Sunday 31 May 2020

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு 161 - 165

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு 161 - 165
161: மாத்தையாவுக்கு மரண தண்டனை!
புலிகளுக்கும், சந்திரிகா அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் அடிப்படையிலேயே சில கருத்து வேறுபாடுகள் காணப்பட்டன. சந்திரிகா அரசு, பொருள் போக்குவரத்தை மட்டுமே முக்கிய அமசமாகக் கருதியது. புலிகளோ, பொருளாதாரத் தடையை முற்றிலுமாக நீக்குவதை பிரதானமாக்க முடிவு செய்திருந்தனர்.
அரசு பொருள் போக்குவரத்தை சரிசெய்ய முயன்றாலும், தாண்டிக்குளம் பகுதியில் உள்ள ராணுவச் சோதனைச்சாவடி அப்பொருள்களைத் தமிழர் பகுதிக்கும் கொண்டு செல்ல தடை விதிக்க, அதிகாரம் பெற்றிருந்ததுதான் புலிகளின் அதிருப்திக்குக் காரணம். ""தினசரி உபயோகமான தீப்பெட்டியும், சோப்பும், எண்ணெய் வகைகளும் கூட இவ்வாறு சோதனைச் சாவடியில் தடுக்கப்படுகிற நிலை. பாதுகாப்பு என்கிற பெயரில் குடையையும், ஷு பாலிஷையும் கூட தடுக்கிறார்கள். கடற்புலிகளின் ஆதிக்கத்தைத் தடுப்பதாகக் கூறி, கடலில் மீன்பிடித் தொழில் செய்வதைத் தடுக்கிறார்கள். இதன் காரணமாக நூற்றுக்கணக்கான மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோர் வறுமையில் உழல்கிறார்கள். இவ்வாறான தடைகள் மூலம், மக்களை கூட்டுத் தண்டனைக்கு உள்படுத்துவது, மனிதநேயத்துக்கு எதிரானது'' என்பது புலிகளின் கருத்தாக இருந்தது. ""பொருளாதாரத் தடையை நீக்குவதையே பேச்சுவார்த்தையின் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். சந்திரிகா தமிழர்களின்பால் அக்கறை கொண்டிருப்பதாகப் பேசுவது உண்மையென்றால், முந்தைய அரசு விதித்த அனைத்து தடைகளையும் நீக்குவதே சரியானதாகும் என்பதை எடுத்துச் சொல்லுங்கள்'' என்று பிரபாகரன் பேச்சுவார்த்தை குழுவினருக்கு உத்தரவிட்டார். இதன்படி பாலசிங்கம், சுப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் யாழ்ப் பல்கலைக்கழகத் திறந்தவெளித் திடலில், அரசுப் பிரதிநிதிகளை வரவேற்று சுண்டிக்குளத்திலுள்ள தலைமையகத்துக்கு அழைத்து வந்தார்கள். புலிகளின் பிரதிநிதிகள், பொருளாதாரத் தடையை நீக்குவது, போர் நிறுத்தம், குடா நாட்டில் இருந்து சுலபமாக வன்னிப் பகுதி சென்று வர சங்குப்பிட்டி-கீரைத் தீவு சாலைப் போக்குவரத்தைத் திறந்து விடுவது, இதுதொடர்பாக பூநகரி முகாமை அகற்றுவது உள்ளிட்டவற்றை வலியுறுத்திப் பேசினார்.
முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றாலும், அடுத்த கட்ட பேச்சுக்கான திட்டத்தில் அது சேர்க்கப்பட்டது. கரிகாலனும், பாலபட்டபெந்தியும் கையெழுத்திட்ட அறிக்கையும் அவற்றை உறுதிப்படுத்தியது. அறிக்கையில், கரிகாலன், சந்திரிகா அரசிடம் சுமுகமான நல்ல சூழலை நாடு எதிர்பார்ப்பதாகக் கூறியதுடன், வடக்கு - கிழக்கில் மக்கள் படும் துன்பங்களையும் எடுத்துரைத்ததாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. பிரதமரின் செயலாளர் பாலபட்டபெந்தி, சந்திரிகாவின் நல்லெண்ணத் தூதுவர்களாக வந்துள்ள தாங்கள், நல்லது செய்ய முயல்வோம் என்றும் உறுதி கூறியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. புலிகளின் பல்வேறு கோரிக்கைகள் உடனடியாகப் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். அடுத்த கட்ட பேச்சுவார்த்தை அக்டோபர் 24, 1994 என்று முடிவானது. அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை, குறிப்பிட்ட தேதியில் நடைபெறாமல் தள்ளிப் போனதற்கு காமினி திஸ்ஸநாயக்காவின் கொலை காரணமாக அமைந்தது. அதிபர் தேர்தல் நவம்பரில் நடைபெறுவதையொட்டி, காமினி திஸ்ஸநாயக்கா மீண்டும் யுஎன்பி கட்சியில் இணைக்கப்பட்டு, அதிபர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார். பிரதமராக இருந்த சந்திரிகா சுதந்திரக் கட்சியின் அதிபர் வேட்பாளரானார். அக்டோபர் 23-ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காமினி திஸ்ஸநாயக்கா மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார். யுஎன்பி என்கிற ஐக்கிய தேசியக் கட்சி, இக்கொலைக்கு புலிகளும் சந்திரிகா அரசுமே காரணம் என குற்றம் சாட்டியது. சந்திரிகா இக் கொலை குறித்து எதுவும் கருத்து தெரிவிக்காது இருந்தபோதிலும், எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்குப் பயந்து, 24-ஆம் தேதி நடைபெற இருந்த புலிகளுடனான பேச்சு வார்த்தையைத் தள்ளி வைத்தார்.
காமினி திஸ்ஸநாயக்காவின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது மனைவி ஸ்ரீமா திஸ்ஸநாயக்கா அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தல் அட்டவணைப்படி நவம்பர் 9-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. யாழ்ப்பாணம் தவிர்த்து நடைபெற்ற தேர்தலில் 62 சத வாக்குகளைப் பெற்று சந்திரிகா இலங்கையின் அதிபரானார். (நவம்பர் 12). மக்களுக்கு சந்திரிகா விடுத்த செய்தியில், ""அமைதியை விரும்பும் பெரும்பான்மையான மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற உழைப்பேன்'' என்று அறிவித்தார்.
