Showing posts with label ஊர்காவல் படை. Show all posts
Showing posts with label ஊர்காவல் படை. Show all posts

Thursday, 11 June 2020

இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்;- பாகம் 7 to 9


ஆயுதக் குழுக்களுடன் அமைதி காத்த இந்திய இராணுவம்
[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்] (பகுதி - 7)

இந்திய-இலங்கை ஒப்பந்தம், ஈழ விடுதலை இயக்கங்கள் உரிமை கோரிய வடக்கு-கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைத்தது. மாகாண சபைகள் அமைத்து, அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது என்றும் சம்மதிக்கப்பட்டது. சிங்களப் பகுதி மாகாணங்களுக்கும் அதிகாரப் பரவலாக்கல் சென்றதை, அன்று சில தமிழ் இனவாதிகளால் ஜீரணிக்க முடியவில்லை. முரண்நகையாக, தமிழர்களின் பிரச்சினை தீர்க்கவென கொண்டு வரப்பட்ட மாகாண சபை, இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தினால் வட- கிழக்கில் செயற்படாமல் முடங்கியது.