தினமணி பத்திரிகையில் பாவை
சந்திரன் எழுதிய ''ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'' தொடர் ..
Showing posts with label ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு. Show all posts
Showing posts with label ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு. Show all posts
Wednesday, 8 July 2020
Sunday, 31 May 2020
ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு 175 - 177
175: புலிகளைத் தாக்கிய ஆழிப்பேரலைகள்!
விடுதலைப் புலிகள் அமைப்பின்
கட்டுக்கோப்பு என்பது கருணாவின் நடவடிக்கையால் குலைந்தது. கிழக்கு
புறக்கணிக்கப்படுகிறது என்ற புகாரைக் கூறி விடுதலைப் புலிகள்
அமைப்பிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.
ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு 170 - 174
170: "நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம்!'
பிரபாகரன் பேட்டி தொடர்கிறது...
""சமாதானப் பேச்சுக்கு அமெரிக்கா இடையூறு செய்கிறதா?''
""நான் அப்படி நினைக்கவில்லை''
""மேற்குலக நாடுகள் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதித்ததால்
ஆயுதங்கள் பெறமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு சமாதானத்துக்கு வந்ததாகக்
கருதலாமா?''
""ராணுவத்தினருடன் நடத்தும் மோதல் மற்றும் போர்களில் இருந்தே
எமக்கு ஆயுதங்கள் கிடைக்கின்றன. ஆனையிறவுத் தாக்குதலிலும், முல்லைத்தீவு தாக்குதல்களிலும் சிறியரக ஆயுதங்களில் இருந்து கனரக ஆயுதங்கள்
வரை பெற்றிருக்கிறோம்''
ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு 166 - 169
166: நார்வேயின் சமாதான முயற்சி!
"ஈழ வரலாற்றில்,
சமாதானப் பேச்சுவார்த்தையில் நார்வே
நாடு கலந்துகொண்டது தற்செயலாக ஏற்பட்ட ஒரு திருப்பம் என்றுதான் கூறவேண்டும்.
அமெரிக்கா-சோவியத் நாடுகளிடையே நிழல்யுத்தம் நிலவி வந்த நிலையிலும்கூட, மேற்கத்திய நாடுகளின் பக்கமே இருந்தபோதிலும்,
ரஷியாவுடன் நார்வேக்கு எந்தப் பிணக்கும்
இல்லை. அதேபோன்று, ஸ்வீடன், பின்லாந்து போன்ற அண்டை நாடுகளுடனும் மோதல் கிடையாது.
ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு 161 - 165
ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு 161 - 165
161: மாத்தையாவுக்கு மரண தண்டனை!
புலிகளுக்கும், சந்திரிகா அரசுக்கும்
இடையிலான பேச்சுவார்த்தையின்
அடிப்படையிலேயே சில கருத்து வேறுபாடுகள்
காணப்பட்டன. சந்திரிகா அரசு, பொருள் போக்குவரத்தை மட்டுமே முக்கிய அமசமாகக் கருதியது.
புலிகளோ, பொருளாதாரத் தடையை முற்றிலுமாக நீக்குவதை பிரதானமாக்க முடிவு செய்திருந்தனர்.
ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு 157- 160
157: யாழ்ப்பாணத்தில் பொருளாதாரத் தடை!
இலங்கை அரசு ராணுவத்துக்காக மட்டும்
தினந்தோறும் 4 கோடி ரூபாய்
செலவிடுகிறது. இந்தச் செலவு என்பது, தமிழர்களை
ஒடுக்கத்தான் பயன்படுத்தப்படுகிறது. இதனைச் சமாளிக்க கொரில்லா யுத்தம்
தொடங்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கில் போராளிகளைக் கொண்ட ஓர் இயக்கமாக, அமைப்பாக, மரபுவழி ராணுவமாக உருமாற்றம் பெற்ற விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான
மாதச் செலவு 6 கோடி ரூபாய் ஆகிறது.
Saturday, 30 May 2020
ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு 150 156
150: புலிகள் - முஸ்லிம்கள் உறவு!
"இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் அனைவருமே தமிழ் பேசும்
முஸ்லிம்கள் ஆவார்கள். மதத்தால் வேறுபட்டவர்களே தவிர மொழியாலும் இனத்தாலும்
முழுக்க, முழுக்க தமிழர்களே ஆவார்கள். உருது, அரபி, பாரசீகம் மற்றும்
மலாய் பேசும் முஸ்லிம்கள் தமிழீழத்துக்கு வெளியே, கொழும்பு நகரை ஒட்டி, குறைந்த எண்ணிக்கையில் வாழ்ந்து வருவதை ஆரம்ப அத்தியாயங்களில்
குறிப்பிட்டுள்ளோம்.
தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுப்
பூர்வமான தாயகம் என்று அழைக்கப்படுகிற
பகுதியில்தான் அவர்கள் வாழ்கிறார்கள்.