சந்திரிகா அதிபரான நிலையில், அதனை வரவேற்கும் விதமாக புலிகள் இயக்கம் நவம்பர் 12 முதல் 19-ஆம் தேதி வரை போர் நிறுத்தம் அறிவித்தனர். ஆனால் இந்தப் போர் நிறுத்தத்தை சந்திரிகா கண்டுகொள்ளவில்லை. மாறாக ராணுவ நடவடிக்கைகள் தீவிரமாயிற்று. வன்னிப் பகுதியில் உள்ள நெடுங்கேணியில் நடைபெற்ற தாக்குதலில் லெப்டினன்ட் கர்னல் அமுதன் கொல்லப்பட்டு, அவரது தலையைத் துண்டித்து, ராணுவத்தினர் எடுத்துச் சென்றனர்.
செஞ்சிலுவைச் சங்கம் மூலம், சுப.தமிழ்ச்செல்வன் அமுதனின் (மல்லி) துண்டிக்கப்பட்ட தலையை தங்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியிருந்தார். "அதுமட்டுமன்றி சந்திரிகா அதிபரானதையொட்டி, நல்லெண்ண நடவடிக்கையாக ஒருவார போர் நிறுத்தம் அறிவித்தப் புலிகளுக்கு சிங்கள ராணுவம் அளித்த பரிசு இதுதானா?' என்றும் கேட்டிருந்தார். இதற்குப் பதலிளித்த துணைப் பாதுகாப்பு அமைச்சர் கர்னல் அனுருத்த ரத்தவத்தே, போர் நிறுத்தம் குறித்து தங்களுக்குத் தெரியாது என்றும் சிதைந்த நிலையில் இருந்த அமுதனின் தலை எரியூட்டப்பட்டது என்றும், அதன் சாம்பலை அனுப்பியுள்ளதாகவும் கடிதம் மூலம் தெரியப்படுத்தினார். இந்தக் கடிதத்துக்கு வே.பிரபாகரனே பதில் எழுதினார். அந்தப் பதிலில், ""எங்களது ஒருவார போர் நிறுத்தம் குறித்து செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அதிபருக்குத் தெரிவித்துவிட்டு, பத்திரிகைகளுக்கு செய்தி அளித்து, அவை உள்ளூர் மற்றும் உலகப் பத்திரிகைகளிலும், ஊடகத்திலும் வெளிவந்துள்ளதை நினைவூட்டுகிறேன். அரசின் புதிய நிலை எங்களுக்கு அதிர்ச்சியூட்டுகிறது. அமுதன் தலை துண்டிக்கப்பட்டு, எரிக்கப்பட்ட செய்தி எங்களை கோபமூட்டச் செய்யப்பட்ட ஒன்றாகும். இது அமைதியை விரும்பும் அதிபரின் நிலைக்கு எதிரானதாகும். எனவே நடந்த சம்பவத்துக்கு உரிய விசாரணையை உடனே மேற்கொண்டு, எமக்குத் தெரிவிக்க வேண்டும்'' என்றும் அமைச்சர் அனுருத்த ரத்தவத்தேயிடம் வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த துணை பாதுகாப்பு அமைச்சர் கர்னல் அனுருத்த ரத்தவத்தே சிங்களத் தலைவர்களின் கொலைகளுக்குப் புலிகளே காரணம் என குற்றம்சாட்டினார். இதனால் வெகுண்ட பிரபாகரன், சிங்களத் தலைவர்களின் ஒப்பந்த மீறல், 60 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டது, பொருளாதாரத் தடை விதித்ததன் மூலம் அன்றாடம் பல சாவுகளுக்குக் காரணமானது எல்லாமே சிங்களத் தலைவர்கள்தான் என்று குறிப்பிட்டு, கடுமையான வார்த்தைகளில் ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று பாலசிங்கத்திடம் வலியுறுத்தினார்.
பிரபாகரனை சமாதானம் செய்த பாலசிங்கம், ""அரசியல் ரீதியாக அவர்களை வெற்றி கொள்ள நிரந்தரத் தீர்வுக்கு வழிவகுக்கும்படிதான் அவர்களுக்குக் கடிதம் எழுத வேண்டும்'' என்று கூறினார்.
அதன்படி எழுதப்பட்ட கடிதத்திற்கு, ""1995 ஜனவரி முதல் இரு வாரங்களுக்குப் போர் நிறுத்தம் கடைப்பிடிக்கலாம்'' என்று அனுரத்த ரத்தவத்தே பதில் எழுதினார். அக்கடிதத்தில், ஜனவரி 2-ஆம் நாள், அரசுப் பிரதிநிதிகள் வந்து பேசி ஓர் ஒப்பந்தத்திற்கு வருவார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மாத்தையா (மகேந்திரராசா) மீது பல்வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதில், வேலூர் சிறையிலிருந்து தப்பியப் பிரபாகரனின் முன்னாள் மெய்க்காவலர் மூலம், பிரபாகரனைக் கொலை செய்யவும் திட்டம் இருந்தது என்றும், அதன் பிரகாரமே சிறையிலேயே தயாரிக்கப்பட்டு, அவர் ரகசியமாக விடுவிக்கப்பட்டார் என்றும், அவர் தப்பி வந்ததாகக் கூறியதை நம்பி அவர் மீண்டும் முக்கிய இடத்தைப் பிடித்தார் என்பதும்கூட விசாரணையில் தெரிய வந்தது. மாத்தையாவின் கொழும்புப் பயணங்கள், இந்திய உளவுத்துறை அதிகாரிகளுடன் அவருக்குள்ள தொடர்பு எல்லாமே விசாரணையில் வெளிவந்தன. இறுதியில் மாத்தையாவுக்கு 1994-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது.
திட்டமிட்டபடி மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது. 1995, ஐனவரி 2-ஆம் தேதி, சிங்களக் கடற்படையின் உயர் அதிகாரி பிரிகேடியர் ஏ.எஸ். பீரிஸ், காப்டன் பிரசன்னா ராஜரத்னே மற்றும் விடுதலைப் புலிகள் சார்பில் சுப. தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்துபேசி, புலிகள், சிங்களப் படை இரண்டில் யார் யுத்தத்துக்கு முயன்றாலும் அதுகுறித்து 72 மணி நேரத்துக்கு முன்பே தெரிவித்து விட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு, அதுவே ஒப்பந்தமாக உருவாகி, யாழ்ப்பாணத்தில் இருந்தபடியே பிரபாகரனும், கொழும்பில் இருந்தபடியே சந்திரிகாவும் கையொப்பமிட்டனர்.
