கலாநிதி எம். எஸ். அனீஸ், சிரேஷ்ட விரிவுரையாளர்:
யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் முழுமையாக
முற்றுப்பெற்றுள்ளன. அகதிகள் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் என்போரின்
மீள்குடியேற்றப் பணிகள் பலமட்டங்களிலும் பல்வேறு பிரிவினர்களால்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்த ஏறத்தாள 300,000 மேற்பட்ட வன்னித்தமிழ் மக்களை முடியுமானவரை
வேகமாக மீள்குடியேற்றம் செய்துவிட்டதாக அரசாங்கம் தேசிய மற்றும் சர்வதேச
மட்டத்தில் மார்தட்டிக்கொள்கின்றது.