Showing posts with label பிரபாகரன். Show all posts
Showing posts with label பிரபாகரன். Show all posts

Saturday, 25 July 2020

சாத்தியமே இல்லாதது தமிழீழம்: என்.ராம்

அடிப்படையிலேயே இனவாதக் கோரிக்கை அது. இங்கிருந்து நாம் இலங்கைத் தமிழர்கள் என்ற சொல் வழியே பார்க்கும் மக்கள் வேறு; அங்குள்ள மக்கள் வேறு. மலையகத் தமிழர்கள் தனித்திருக்கிறார்கள், தமிழ் பேசும் முஸ்லிம்கள் தனித்திருக்கிறார்கள்; அவர்களுடைய பிரச்சினைகள் இங்கு பேசப்படுவது இல்லை. ஈழத்தின் பரப்பாகக் கேட்கப்பட்ட வட - கிழக்கு மாகாணங்களை எடுத்துக்கொண்டால், கிழக்கு மாகாணத்தில் மூன்றில் இரு பங்கினர் தமிழர் அல்லாதவர்கள்; வட பகுதியோடு இணைவதில் விருப்பம் இல்லாதவர்கள்; அவர்களுடைய நியாயங்களை விவாதிக்க இங்கு அனுமதிக்கப்படுவதுகூட இல்லை.

அப்புறம், அரசியல்ரீதியாக, பொருளாதாரரீதியாக, புவியரசியல்ரீதியாக நீடிக்க வாய்ப்பே இல்லாதது அது. முக்கியமாக, வியூக முக்கியத்துவம். அந்தப் பகுதியை ராணுவரீதியாக யாரும் விட்டுவைக்க மாட்டார்கள் - ஒருபோதும் அது நீடிக்க முடியாதது. கடைசியில் அதுதான் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், ஒன்றுபட்ட இலங்கை என்ற அமைப்பின் கீழ், சுயாட்சிக்கு இணையான உச்சபட்ச அதிகாரப் பகிர்வுதான் இலங்கைத் தமிழர்களுக்கு அமைதியையும் நன்மைகளையும் தருமேயன்றி பிரிவினை அல்ல.

என்.ராம் 01 Jan 2014 

புலிகளின் தமிழீழம் சாத்தியமா?

* இராணுவ பலத்தினால் மட்டும் புலிகளை வெற்றி கொள்ள முடியுமானதாக இருந்திருந்தால் இலங்கையில் இந்திய அமைதிப்படையிருந்த காலத்தில் ஒரு சில மாதங்களுக்குள் புலிகளை இந்திய இராணுவத்தினர் அழித்தொழித்திருப்பார்கள். அவ்வாறு செய்ய முடியாமல் போனமைக்குப் பிரதான காரணம் மக்கள் அன்று புலிகள் அமைப்புக்கு அளித்துவந்த ஆதரவும் பாதுகாப்புமாகும். 

அன்றைய நிலையைவிட பலநூறு மடங்கு பலம்வாய்ந்தவர்களாகவிருந்த புலிகள் இன்று மிக இலகுவாகத் தோற்கடிக்கப்பட்டமைக்கு புலிகள் மீது மக்களுக்கிருந்த வெறுப்பே பிரதான காரணமாக இலங்கை அரசுக்கு உதவியது. அன்று எவ்வாறு புலிகள் அமைப்பு சகல மக்களின் நேசத்திற்குள்ளாகியிருந்ததோ அதேபோல் இன்று புலிகள் அமைப்பு முற்றுமுழுதாக தமிழ்பேசும் மக்களினால் புறக்கணிக்கப்பட்டிருந்தது.