இதே ஒப்பந்தத்தில் போர் நிறுத்தத்தைக் கண்காணிக்க குழு அமைப்பது என்றும், யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத் தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய 6 பகுதிகளில் குழு அமையும் என்றும், இதில் அரசுத் தரப்பில் இருவரும், புலிகள் தரப்பில் இருவரும், உலக நாடுகளின் பிரதிநிதி ஒருவர் குழுவின் தலைவராகவும் இருந்து கண்காணிப்பார் என்றும் முடிவாயிற்று.
இந்த ஒப்பந்த நடவடிக்கைகளில் நடுவராகவும், கடிதப் பரிமாற்றத்துக்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமே உதவி செய்தது.
162: பிரபாகரன் விதித்த கெடு!
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில், ஆறு பகுதிக்கும் ஆறு வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இருக்க வேண்டும். ஆனால் நான்கு பிரதிநிதிகள் மட்டுமே இருந்தனர். அதிலும்கூட, இரு வெளிநாட்டுப் பிரதிநிதிகளை புலிகளுக்கு அறிமுகம் செய்யாமலேயே திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை பகுதிகளுக்கு அரசு அனுப்பி வைத்தது. இதுகுறித்த ஆட்சேபணையை சுப. தமிழ்ச்செல்வன் எழுப்பிய போது, ஜனவரி 17-ஆம் தேதி அவர்களை அனுப்பி வைப்பதாக சந்திரிகா தெரிவித்தார்.
இந்நிலையில் கிழக்கு மாவட்டங்களில் புலிகளின் கொரில்லாப் பிரிவினர் நடமாட சிங்கள ராணுவம் கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்தது. ஆயுதம் எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டது. அதுமட்டுமன்றி, கடலிலும் சில பகுதிகளில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டது. இரவில் கண்டிப்பாக மீன்பிடிக்கக் கூடாது என்றும் ஜனவரி 9-ஆம் தேதி முதல் தடை செய்யப்பட்டது. இதுபோன்ற நடவடிக்கைகள் அமைதிச் சூழலை சீர்குலைக்கும் என்று புலிகள் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது. பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தத் தடை என்று சொல்லப்பட்டாலும், அப்படியொரு தாக்குதல் நடவடிக்கை ஏதுமில்லை. மீன் பிடிப்பது என்பது ராணுவம், கடற்படைத் தளம் அமைந்துள்ள பகுதிகளில் மட்டுமே தடை செய்யப்பட்டதை புலிகள் ஏற்றுக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், ஜனவரி 14-ல் மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை அதே இடத்தில், அதே இருதரப்புப் பிரதிநிதிகளிடையே நடைபெற்றது. அப்போது நிர்ணயிக்கப்பட்ட அட்டவணைப்படி பேச்சு அமையாமல் கிழக்கில் புலிகள் தங்கள் பாதுகாப்புக்காக ஆயுதம் வைத்திருப்பதைத் தடுப்பது, கடலில் புதிதாக விதிக்கப்பட்ட தடை, அதே போன்று இரவிலும் மீன்பிடிக்கக் கட்டுப்பாடு விதித்தது போன்ற விஷயங்களில் முக்கிய அம்சமாயிற்று.
மீன் பிடிப்பது தடை செய்யப்பட்டிருப்பதற்குக் காரணம் கடற்புலிகளின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தத்தான் என்று அதிபரின் செயலாளர் வெளிப்படையாக ஒத்துக்கொண்டார். அதேபோன்று பூநகரி முகாமை அப்புறப்படுத்த இயலாது என்றும், பொதுமக்கள் பயணிக்க 600 மீட்டர் இடைவெளி விட்டு ராணுவம் உள்வாங்கும் என்றும், அதேசமயம் அந்த வழியே செல்பவர்கள் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுவர் என்றும் பாலபட்டபெந்தி தெரிவித்தார். மீன்பிடித் தடை குறித்தும், கிழக்கில் புலிகள் ஆயுதத்துடன் நடமாடும் உரிமை குறித்தும், அரசிடம் பேசுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால் அரசுத் தரப்பில் எந்த நடவடிக்கையும் இதுகுறித்து எடுக்கப்படவில்லை. இது போர்நிறுத்தச் சூழல் குறித்த ஒப்பந்தத்தையும், அமைதிச் சூழலையும் சீர்குலைக்கும் என்று தமிழ்ச்செல்வன் மீண்டும் சந்திரிகாவுக்கு கடிதம் எழுதினார். பதிலாக சில பொருள்களுக்குத் தடை நீக்கப்பட்டிருப்பதான கடிதம் ஒன்றை சந்திரிகா அனுப்பி வைத்தார். அதில் விளையாட்டுப் பொருள்கள், பொம்மைத் துப்பாக்கிகள், மின்சார வயர், மின்சாரம் மற்றும் எலெக்ட்ரானிக் பொருள்கள், பொம்மைகள், அலுமினியம் பொருள்கள், சணல் பைகள், பால் பேரிங்குகள், மோட்டார் உதிரிப் பாகங்கள், அச்சு எந்திரம், அதன் உதிரி பாகங்கள், அச்சுப் பொருள்கள், தங்கம், ரசாயனப் பொருள்கள், பேட்டரிகள் அனைத்து வகையும் அடங்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இறுதியாக பிப்ரவரி 5-ஆம் தேதி போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் வெளிநாட்டுப் பிரதிநிதிகள், அதுன்ஹோல்ம், ஜோகன் காபிரியல்சன் (நார்வே), பால் ஹென்றி ஹோஸ்டிங் (நெதர்லாந்து), மேஜர் ஜெனரல் கிளைவ் மில்னர் (கனடா) ஆகியோர் ஹெலிகாப்டர் மூலம் யாழ்ப்பாணத்தில் உள்ள செயின்ட் ஜான் கல்லூரி திடலில் வந்து இறங்கினர். அவர்களை பிரபாகரன், தமிழ்ச்செல்வன், பாலசிங்கம் உள்ளிட்டோர் வரவேற்று, சுண்டிக்குளியிலுள்ள தங்களது தலைமை நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
வெளிநாட்டுப் பிரதிநிதிகளை பிரபாகரனே நேரில் வந்து வரவேற்றார். அவரை நேரில் சந்திக்க கிடைத்த வாய்ப்பைக் கண்டு அவர்கள் வியந்தனர். விடுதலைப் புலிகள் இயக்கம் பூரண ஒத்துழைப்பு கொடுக்கும் என்று அவர்களிடம் பிரபாகரன் உறுதியளித்தார். போர் நிறுத்தத்தைக் கண்காணிக்க உறுப்பினர்களை அனுப்பி வைத்த அவர்களது நாட்டுத் தலைவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். இவர்களின் ஆலோசனைக் கூட்டம், மூடப்பட்ட தனி அறையில் நடைபெற்றது.
