ஒரு
கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு - 8
• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின்
பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும்
வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் தமதுயிரை இழந்திருந்தனர்.
• 2000.04.22ஆம் திகதி
ஆனையிறவு புலிகளால் கைப்பற்றப்பட்டபோது இயக்கத்தின் பல வருடக் கனவு அன்று
நனவாகியது.
• பல்லாயிரக்கணக்கான உயிர்களின்
குருதியில் நனைந்த ஏ9 வீதி 2002 திறக்கப்பட்டபோது புலிகள் இயக்கம் இராணுவ பலத்தின் உச்சத்தில்
இருந்தது என்பதை எவராலும் மறுக்க முடியாது.
அப்பலத்தை
அரசியல் மற்றும் ராஜதந்திர ரீதியான பலமாக மாற்றியமைக்கும் தந்திரோபாயத்தில்
புலிகளின் தலைமைக்கு ஏற்பட்ட படுதோல்வி, பின்னொரு நாளில் முள்ளிவாய்க்கால் வீதியை மக்கள் தாமாகவே தள்ளித்
திறந்துகொண்டு வெளியேறிச் செல்லக் காரணமாய் அமைந்தது.