Showing posts with label இனச்சுத்தீகரிப்பு. Show all posts
Showing posts with label இனச்சுத்தீகரிப்பு. Show all posts

Monday, 27 July 2020

இஸ்லாமிய மத அடிப்படைவாதமும் இலங்கை குண்டுவெடிப்புகளும் !

 * முஸ்லிம்களில் ஏகப்பெரும்பாலானோரின் வீட்டு மொழி தமிழ் என்ற காரணத்தை முன்னிறுத்தி, அவர்கள் தமிழர்கள் என்றும் முஸ்லிம்கட்குத் தனிப் பிரதிநிதித்துவம் தேவையில்லை என்றும் இராமநாதன் முன்னர் வாதித்தமையும் நோக்கத்தக்கது.
முஸ்லிம்கள் கிழக்கிலங்கையிற் கணிசமானளவு பிரதேசத்திற் செறிவாக வாழ்கின்றனர். வடக்கிலும் மேற்குக் கரையோரமாயும் முஸ்லிம்கள் கணிசமாக வாழும் பிரதேசங்கள் உள்ளன. ஆயினும் ஏகப் பெரும்பாலோர் பல இடங்களிற் சிங்கள மக்களிடையே ஒரு குறிப்பிடத்தக்க சிறுபான்மையாக உள்ளனர். எனவே அவர்கள் தமிழருடன் ஒப்பிடத்தக்க மொழிப்பற்று உடையோராயினும், அவர்களின் தனித்துவம், மொழியை விட முக்கியமாக மதமும் பண்பாடும் சார்ந்திருந்தது.

அவர்களுடைய தனித்துவத்தை இராமநாதன் நிராகரித்தார். முற்றிலும் யாழ், குடாநாட்டை மையப்படுத்திய தமிழ்த் தேசிய அரசியலை அவருக்குப் பின் வந்த ஜி.ஜி. பொன்னம்பலம் முன்னெடுத்தார்.

* விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் வலுத்த போர்ச் சூழலில், முஸ்லிம்களும் தமிழ் மக்களைப் போல தமக்குக் கீழ்ப்பட்டு நடக்க வேண்டுமென எதிர்பார்த்த விடுதலைப் புலிகளின் அணுகுமுறையால் முஸ்லிம்கள் அதிருப்தி அடைந்தனர். அதன் பயனாகக் கிழக்கில், குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில், முஸ்லிம்களை வலிந்து தாக்கலும் முஸ்லிம்களின் எதிர்த் தாக்கலும் சில முஸ்லிம்கள் அரசாங்கத்துடன் நிற்பதுமாகத் தமிழ் முஸ்லிம் நல்லுறவுக்குக் கேடு விளைந்தது.

Wednesday, 22 July 2020

தற்குறி பிரபாகரனின் தரம்கெட்ட கொடுஞ்செயல்.

கொடப்பிட்டிய ஜும்ஆ பள்ளிவாசலில் புலிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதல்
 
இன்று (10-03-09) இலங்கையின் தென்கரையோர நகரான மாத்தறையில் முஸ்லிம்களின் மீலாத்விழா நிகழ்வின் போது தற்கொலைப் படையை அனுப்பி பாரிய அனர்த்தம் ஒன்றை தமிழீழவிடுதலைப் புலிகள் மேற்கொண்டுள்ளனர். 10 மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதனால் லட்சக்கணக்கான முஸ்லிம்களின் மனவுணர்வுகள் துன்பத்திற்குள்ளாக்கப் பட்டுள்ளன. 

மீலாத்துவிழா எனப்படும் முகமது நபியின் பிறந்தநாளான இன்று புனித ஸ்தலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தாக்குதலானது  தற்குறி பிரபாகரனின் தரங்கெட்ட கொடுஞ்செயல்களின் தன்மையை உலகுக்கு இன்னுமொருமுறை உணர்த்தியுள்ளது.

