ஒரு
கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு - 14
நவம்பர்
10, 1993 அன்று பூநகரியில் இருந்த
சிங்களப்படையின் மிகப்பெரிய கூட்டுப்படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட
தாக்குதல் நடவடிக்கை தான் தவளைப் பாய்ச்சல்.!!!
• பூநகரி
தாக்குதலை ஆரம்பித்த முதல் மூன்று நாட்களிலும் ஐநூற்றுக்கும் அதிகமான போராளிகள்
வீர மரணமடைந்திருந்தனர்.
* குறுகிய
மனப்பாங்கும் வக்கிர குணங்களும் கொண்டவர்களின் கரங்களில் ஆயுதங்களும் அதிகாரமும்
போய்ச் சேரும்போது எத்தகைய மோசமான அத்துமீறல்கள் நடைபெறும் என்பதற்கு அந்தப்
பயிற்சி முகாமின் ஒரு சில ஆசியர்கள் உதாரணமாக இருந்தனர்.
• சற்று
நேரத்திற்கு முன்பு வரை தீராப் பகையுணர்ச்சியோடு எதிரும் புதிருமாக நின்று
போரிட்டவர்கள் நிலத்தில் சடலங்களாக சிதறிக்கிடந்த காட்சி ஒரு தாயின் மடியில்
உறக்கத்தில் புரண்டு கிடக்கும் குழந்தைகளையே நினைவுபடுத்தியது.
எல்லா வேறுபாடுகளும், முரண்பாடுகளும், பகைமைகளும் அர்த்தமிழந்து போகும் இடமும் போர்க்களம்தான் என்பதை முழுமையாக உணரக்கூடிய அறிவு உண்மையாகவே அப்போது எனக்கிருக்கவில்லை.
எல்லா வேறுபாடுகளும், முரண்பாடுகளும், பகைமைகளும் அர்த்தமிழந்து போகும் இடமும் போர்க்களம்தான் என்பதை முழுமையாக உணரக்கூடிய அறிவு உண்மையாகவே அப்போது எனக்கிருக்கவில்லை.
• பூநகரி
சமர் மக்கள் மத்தியில் புலிகளைப் பற்றிய பெரும் எதிர்பார்ப்புகளை
ஏற்படுத்தியிருந்தது. அதேவேளை மாத்தையாவுடன் சதியில் ஈடுபட்டார்கள் என்ற
குற்றச்சாட்டில் பல திறமையான மூத்த போராளிகள் கைது செய்யப்பட்டனர்
* மக்கள்
மத்தியிலும் மாத்தையா விவகாரம் பயங்கரமான உணர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. ஏனெனில்
அவர் மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு பெற்றவராகவும், இயக்கத்தின் மிக
நெருக்கடியான காலகட்டங்களில் அதன் வளர்ச்சிக்காக மிகக் கடினமாக உழைத்தவராகவும்
அறியப்பட்டிருந்தார்.