எனவே உருவாகப்போகும் தமிழீழ நாட்டின்
பிரிக்க முடியாத அங்கமாகத்தான் அவர்கள்
திகழ்கிறார்கள்' இவ்வாறு புலிகள் -
முஸ்லிம்கள் உறவு குறித்து "தென்
செய்தி' வெளியீடு எண் 8
கூறுகிறது.
ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (143-149)
ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு 143 149
143: இந்தியாவில் அரசியல் மாற்றம்!
அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேற
நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில், அவ்வாறு நடந்து கொண்டிருக்கவும்,
அமைதிப்படையால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய ராணுவத்தினருடன் ஏற்படப் போகும் மோதலைத் தவிர்க்க
பிரபாகரன் விரும்பினார். எனவே,
அவர் இருவகையான யோசனைகளை வெளியிட்டார்.
ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (137-142)
137: பிரபாகரன் கொலையுண்டதாகப் புரளி!
அமிர்தலிங்கத்தின் கொலையை இந்திய
அமைதிப் படை பிரசார நோக்கிற்காகப்
பயன்படுத்திக் கொண்டது. அமைதிப் படை
இருக்கும்போதே கொலை நிகழ்கிறது
என்றால்,
அமைதிப் படை இல்லாத நிலையை நினைத்துப்
பார்க்க முடியவில்லை என்று
கூறியது.
ஆனால் உண்மையில் இந்தக் கொலை என்பது
கொழும்பு நகரில், இலங்கையின்
தலைநகரில் நடந்திருக்கிறது. அமைதிப் படை
இருப்பதோ வடக்கு-கிழக்கில்.
இருந்தாலும் மேற்கண்ட வாதம்
முன்னெடுக்கப்பட்டது.
ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (131-136)
131: ஆட்சிகள் மாறின;
காட்சிகளும்!
தனது ஆட்சிக்காலத்தில் எந்த அளவுக்கு, தமிழர்களின் உரிமைகளை
ஒடுக்க முடியுமோ, ராணுவம் மற்றும் காவல்துறைகளைப் பயன்படுத்தி எவ்வளவு கொடுமைகளை இழைக்க முடியுமோ,
அந்தளவுக்கு செயலாற்றிய இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா,
அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.
(டிசம்பர் 1988)
ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (123-130)
ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (123-169)
ஆக்கம்: பாவை சந்திரன்
பிரபாகரன் எழுதிய கடிதங்களின்
தொடர்ச்சியாக சென்னையில் தங்கியிருந்த கிட்டு பத்திரிகையாளர்களுக்கு
அவ்வப்போது விடுதலைப் புலிகளின் நிலை குறித்து பேட்டியளித்தார்~
ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (118-122)
118: புலிகளின் எதிர்த் தாக்குதல்!
அக்டோபர் 10-ஆம் தேதி மோதல்
தொடங்கப்பட்டதன் நோக்கம், விடுதலைப் புலிகள்
தலைவர் வே.பிரபாகரனை சிறைப்பிடிப்பது
அல்லது சுட்டுக் கொல்வது என்பதே!
தலைமையைக் குறி வைத்து அழித்துவிட்டால்
விடுதலைப் புலிகள் அமைப்பு
சிதறிவிடும் என்பது திட்டம்.
ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (111-117)
111: புலேந்திரன்,
குமரப்பா தற்கொலை!
சிங்களக் கடற்படையினரால் ஆயுதம்
கடத்துவதாகக் கூறி, படகைச் சுற்றி
வளைத்துக் கைது செய்யப்பட்ட குமரப்பா, புலேந்திரன்
உள்ளிட்டோர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அமைதிப்படைத் தலைவருக்கும், இந்திய தூதுவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது என்று அவர்கள் சொன்னதை சிங்களக்
கடற்படையினர் சட்டை செய்வதாக இல்லை.
ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (103-110)
103: இந்தியாவை நேசிக்கிறேன்!
ஒப்பந்த நகல் எரிப்புப் போராட்டத்தில்
கைது செய்யப்பட்டவர்கள் அன்று மாலையே
விடுதலை செய்யப்பட்டனர். பழ.நெடுமாறன்
சென்னை வந்ததும் அவரிடமும், கி.வீரமணியிடமும்,
விடுதலைப் புலிகள் ஆலோசகர்
ஏ.எஸ்.பாலசிங்கம், நடேசன், பேபி சுப்ரமணியம் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.
ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (100-102)
100: ராஜீவ் காந்தி தாக்கப்பட்டார்!
1987 ஜூலை 29 அன்று இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவும் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் இணைப்பாக சில
அம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்தன.
ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (96-99)
96: எம்.ஜி.ஆருடனான கடைசி சந்திப்பு
உங்களுடைய ஒத்துழைப்போ, ஆதரவோ
இல்லாவிட்டாலும் ஒப்பந்தம் கையெழுத்தாவது
உறுதி என்கிற வெளியுறவுச் செயலர் தீட்சித்தின்
பேச்சிலேயே வெறுப்படைந்து
விட்டிருந்த பிரபாகரன், அந்தமானில் சிறை
வைக்கப்படுவீர்கள் என்று அவர்
சொன்னதைக் கேட்டு அதிர்ந்தார்.
Subscribe to:
Posts (Atom)