Tuesday, 21 July 2020

வடகிழக்கு மாகாணசபைத் தேர்தல்களில் இருந்து (1989) முஸ்லீம் காங்கிரஸ்சின் சுயாதீனத்தன்மை வரை: - எஸ்.எம்.எம்.பஷீர்

* பிரேமதாசாவுக்கும் புலிக்குமிடையே நடந்துகொண்டிருந்த தேன்நிலவைப் பேணுமுகமாக முஸ்லிம்கள் புலியின் கருணையில் மாத்திரம் தப்பிப் பிழைக்க விடப் பட்டிருந்தனர். 
 * ஜனவரி 30, 1990இல் முஸ்லிம் காங்கிரஸ்சின் 70 அங்கத்தவர்கள் புலிகளால் கடத்தப்பட்டனர். பிரேமதாசா அரசாங்கத்தின் பிரதிநிதிகள் புலியோடு கதைத்து அவர்களில் 50 முஸ்லிம்களை விடுதலையாக்கினர்.
கல்முனை பொலிஸ் பாசறை புலிகளால் சுற்றிவளைக்கப் பட்டதைத் தொடர்ந்து வடகிழக்கு மாகாணசபை அங்கத்தவர் மொகமட் யூனுஸ் லெப்பே, முகமட் மன்சூர் (முஸ்லிம் காங்கிரஸ்) கொல்லப்பட்டனர்.
* புலிகள் முஸ்லிம் காங்கிரசைத் தடைசெய்தனர்.
மாகாணசபை அங்கத்தவரான எம் .வை .எம் மன்சூர் அவர்களும் வடகிழக்கு மகாணசபை அங்கத்தவரும் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதியுமான அலி உத்துமான் அவர்களும் முறையே புலியாலும் ஈ என் டி எல் எப் பாலும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
- எஸ்.எம்.எம்.பஷீர்

பிரதேசவாதம் உண்மையும் கற்பனையும்: - எஸ்.எம்.எம் . பஷீர்


* பரீஸ் கூட்டத்திற்குப் பின்பு முஸ்லீம்கள் சம்பந்தமாகக் கருணாவைக் கேட்டபொழுது "அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் புலிகளே முஸ்லீம்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவார்கள். அதன் பின்பு புலிகள் முஸ்லீம்களோடு பேசி அவர்களின் தேவைகளை அறிவார்கள்" புலிகள் முஸ்லீம்கள் சம்பந்தமாகத் தசாப்தங்களாக வைத்திருந்த நிலைப்பாடே கருணாவினது நிலைப்பாடாகும்.

* முஸ்லீம்கள் ஒரு தேசிய இனக் குழு. அவர்களுக்கென்று ஒரு கலாச்சார அடையாளமுண்டு. அவர்களின் கலாச்சார அடையாளத்தையும் காணி வைத்திருக்கும் உரிமையையும் பாதுகாக்கும் அதே வேளையில் அவர்கள் தமிழ் மக்களோடு ஐக்கியப்பட்டு சேர்ந்துவாழ்வதன் மூலம் மாத்திரம்தான் அவர்களது சமூக அரசியல் பொருளாதார நலன்கள் பாதுகாக்கப்படும். சிங்களவர்களும் சுயநல முஸ்லீம் அரசியல்வாதிகளுமே தமிழ் முஸ்லீம் மக்களுக்கிடையே பிரச்சனையை உருவாக்கப் பார்க்கிறார்கள்" -பிரபாகரன் 

கிழக்கு முஸ்லீம்களைப் பொறுத்தமட்டில் கிழக்கிலே நடைபெற்ற முஸ்லீம்களின் படுகொலைக்கு கருணாவும் கரிகாலனும் பொறுப்பாளிகள் என்ற நிலைப்பாடே உள்ளது.
 - எஸ்.எம்.எம் . பஷீர்

Monday, 20 July 2020

மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன முஸ்லிம் ( 11- !5)

* மன்னார் மாவட்ட அரச அதிபரான எம்.எம் மக்பூல் ஜனவரி மாதம் 1988 ம் ஆண்டு புலிகளின் விசாரணைக்குப் பின்னர் சிவில் நிர்வாகத்தினை அவர் நடாத்துவதனை வன்மையாக கண்டித்து அதிலும் குறிப்பாக இந்தியாவிலிருந்து திரும்பிய அகதிகளை அவர் மீள்குடியேற்றம் செய்வதனை நிறுத்துமாறு எச்சரித்து விடப்பட்ட சில நாட்களின் பின்னர் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டா

கூட்டணியினரின் யாழ் மேலாதிக்க கெடுபிடிகள் தாங்காமல்தான் மட்டுநகரின் முடிசூடா மன்னன் என அழைக்கப்பட்ட சொல்லின் செல்வன் சி. ராஜதுரை அவர்களும் பொத்துவில் பாராளுமன்ற உறுப்பினரான கனகரெத்தினம் அவர்களும் (1977) தேர்தலின் பின்னர் ஐ.தே.கட்சியில் இணையவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார்கள்.

