ஈழவிடுதலையின்
முன்னோடிகளில் ஒருவர் சபாலிங்கம். அவர் 1994 மே 1 அன்று பிரான்ஸ் இல்
அவரது வீட்டில் அவர் மனைவி பிள்ளைகள் முன்னிலையில் புலிகளினால் கொல்லப்பட்டார்
ஈழவிடுதலைப்
போராட்ட வரலாற்றின் உண்மை நிலையை தோண்டிப் புதைக்க நடத்தப்பட்ட கொலை
சபாலிங்கத்தின் கொலை. இலங்கை வாழ் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் மிதவாதப்
போக்கில் இருந்து ஆயுதம் தாங்கிய தீவிரவாதப் போராட்டமாக பரிணாமம் பெற்ற கால
கட்டங்களில் இப் போராட்டங்களில் நேரடியாக ஈடுபட்ட ஒரு போராளிதான் சபாலிங்கம்.