இச் சந்திப்பின்போது அரசுப் பிரதிநிதியாக பிரிகேடியர் பீரிஸ் இருந்தார். புலிகள் மற்றும் அரசுப் பிரதிநிதிக்கு, வெளிநாட்டுப் பிரதிநிதிகள் நன்றி தெரிவித்துக் கொண்ட அதேவேளையில், "எந்தப் பிரச்னையானாலும் இருவரும் தாமதிக்காமல் எங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்தால், பிரச்னைகள் நீண்டுகொண்டே போவதைத் தவிர்க்கலாம்' என்றும் கூறினர்.
இருதரப்பினரும் அதுநாள் வரை செய்த போர் நிறுத்த மீறல்களை, அவர்களது கவனத்திற்குக் கொண்டு வந்தனர். இதரப் பகுதிகளுக்கும் நெதர்லாந்து, கனடா நாட்டுப் பிரதிநிகளையே நியமிக்கலாம் என்று புலிகள் கருத்து தெரிவித்தனர்.
பொருளாதார நெருக்கடியைத் தீர்க்காமல், மீன்பிடி உரிமையைத் தராமல், புலிகள் ஆயுதங்கள் வைத்திருப்பதைத் தடுக்கும் நிலையில், யாழ்குடாவில் இருந்து வவுனியா பகுதிக்குத் தாராளமாகச் சென்று வர வழி ஏற்படுத்தாத நிலையில்,
சந்திரிகா, இனப் பிரச்னைக்குத் தீர்வு காண உகந்த நேரம் வந்துவிட்டதாகவும், ஹைதி, எத்தியோப்பியா நாடுகளில் பிரெஞ்சு நாட்டின் தூதுவராக இருந்து ஓய்வுபெற்றுள்ள ஃபிராங்காய்ஸ் மிச்சலை நடுவராகக் கொண்டு பேசலாம் என்றும், இந்தப் பேச்சு வார்த்தை ரகசியமாக இருக்கும் என்றும், அவர் தற்போது கொழும்பில் இருப்பதால், இதுகுறித்த புலிகளின் கருத்துகளைத் தெரிவித்தால் நல்லது என்றும், வேண்டுமானால் மிச்சலை யாழ்ப்பாணம் அனுப்பி வைப்பதாகவும் பிரபாகரனுக்கு கடிதம் அனுப்பியிருந்தார் (20.2.1995).
இந்தக் கடிதம் கிடைத்ததும், தங்களின் கோரிக்கைகளான அன்றாடப் பிரச்னைகள் தீர்வு, மீன்பிடி உரிமை மற்றும் போர்நிறுத்தக் கண்காணிப்பை நடைமுறைப்படுத்திய பிறகு இனப் பிரச்னைக்குத் தீர்வு காணலாம் என்றும், அப்படியே பேசினாலும் அந்த முயற்சிக்கு பிரெஞ்சுக்காரர் தேவையில்லை என்றும், பிரச்னையைத் தீர்க்க மூன்றாவது நபர் தேவையில்லை என்றும், அப்படியே தேவைப்பட்டாலும் இருவரும் ஏற்கத்தக்க ஒருவரைப் பிறகு பேசி முடிவு செய்யலாம் என்றும்-பேச்சுவார்த்தை மற்றும் மத்தியஸ்த முயற்சிகள் நடக்கும்போது, வெளிப்படையாக நடப்பதையே தாங்கள் விரும்புவதாகவும் புலிகள் தரப்பில் தெரிவித்தனர்.
இந்தச் செய்திகள் கொழும்பு மற்றும் யாழ்ப்பாண பத்திரிகைகளில் செய்தியாகக் கசிந்த நிலையில், இதுகுறித்து பத்திரிகையாளர் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டு, நிலைமையைப் புலிகள் விளக்கினர். இந்தச் செய்தி ஆங்கிலத்தில் இருந்து தமிழாக்கப்பட்டு, அவ்வாறான தமிழாக்கத்தை, மீண்டும் ஆங்கில வடிவமாக்கி லண்டன் அலுவலகம் மூலம் சர்வதேசப் பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
இதில் தான் சொல்லாதது வெளிவந்ததாக சந்திரிகா, பிரபாகரனுக்குக் கடிதம் எழுதினார். மேலும் அந்தக் கடிதத்தில், பேச்சுவார்த்தை நடத்த வேறு எந்த நாட்டுப் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதைத் தெரிவித்தால் நல்லது என்றும், அதுகுறித்துப் பேச எமது பிரதிநிதிகள் ஏப்ரல் 2 முதல் 10 தேதிகளுக்குள் வந்து சந்திப்பார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
ஆனால் எந்தப் பிரச்னையும் தீராத நிலையில், போர் நிறுத்தத்தையே நடுநிலையாகக் கண்காணிக்க முடியாத நிலையில் இனப் பிரச்னைக்குத் தீர்வு காண நேரம் வந்துவிட்டதாகப் பேசுவதும், அதற்கான பிரதிநிதியைத் தேர்வு செய்வதும், பேச்சுவார்த்தைக்குள் தங்களை முடக்க சந்திரிகா விரும்புகிறார் என்றே புலிகள் இயக்கம் கருதியது. எனவே பிரபாகரன் மார்ச் 16, 1995-ல் சந்திரிகாவுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அந்தக் கடிதத்தில் ""எங்களது எந்தக் கோரிக்கையையும் அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. அதேபோன்று எதையும் நிறைவேற்றவும் தயாராக இல்லை. யாழ்குடாவிலிருந்து வன்னிப் பகுதிக்குச் செல்லும் உரிமை கூட நடைமுறைப்படுத்தப்படவில்லை. நிரந்தரப் போர் நிறுத்தம் என்கிற கோரிக்கை ஏற்கப்படவில்லை. பூநகரி ராணுவ முகாம், மீன்பிடி உரிமை போன்றவை பாதுகாப்பு சார்ந்தது என்று மறுக்கப்படுகின்றது. இவையெல்லாம் நடந்து கொண்டிருக்க, இனப் பிரச்னை தீர்க்க பேச்சுவார்த்தை என்பது சரியல்ல. எங்களின் கோரிக்கைகள் மார்ச் 28-ஆம் தேதிக்குள் நிறைவேறாவிட்டால் பேச்சுவார்த்தையில் நாங்கள் இருக்கிறோமா இல்லையா என்பதை முடிவு எடுக்க நேரும்'' என்று பிரபாகரன் கெடு விதித்திருந்தார்.