தமிழரின் தேசிய அரசியலுக்கெதிரான சூழலில் தமிழ் அரசுக்கட்சியிலிருந்து வெளியேறிய முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ் தேசியவாதிகளின் கட்சியான தமிழரசுக் கட்சியினரால் "தொப்பி புரட்டிகள்" என்று இனவாத ரீதியில் பரிகசிக்கபட்ட காலகட்டத்தில்தான் தமிழர் கூட்டணியிலும் அஷ்ரப்பும் அவரது சகாக்களும் இணைந்து (1977ல்) தமிழ் ஈழக்கோரிக்கைக்கு குரல் கொடுத்தனர்.

 எஸ்.எம்.எம் பஷீர்

Friday, 17 July 2020

மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம் (1- 5)

எஸ்.எம்.எம் பஷீர்

தற்பெருமையும், உலகின் பெரும் புகழும்வாளும்
கிரீடமும் மனிதனின் நம்பிக்கையை காட்டிக்கொடுத்தன
சிரத்தையுடன் தான் அமைத்த கோபுரமும்கோயிலும்
மண்ணோடு மண்ணாயின"
                                                           – கோகிம் நியண்தர்

இரைக்காக கொல்லப்படும் முஸ்லிம்கள். எஸ்.எம்.எம்.பஷீர்


புலிகளை திருந்துவதற்கு யாரும் அதனை கேட்கவில்லை, மாறாக அதனை ஒரு அரக்கனாக வைத்திருப்பதே தமிழ் தேசியவாதிகளின் அடிப்படை நோக்கமாகும்.

எனவேதான் இன்று வரை புலிகள் புலம் பெயந்துள்ள தமிழரையும் எந்தக்கொலைக்கும் நியாயம் கற்பிக்க பதப்படுத்தி உள்ளர்கள்.

Thursday, 16 July 2020

புலிகள் தேசியத்திற்காகப் போராடினார்களா? : கோசலன்

* எண்பத்தாறாமாண்டு இரண்டு ரெலோ இயக்கப் போராளிகள் திருனெல்வேலியில் மக்கள் முன்னால் புலிகளால் உயிருடன் தீயிட்டுக் எரிக்கப்பட்டனர். பதின்நான்கு வயது மட்டுமே நிரம்பியிருந்த கிழக்கு மாகணத்திலிருந்து போராடுவதற்காகவே புறப்பட்டவர்கள் ஏன் கொலைசெய்யப்படுகிறோம் என்று தெரியாமலே தீயிட்டுக் கொளுத்தப்பட்டனர்.

தொண்ணூறாம் ஆண்டு வட பகுதியில்ருந்து முஸ்லீம் மக்கள் இரவொடிரவாக வெளியேற்றப்பட்டனர். நூற்றாண்டுகளாக மதவழிபாடு தவிர்ந்த ஏனைய அனத்து சுக துக்கங்களிலும் தமிழ்ப் பேசும் ஏனைய பிரிவினரோடு இரண்டறக் கலந்திருந்த அவர்கள் துரோகிகளாகச் சித்தரிக்கப்பட்டு யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறுமாறு ஆயுத முனையில் கட்டளையிடப்பட்டனர். ... எங்கே போகிறோம் என்பது கூடத் தெரியாமல் மரண பயம் பின் தொடர் அவர்கள் தமது சொந்த மண்ணிடம் விடைபெற்ற சோக நிகழ்வு வன்னி முகாம்களில் மக்க்கள் அனுபவித்த துயருக்கு நிகரானது.

* ஆசிய, ஆபிரிக்க நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகள் என்று உலகத்தின் ஒவ்வொரு பிரதான சந்திகளிலும் ஒடுக்கப்பட்ட மக்களும் தேசிய இனங்களும் போராட்டங்களை நடத்துகின்றன. ஐரோப்பாவில் ஜனநாயகவாதிகள் உலகமக்களின் உரிமைக்காகக் குரலெழுப்புகிறார்கள்.
இவர்களில் எவரையுமே புலிகள் நண்பர்களகக் கருதியதில்லை. இந்தியாவில் சந்தர்ப்பவாத, மக்கள் விரோத அரசியல்வாதிகளோடும், உலக மாபியக் குழுக்களோடும், அதிகாரவர்க்கத்தோடும் தம்மை அடையாளப்படுத்திய புலிகள் ஈழப் போராட்டம் ஒடுக்கப்பட்ட ம்க்களின் போராட்டம் என்பதை உலக மக்கள் நம்ப மறுக்கும் அளவில் தேசியப் போராட்டத்தைச் சிதைத்துச் சீரழித்துள்ளார்கள். இவையெல்லாம் தேசிய விடுதலையின் அடிப்படைப் பண்புகளுக்கு மாறானவை.
 