13 மே, 2009

Friday, 12 June 2020

1983 ஜூலை இனப்படுகொலை;- சென்னை டெல்லியில் நடந்த நிகழ்ச்சிகள்

1983 ஆண்டு மார்சில் பிரபாகரனும் ராகவனும் நிபந்தனை அடிப்படையிலான பிணையில் விடுவிக்கப் பட்ட பொழுது மதுரையில் இருந்து இலங்கைக்கு தப்பிச் சென்றார்கள் .அதனால் ஏப்ரல் மாதக் இறுதியில் உமாமகேஸ்வரன், கண்ணன் என்ற சோதிஸ்வரன், நிரஞ்சன் என்ற சிவனேஸ்வரன் மூவரையும் சென்னை போலீசார் கைது செய்து சென்னை சென்ட்ரல் ஜெயிலில் அடைத்தார்கள்.

Wednesday, 10 June 2020

பிரபாகரன்: ஓர் அவலத்தின் அடையாளம் - யோகா-ராஜன்

தன்னளவில் ஒடுக்குமுறையைக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தின் விடுதலை என்பது மிகக் கடுமையானதுஅதாவது தன்னுள் வைத்திருக்கும் முழு வளங்களையும் சரிவரப் பயன்படுத்தும் பட்சத்தில்தான், ஒடுக்குமுறைக்குட்பட்டிருக்கும் ஒரு சிறுபான்பைச் சமூகத்தின் விடுதலை சாத்தியமாகும். ஆனால் பிரபாகரன் இச் சூத்திரத்தின் உள் அர்த்தத்தைப் புரிந்திருக்கவில்லை. புரிந்துகொள்ளத் தலைப்படவும் இல்லை. தன்னார்வத்துடன் இயங்கி வந்த பல சமூக அமைப்புக்களுக்கு தடைவிதித்தார். சன சமூக நிலையங்களைக் கூட தமது கட்டுப்பாட்டுக்குள் மட்டுமே இயங்க வைத்தார். முஸ்லிம்களை ஒடுக்கினார். சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான சாதிய அமைப்புகக்களை இயங்க விடாமல் தடுத்தார். மற்றும் தமிழ்த் தேசியம் எனும் ஒரே நேர்கோட்டில் பயணித்த அனைத்து விடுதலை அமைப்புக்களுக்கும் சாவுமணியடித்தார்.

இலங்கை தமிழர்களை காப்பாற்ற போய் படுகொலை செய்யப்பட ராஜீவ் காந்தி.


இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் வரை தமிழ் வெள்ளாள சிங்கள கொவிகம மேட்டுக் குடியினர் அரசியல் இணக்கத்தோடு தான் இருந்தார்கள். 1915ல் முஸ்லிம் வியாபாரிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தில் சுமார் 2௦ சிங்கள தலைவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இங்கிலாந்து வரை சென்று அவர்களுக்காக வாதாடி விடுதலை வாங்கிக் கொடுத்தவர் தமிழினத் தலைவர் பொன். ராமநாதன் அவர்கள்.
இலங்கை சுதந்திரம் அடைந்த பின்பு பார்லிமெண்டில் 50/50 பங்கு கேட்டது முதலே இனப்பிரச்சனை ஆரம்பித்து விட்டது. சிங்கள் தேசியவாதமானது சிங்கள-பவுத்த தேசியவாதமாக பரிணாமம் அடைந்தது.

Saturday, 6 June 2020

மன்னிப்புக் கோர வேண்டியவர்கள் யார்?

1990ஆம் ஆண்டு வடதமிழீழத்தில் இருந்து முஸ்லிம்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேற்றியது ஓர் இனச்சுத்திகரிப்பு என்றும், இதனையிட்டுத் தான் வெட்கித் தலைகுனிவதாகவும் இராஜவரோதயம் சம்பந்தரின் பட்டத்து வாரிசான மதியாபரணம் ஏபிரகாம் சுமந்திரம் வெளியிட்ட கருத்து பலத்த சலசலப்புக்களை தோற்றுவித்திருக்கின்றது.

குட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே! 37 ஆண்டுகளின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி

அண்ணாநாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எங்களுக்கு நன்று விளங்குகிறது. இதை தம்பியிடமும் சொல்லுங்கள். நீயாவது இயக்கத்தை நல்லபடி நடாத்தி தமிழ் ஈழத்தை காணும்படி அவனிடம் சொல்லுங்கள்”. குட்டிமணி