அதிபர் சந்திரிகா, மார்ச் 24, ஏப்ரல் 1 மற்றும் 12 ஆகிய தேதிகளில், பிரபாகரனுக்கு எழுதிய கடிதங்களில் அரசுக்கு கெடு விதிப்பது, பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் விஷயமென்றும், அது நட்புரீதியான சொல் ஆகாது என்றும், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும்போது, தான் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் என நிபந்தனை விதிக்கவில்லை என்றும், ஆனால் வழக்கில் அப்படித்தான் சொல்லப்படும் என்றும் (மார்ச் 24 கடிதத்தில்) தெரிவித்ததோடு, எரிபொருள், மீன்பிடித் தடையை (குறிப்பிட்ட பகுதி தவிர) நீக்கவும் முடிவு செய்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இவை சிங்கள, தமிழ்ப் புத்தாண்டு (ஏப்ரல் 14-ல்) நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்திருந்தார்.
இலங்கைக்கு வெளியே பன்னாட்டு நிதியகங்களிலிருந்து பெறப்படும் நிதியாதாரங்களைக் கொண்டு, ஆயுதங்கள் வாங்கி குவிக்கப்படுவதான, விடுதலைப் புலிகளின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும் அவ்வாறு பெறப்படும் நிதி, மறு கட்டமைப்புக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்கும் மட்டுமே செயல்படுத்தப்படுவதாகவும் ஏப்ரல் 1 கடிதத்தில் கூறியிருந்தார்.
இவ்வாறு பிரபாகரனுக்கும், அதிபர் சந்திரிகாவுக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்குமான 86 கடிதங்கள் பெறப்பட்ட நிலையில், (சந்திரிகா -பிரபாகரனிடையே மட்டும் 46 கடிதங்கள்) ஏப்ரல் 19-ஆம் தேதி இறுதிக்குள், புலிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என இறுதிக்கெடு விதித்து பிரபாகரனால் எழுதப்பட்டது. அதன்பிறகு கடிதம் இல்லை.
அமைதிப் பேச்சு-அமைதி என்று கூறி, அதிபராக வந்த சந்திரிகா, நாளடைவில் வழக்கமான கடிதப் போக்குவரத்தில், வெறும் வார்த்தைகளில் மட்டுமே நம்பிக்கையை வளர்த்தார். அறிவிப்புகள், மக்களைச் சென்றடைய முடியாத நிலை. ராணுவ முகாம்களின் நெருக்கடிகள் வழக்கம்போல் தொடரவே செய்தன. இதற்கும் அப்பால் ராஜீவ் காந்தி கொலையில் பிரபாகரனும், பொட்டு அம்மானும், அகிலாவும் குற்றம் சாட்டப்பட்டு, அவர்களைப் பிடித்துத் தருமாறு இந்தியா அளித்த நெருக்குதல் காரணமாகவும் சந்திரிகா காலம் தாழ்த்தும் உத்திகளில் இறங்கியதாகவும், விமர்சனங்கள் உண்டு. ஆறு மாதங்கள் உருண்டோடின.
163: மூன்றாவது ஈழப் போர்!
"மூன்றாவது ஈழப் போர்' என்று சொல்லப்படும் யுத்தம் திருகோணமலை துறைமுகத்தில் நின்றிருந்த போர்க் கப்பலை கடற்புலிகள் வெடி வைத்துத் தகர்த்ததில் ஆரம்பமாயிற்று. கடற்புலிகளின், தற்கொலைப் படையினர் ஏராளமான வெடி பொருள்களுடன் படகில் சென்று, போர்க் கப்பல் மீது மோதி, அதை அழித்தார்கள். இந்தக் கப்பல் சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாகும். அடுத்து இன்னொரு கப்பல் 21 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்டதாகும். அந்தக் கப்பலும் தகர்க்கப்பட்டது.
இந்தத் தாக்குதலில் அதிர்ந்த சந்திரிகா, பலாலியில் படைகளைக் குவித்தார். வான் வழியாகவும், கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும் தாக்குதல் ஆரம்பமாயிற்று. யாழ்ப்பாணத்தை நோக்கி சிங்களப் படைகள் முன்னேறின.
அமைதிப் பேச்சுக்கு எதிரானவர்கள் புலிகள் என்ற பிரசாரத்தை சந்திரிகாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் தீவிரமாக முடுக்கிவிட்டார். கொழும்பில் இருந்த பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினரை அழைத்து, அமைதிப் பேச்சு வார்த்தைக்காக சந்திரிகா உழைத்ததாகக் கூறினார்.
எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் புலிகள் தாக்குதலை ஆரம்பித்தனர்- என்று சொல்லிக் கொண்டிருந்த அதே நேரத்தில், யாழ் மக்கள் மீது விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. மக்கள் பதுங்கு குழியை நோக்கி ஓடினர். "முன்னேறிய பாய்ச்சல்' என்ற பெயரை வைத்துக் கொண்டு சிங்களப் படை முன்னேறியபோது, "புலிப் பாய்ச்சல்' என்று புலிகள் தங்களது எதிர்த் தாக்குதலை தீவிரமாக்கினர். புலிகளைத் தாக்குவதாகக் கூறிக் கொண்டு, அப்பாவி மக்களைத் தாக்குகிறார்கள் என்று புலிகள் குற்றம் சாட்டுவதற்கு முன்பாகவே சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தனது குற்றச்சாட்டைப் பதிவு செய்தது.