 இனியொரு..


The forced evacuation of Muslims in 1989: Some Reflections: - Nadesan Satyendra, 1996

The first matter is the whole question of the Muslim identity. In the 1880s, for instance, attempts were made by Tamil politicians, such as Sir Ponnambalam Ramanathan to show that Muslims were Tamils whose religion was Islam in the same way as other Tamils were Hindus or Christians.

In a paper entitled "The ethnology of the 'Moors' of Ceylon", read before the prestigious Ceylon Branch of the Royal Asiatic Society, Ramanathan contended, advancing physical, social and cultural evidence in his support, that the Muslims originated from South India and were of the same race as the one to which he belonged: in short, the Muslims were really a group of Tamils who had embraced a new religion, Islam. (Collective Identities, Nationalisms and Protest in modern Sri Lanka, edited Michael Roberts).

THE EXPULSION AND EXPROPRIATION OF MUSLIMS IN THE NORTH: - UTHR(J)

The Muslims from Puthukudiruppu, Tharapuram, Uppukulam and Erukkalampiddy were taken to the beach at a place near Erukkalampiddy known as `Five Coconut Trees', and were left there until they could find boats. They had to spend nights in the open in rainy weather with no conveniences and no boutique to obtain food and water. 

Sunday, 21 June 2020

Pottuvil massacre 17 Sep 2006: LTTE behind Pottuvil massacre: Sole survivor


The funerals of 11 murdered Muslims have taken place in eastern Sri Lanka.

Their bodies were found after they had apparently gone to repair an irrigation system. Local Muslims have called for an inquiry into how the men died.

Hundreds of angry Muslims earlier gathered outside a mosque in Ampara where the bodies were displayed.
The government accused the Tamil Tigers of the killings, but the rebels have blamed the army, pointing out that they happened in a government-held area

Saturday, 20 June 2020

Massacres of Muslims and what it means for the Tamils:- Rajan Hoole Uthr(J)

The historic role of the minorities

The Three bills of 1948/49 which deprived the Hill Country(Indian) Tamils of the vote and virtually consigned them  to serfdom were supported by most MPs from the two main remaining minority communities - the Ceylon Tamils and the Muslims. Had it not been for this betrayal of a fellow minority community, the UNP government of the day would have been hard put to justify and secure the passage to these bills. Ironically the strongest and intellectually incisive opposition to these bills came from the mostly Sinhalese Left opposition. This says much about the nature of the state and the leadership of the minorities that remains true to this day. The significance of the event itself was largely ignored, thus passing lightly over a portent of today's state of affairs. Most Ceylon Tamils would date the beginning of evils to 1956(the Sinhala Only Act) or the early 70s(standardisation & the 1972 constitution). This signifies a dangerous self-centredness.

Thursday, 18 June 2020

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களும், படுகொலைகளும்:- ஜான்ஸன்

முஸ்லிம் மக்கள் ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில்தமிழ் குறுநல தேசியவாதமும்  இனவாத அரசியலும்  அவர்களை படுகொலை செய்தது முதல் வெளியேற்றியது வரையான காரியங்களைச் செய்தது. எல்லா குறுந்தேசிய இனவாதிகளும் முஸ்லிம்களை மதம் என்ற அடிப்படையில் தான் அடையாளப்படுத்திவன்முறையை கட்டமைத்தனர். முஸ்லிம் என்ற பதம் எப்படி வரலாற்று ரீதியாக கட்டமைக்கப்பட்டது என்ற ஆய்வு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. பாரம்பரியமாக வாழ்ந்து வந்த நாகத் தமிழ் மக்கள் மத்தியில் இஸ்லாம் ஒரு மதத் தத்துவவியலாக வந்த போதுஅதை உள்வாங்கிக் கொள்வது இயற்கையாக இருந்தது. ஆனால் இந்தியாவிலிருந்து இங்கு வந்து குடியேறிய பல் தெய்வ வணக்க வழிபாடுகளைக் கொண்ட இந்துக்களால் ஏகதெய்வ கொள்கையை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

