்கியிருந்தனர்.
* இராணுவத்தின்
ஆழ ஊடுருவும் அணியினரின் கைகளில் புலிகளின் மிக முக்கியமான இடங்கள் பற்றிய
அனைத்துத் தரவுகளும் மிகத் துல்லியமாக இருக்கின்றன என்கிற விடயம் புலிகளுக்கு
வெளிப்படத் தொடங்கியது.
* இறுதிப்போரின்
கடைசிக் கட்டம்வரை ஆழ ஊடுருவும் அணியினரின் நடவடிக்கைகளைப் புலிகளால்
தடுத்துநிறுத்த முடியவில்லை.