ஆனால், லட்சுமண் கதிர்காமர் சொன்னதுதான் உலக அரங்கில் எடுபட்டது. பதிலுக்கு, புலிகள் வெளி உலகத் தொடர்பு கொள்ள முடியாதவாறு யாழ்ப்பாணத்தில், அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களையும் அரசு துண்டித்துவிட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்த பத்திரிகையாளர்கள், தங்களது உண்மைத் தகவல்களை கொழும்பில் உள்ள தலைமைக்குக்கூடத் தெரிவிக்க முடியவில்லை.
எனவே, பேச்சுவார்த்தை தோல்வியுற்றதற்குக் காரணம் என்ன என்று சில கடிதப் போக்குவரத்துகள் புலிகள் தரப்பில் வெளியிடப்பட்டன. அதன்மூலம் பேச்சுவார்த்தைக்குள்ளும் நடந்த அவர்களது போராட்டம் வெளியே தெரியவந்தது.
பேச்சுவார்த்தையில் பங்கேற்றவர்களும் இனப் பிரச்னைகளை அறிந்தவர்கள் அல்ல; அரசு அதிகாரி, ஒரு வழக்கறிஞர், ஒரு கட்டடக் கலைப் பொறியாளர் உள்ளிட்டவர்களை அனுப்பி ஒரு சாதாரணப் பேச்சுவார்த்தையாக்கவே சந்திரிகா விரும்பினார். வேறு வழியின்றி புலிகளும் இவர்களுடன் பேச நேர்ந்தது. இவர்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது. அதிபரிடம் தெரிவிக்கிறோம், கவனத்துக்குக் கொண்டு செல்கிறோம் என்று மட்டுமே இவர்களால் கூற முடிந்தது.
ஒவ்வொரு பேச்சுவார்த்தைக்கும் முன்பும் அரசின் அல்லது ராணுவத்தின் நடவடிக்கைகளால் எழுந்த சிக்கல் குறித்துப் பேசுவதும், சென்ற கூட்டத்தில் பேசப்பட்ட பேச்சுகளில் அரசு கருத்து என்னவாயிற்று- முடிவு என்னவாயிற்று என்பது குறித்துப் பேச முடியாமலும் திட்டமிட்டு திசை திருப்பப்பட்டது.
பெரும்பாலான கடிதங்களில், சந்திரிகாவும் அரசு அதிகாரிகளும் வார்த்தைகளில் இனிப்பை சேர்த்திருந்தனர். அறிவிப்புகளை வெளிப்படுத்தினர். ஆனால் அவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்று கெடு விதித்தால், செப்டம்பர் 2-ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று கூறியதைச் சுட்டிக்காட்ட ஆரம்பித்தனர்.
சந்திரிகா என்ன நினைக்கிறார் என்பது அதிகாரிகளுக்குப் புரியாது. அதிகாரிகள் செய்வது சந்திரிகாவுக்குப் போவதில்லை. சந்திரிகாவின் பேச்சுவார்த்தை முயற்சிகள் சிங்கள ராணுவத்துக்குப் பிடிக்கவில்லை என்பதால், அவர்கள் போர் நிறுத்தத்தை மீறி- தாக்குதலையும், நெருக்குதலையும் அளித்துக் கொண்டே இருந்தார்கள் என்றெல்லாம் புலிகள் தரப்பில் சொல்லப்பட்டது.
"யாழ்குடாவுக்கும் வன்னிப் பகுதிக்கும் இடையே போக்குவரத்துக்குத் தடையாக உள்ள முகாமையும், பொருள் போக்குவரத்துக்கு தடையாக உள்ள தாண்டிக்குளம் சோதனைச் சாவடியையும் நீக்க ஒவ்வொரு கடிதத்திலும் வலியுறுத்தியும், எங்களது முயற்சி வெற்றி பெறவில்லை. தாண்டிக்குளம் சோதனைச் சாவடியின் அட்டகாசத்தால், பொருள்கள் கொண்டுவர முடியாமல், படகுகளில் கொண்டு வந்து, அல்லது ரகசியமாக எடுத்து வந்து, பொருள்களை யாழ் பகுதியில் விற்கும்போது, அவற்றின் விலை பன்மடங்கு உயர்கிறது என்று சொல்லியும் சோதனைச் சாவடியை நீக்க சந்திரிகா விரும்பவில்லை.
கடும் நெருக்குதல் கொடுத்து, சந்திரிகா பொருளாதாரத் தடையை நீக்கினாலும், இந்த சோதனைச் சாவடி, ராணுவம் வசம் இருந்ததால், அங்கே ராணுவம் விதிப்பதுதான் உத்தரவு. இவை எதுவும் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
அதேபோன்று, சிங்கள ராணுவம், பூநகரி முகாமை அப்புறப்படுத்த கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஆனையிறவு முகாம்களும் சேர்ந்து, யாழ் குடாவை வளையமிட்டன. வன்னிப் பகுதியை அடைய வேண்டுமானால் யாழ் மக்கள் கிளாலி கடல் வழியாக, படகுகளில் செல்ல நேர்கையில், கடற்படையினரின் தாக்குதலுக்கு ஆளாகி, பலர் மடியும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாகவே சங்குபிட்டி வழியைத் திறக்கவும், பூநகரி முகாமை அகற்றவும் புலிகள் கோரினர்.
அரசு உண்மையிலேயே அமைதித் தீர்வுகளை விரும்பினால், யாழ் மக்களின் போக்குவரத்தைச் சுலபமாக்க வேண்டும். ஆனால், அரசு இக் கோரிக்கையை ஏற்கவில்லை' என்றும் பாலசிங்கம் தனது "வார் அண்ட் பீஸ்' நூலில் குறிப்பிட்டுள்ளார்.
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இடம்பெறும் வெளிநாட்டுப் பிரதிநிதியே, இந்தக் குழுவின் தலைவராக இருப்பார் என்று முடிவு எடுத்த பின், விடுதலைப் புலிகள் தலைவரைச் சந்திக்கக்கூட அவர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. எவ்வளவு இழுத்தடிக்க முடியுமோ அவ்வளவு காலம் தாழ்த்தப்பட்டது. ஓயாத கடித வரைவு மூலம் இக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டது என்றும் பாலசிங்கம் கூறியுள்ளார்.