Sunday, 7 June 2020

காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும்

அப்துல்லாஹ்-
 August 04, 2011

1990 ஆகஸ்ட் 3ஆம் திகதி இன்றைக்கு 21 வருடங்களுக்கு முன்பு வழமை போல காத்தான்குடியைச் சேர்ந்த முஸ்லிம்கள் இஷா தொழுகையை பள்ளிவாசல்களில் தொழுதுகொண்டிருந்தனர். நடக்கப்போகும் விபரீதத்தை அறியாமல் மீரா ஜூம்ஆ பள்ளி மற்றும் ஹூசைனியா பள்ளிவாசல்களிலும் நூற்றுக்கணக்கானோர் தொழுது கொண்டிருந்தனர். மறுபுறம் தமிழ்ப்புலிகளில் ஆயுததாரிகள் முப்பதுக்கும் மேற்பட்டோர் காத்தான்குடிக்குள் ஊடுறுவி அங்கு இரண்டாக பிரிந்து ஒரு குழு மீராப்பள்ளி நோக்கியும் மற்றது ஹூசைனியாப் பள்ளி நோக்கியும் சென்றது. 

Saturday, 6 June 2020

மன்னிப்புக் கோர வேண்டியவர்கள் யார்?

1990ஆம் ஆண்டு வடதமிழீழத்தில் இருந்து முஸ்லிம்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேற்றியது ஓர் இனச்சுத்திகரிப்பு என்றும், இதனையிட்டுத் தான் வெட்கித் தலைகுனிவதாகவும் இராஜவரோதயம் சம்பந்தரின் பட்டத்து வாரிசான மதியாபரணம் ஏபிரகாம் சுமந்திரம் வெளியிட்ட கருத்து பலத்த சலசலப்புக்களை தோற்றுவித்திருக்கின்றது.

Friday, 5 June 2020

“முடங்கிப்போய் நிற்கும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்: தடையாக நிற்கும் தமிழ்-முஸ்லிம் மீளொருங்கிணைப்பு”


கலாநிதி எம். எஸ். அனீஸ்சிரேஷ்ட விரிவுரையாளர்:
யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் முழுமையாக முற்றுப்பெற்றுள்ளன. அகதிகள் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் என்போரின் மீள்குடியேற்றப் பணிகள் பலமட்டங்களிலும் பல்வேறு பிரிவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்த ஏறத்தாள 300,000 மேற்பட்ட வன்னித்தமிழ் மக்களை முடியுமானவரை வேகமாக மீள்குடியேற்றம் செய்துவிட்டதாக அரசாங்கம் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் மார்தட்டிக்கொள்கின்றது.

எல்.ரீ.ரீ.ஈ யினால் இனசுத்திகரிப்பு செய்யப்பட்ட வடபகுதி முஸ்லிம்கள் -டி.பி.எஸ்.ஜெயராஜ்

வெளியேற்றப் பட்ட சில முஸ்லிம்களின் உயர்ந்த பண்புகளில் ஒன்றாக நான் காண்பதுதமிழர்கள் மீது அவர்களுக்கு வெளிப்படையான காழ்ப்புணர்ச்சி குறைவாக இருப்பதையே. தங்களது இக்கட்டான நிலமைக்கும் அதற்கான காரணத்துக்கும் பொறுப்பானவர்கள் எல்.ரீ.ரீ.ஈ யினரே என அவர்கள் உணர்ந்துள்ளார்கள். சாதாரண தமிழர்களை அவர்கள் அதற்காக பழி சொல்வதில்லை. அரசாங்கத்தினதும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யினதும் கரங்களில் அகப்பட்டு அல்லல் படும் தமிழர்களின் நிலையை கண்டு அவர்களும் தமிழர்களுக்காக பரிதாபப் படுகிறார்கள்''.

வந்தாறுமூலை அகதிகளும் வந்தாறாத மன வடுக்களும் ! - எஸ்.எம்.எம்.பஷீர்

உலகத்தில் நாட்டில் சமூகத்தில் மனிதர்கள் படும் துயரை நினைத்து இரங்கி ஒரு துளி கண்ணீர் உன்னிடம் வராவிடின்;; எதற்காக நான் பாடிகொண்டிருக்கிறேன்.
என் பாடல் உன்துயரை துடைக்காது மேலும் மூட்டி விடுமாயின் நான் பாடாமல் ஊமையாக இருந்து விடுகிறேன்” 
குணதாச கபுகே (மறைந்த பிரபல சிங்கள பாடகர்)
1990 ஆம் ஆண்டு போர்ச் சூழலின் காரணமாக பாதுகாப்பு கருதி மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ் குடும்பங்களின் 174 இளைஞர்கள் அவ்வாண்டு செப்டெம்பர் 5 ஆம் திகதியும் 23ம் திகதியும் சீருடை அணிந்தவர்களால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டவர்கள் இன்றுவரை விடுதலை செய்யப்படவில்லை.