அதிபர் பதவியில் அமர்ந்த நேரத்தில் அமைதியை விரும்பும் தேவதையைப் போன்று தோற்றம் காண்பித்த சந்திரிகா, உண்மையில் அந்தத் தோற்றத்துக்குப் பொருந்தாதவர் என்றும், அவரது ஆட்சியில் பைபிள் கதைகளில் வருவது போன்று கூட்டம் கூட்டமாக மக்கள் வெளியேற்றப்பட்டதைப் போன்ற சூழ்நிலை ஏற்பட்டது என்றும், அவரின் யாழ்ப்பாண ஆக்கிரமிப்பின்போது இந்த அவலம் நிறைவேறியது என்றும் பாலசிங்கம் குறிப்பிடுகிறார்.
யாழ்ப்பாணம் மீது 1995-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதியன்று தாக்குதல் தொடங்கப்பட்டபோதிலும், முழு அளவிலான தாக்குதல் ஜூலையில்தான் தொடங்கியது. தாக்குதல் தீவிரமானதும், யாழ்ப்பாணவாசிகள் வழக்கமாக பதுங்கு குழிகளில்தான் பதுங்குவார்கள். ஆனால், தற்போது பெரும்பாலானோர் அத்தியாவசியப் பொருள்களை எடுத்துக்கொண்டு சாவகச்சேரியை நோக்கி, நகர்ந்தனர்.
ஓரிரவில் எடுத்த முடிவாக ஊரையே காலி செய்துகொண்டு போவது போன்று அவர்கள் சென்றனர். அதேபோன்று, புலிகளும் யாழ்ப்பாணத்திலிருந்து பின்வாங்கி, கிளிநொச்சிக்குச் சென்றனர். அவ்வப்போது புலிகளின் கொரில்லாக்கள் தாக்குதலைத் தொடுத்தவண்ணம் இருந்தனர்.
புலிகளின் தாக்குதலின்றியே யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்டதாக சிங்கள ராணுவம் அறிவித்தது.
தமிழகத்தில் 1996-ஆம் ஆண்டு, சட்டமன்றத் தேர்தலுக்கான நேரம் நெருங்கி வந்தபோது, கருத்து வேறுபாடு காரணமாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய ஜி.கே. மூப்பனார், தமிழ் மாநில காங்கிரஸ் என்ற அமைப்பினைக் கண்டார். மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் ஆகியவை உடன்பாடு கண்டு தேர்தலைச் சந்தித்தன. தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் 173 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. அக்கட்சியின் தலைவர் மு.கருணாநிதி மீண்டும் நான்காவது முறையாக முதல்வரானார். அதேபோன்று, இந்திய நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெற்றிவாய்ப்பை இழந்து, ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஐக்கிய முன்னணி 332 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. பிரதமராக தேவ கௌடா பொறுப்பேற்றார்.
164: கிளிநொச்சி மீட்பு !
யாழ்ப்பாணத் தாக்குதலுக் குப் ப தி ல டி யாக கொழும் பி ன் மையப் பகு தி யி ல் அமைந்துள்ள சென்ட்ரல் வங் கி யி ல், பு லி கள் அ தி ர டி த் தாக்குதல் நடத் தி ன ôர்கள் ( 31- 1- 1996). இந்தத் தாக்குதலி ல் நூற்றுக்கும் மேற்பட் டவர்கள் இற ந்தன ர். 1400 பேருக்கு மேல் படுகாயமுற்றன ர். அடுத்த தாக்குதலி ல் கொழும் பி ன் தெற்குப் பகு தி யி ல் உள்ள " தெ கி வளை' என்ற இடத் தி ல் உள்ள ர யி ல் நி லையத் தி ல் வைக்கப்பட்ட குண் டி ன் மூலம் 70 பேர் உ யி ர்துற ந்தன ர் ( 24- 7- 1996). நூற்றுக்கணக்கானே ôர் படுகாயமடைந்தன ர்.
இ ன்னெ ôரு உச்சகட்டத் தாக்குத லாக முல்லைத் தீ வு தாக்குதல் அமைந்தது. முல்லைத் தீ வி ல் பத்தா யி ரம் அ டி நீ ள மும், ஐயா யி ரம் அ டி அகலமும் கொண்ட பகு தி யை ஆக் கி ர மி த்து சி ங்கள ராணுவ முகாம் இருந்தது. இந்த முகா மி ல் துருப் பு கள் மட்டுமன் றி ஏராள மான ஆயு தங்களும், கன ரக ஆயுதங்களும் கு வி த்துவைக்கப்பட் டி ருந்தன. என வே, இந்த முகாமைத் தகர்ப் பதும், அ தி லுள்ள ஆயுதங்கள் அனை த்தையும் சேதாரம் இல்லா மல் கைப்பற்றுவது என்பதும் பி ர பாகர னி ன் தி ட்டமாக இருந்தது. கடலி ல் கடற் பு லி கள் தாக்குவது என்றும், கரை யி ல் போரா ளி கள் தாக்குவது என்றும் மு டி வா யி ற்று. 1996- ஆம் ஆண்டு ஜ þலை 18- ஆம் நாள் அ தி காலை ஒரு ம ணி யள வி ல் தாக்குதல் தொடங் கி யது. வி ழி த் தெழுந்த சி ங்கள ராணுவத் தி ன ர் எ தி ர்த்தாக்குதல் தொடுத்தும் பய ன ற்றுப் போன து. இறு தி யி ல் முல் லைத் தீ வு, ராணுவ முகாம் பு லி கள் வசமா யி ற்று. முல்லைத் தீ வைக் காப்பாற் றி க் கொள்ளும் முயற் சி யாக சி ங்கள ராணுவம் அலம் பி ல் வ ழி யாக, போர் நடந்த இடத் தி ற்கு அப்பா லுள்ள ஓர் இடத் தி ல் ஏராள மான துருப் பு களை க் கொண்டுவந்து இற க் கி யது. இதனை யூ கி த்து உணர்ந் தி ருந்த பு லி கள் அவர்களை வரும் வ ழி யி லேயே மடக் கி அ ழி த் தன ர்.
ஆறு நாள்கள் நீ டி த்த " தி ரி வி டப கர' என்னும் இந்த யுத்தத் தி ல், ஆ யி ரக்கணக்கான ராணுவ வீரர்கள் உ யி ரி ழந்தன ர். கும்பல் கும்பலாக இற ந்த சி ங்கள வீரர்க ளி ன் உடல்க ளை ப் பெற, சந் தி ரி கா அரசு மறுத் தது. இற ந்துபோன வீரர்க ளி ன் உடல்களை ஏற்றுக்கொண்டால், அது தோல் வி யை ஒப் பு க்கொண்ட தாக அமைந்து வி டும் என்று கரு தி ய ராணுவம், இற ந்துபோன வீரர் கள், சி ங்கள வீரர்கள ல்ல என்று அ றி வி த்தது. உ யி ரற்ற 1200 உடல்க ளி ல் 55 உடல்களை மட்டும் செஞ் சி லு வைச் சங்கம் மூலமாகப் பெற்றுக் கொண்டது. எஞ் சி யி ருந்த உடல் களை செஞ் சி லுவைச் சங்கத் தி ன ர் முன் னி லை யி ல் பு லி களும், வன் னி ப்பகு தி மக்களும் கும்பல் கும்ப லாகத் தீ யி ட்டன ர்.
இந்தத் தாக்குதலுக்குப் பு லி கள் வைத்த பெயர் " ஓயாத அலைகள்- 1' என்பதாகும். இத் தாக்குதலி ல் இல குரக ஆயுதங்கள் மட்டுமன் றி , கன ரக ஆயுதங்கள ôன போஃ பர்ஸ் வகை பீரங் கி கள் இரண்டும் கைப் பற்ற ப்பட்டன. இது த வி ர முகாம்க ளி ல் கு வி க்கப்பட் டி ருந்த கோ டி க்க ணக்கான ரூபாய் ம தி ப் பி லான ஆயுதங்களும் கைப்பற்ற ப்பட்டன. இ ந் தி யா வி ல் ஐக் கி ய முன்ன ணி அர சி ல் வெ ளி யுற வுத்துறை அமைச்சராக இருந்த ஐ. கே. குஜ் ரால் அண்டை நாடுகளுடன ôன உற வு கு றி த்து ஐந்து அம்சக் கொள் கைகள் ஒன்றை அ றி வி த்தார்.
அவை: ( 1) அண்டை நாடுகள ôன பங்கள ôதேஷ், பூட்டான், மாலத் தீ வு, நேபாள ம் மற்றும் ஸ்ரீலங்கா ஆ கி யவற் றி ன் பி ரச்னை க ளி ல் எ தி ர்பார்ப் பு எதுவு மி ன் றி உதவு வது, ( 2) ஒரு நாட் டி ன் எல்லைக ளுக்கும் இறை யாண்மைக்கும் பங் கம் நேராமல்- ம தி த்து நடப்பது, ( 3) ஒரு நாட் டி ன் உள்நாட்டுப் பி ரச் னை க ளி ல் இன்னெ ôரு நாடு தலை யி டாமல் இருப்பது, ( 4) அண்டை நாடுக ளி ன் தேசப் பாதுகாப் பு க்கும் இறை யாண்மைக்கும்- ஒருமைப் பாட்டுக்கும் பங்கம் நேராமல் பார்த்துக்கொள்வது, ( 5) அண்டை நாடுகள் தங்களுக்குள் ஏற்படும் பி ரச்னை களை இருதரப் பி ன ரும் பே சி த் தீ ர்த்துக் கொள்ள வேண்டும் என்பதாகும்.
இது நடைமுறை சாத் தி யமா என்பது கு றி த்து அப்போது பலத்த வி வாதங்கள் எழுந்தன. பா கி ஸ் தான், பங்கள ôதேஷ் உள் ளி ட்ட நாடுகளுடன் இந் தி யா எந்த முறை யி ல் நடந்து கொள்ளும் என்ற கேள் வி களும் எழுந்தன. ஆன ô லும், இந் தி ய வெ ளி யுற வுத் துறை அமைச்ச ரி ன் இந்தக் கொள்கை அ றி வி ப்பால் ம கி ழ்ந்த நாடுக ளி ல் முக் கி யமான து இலங்கை ஆகும்.
ஆமாம், இந்தக் கொள்கை யி ல் இலங்கை யி ன் இன ப் பி ரச்னை யி ல் இந் தி யத் தலையீடு இருக்காது என்று சந் தி ரி கா உறு தி யாக நம் பி ன ôர். என வே தன்போக் கி ல் அவர் செயல்பட ஆரம் பி த்தார்.
சந் தி ரி கா அரசு முல்லைத் தீ வை இழந்ததை மாபெரும் அவமான மாகக் கரு தி யது. இதற்குப் ப தி ல டி கொடுத்தே ஆகவேண்டும் என்றும் தி ட்டங்கள் தீ ட்டப்பட்டன. " சத் ஜெ ய' என்ற பெய ரி ல் சி ங்கள ராணுவம் முப்படைகளும் இணைந்த தாக்குதல் ஒன்றை கி ளி நொச் சி மீது தொடுத்தது. கி ளி நொச் சி யைக் கைப்பற் றி ய ராணு வம் சுற் றி யி ருந்த இதர பகு தி களை யும் கைப்பற்றும் முயற் சி யி ல் 30 ஆ யி ரம் வீரர்களுடன் கள ம் இற ங் கி , " ஜெ ய சி க்குறு' என் கி ற பெய ரி ல் 13- 5- 1997- இல் போ ரி ல் ஈடுபட்டது. 1998- ஆம் ஆண்டு ஜன வ ரி 25- ஆம் தே தி , கண் டி யி ல் உள்ள பு த்த ரி ன் பல் வைக்கப்பட்டுள்ள தாகக் கூற ப்படும் பு கழ்பெற்ற பு த்தக் கோ வி லான " தலதா மா ளி கை' மீது வி டுதலைப் பு லி கள் தாக்குதல் நடத் தி ன ர். இ தி ல் 17 பேர் கொல் லப்பட்டன ர்.
கி ளி நொச் சி யை மீட்பதற்காக, பி ரபாகரன் பி ப்ரவ ரி 2- ஆம் தே தி போரைத் தொடங் கி ன ர். உடன டி வெற் றி சாத் தி யப்பட வி ல்லை. என வே, கைப்பற்றும் முயற் சி கள் தொடர்ந்தன. ஒவ்வொரு ஊராகக் கைப்பற் றி ய பு லி கள் தி லீப னி ன் ப தி னே ôராம் ஆண்டு நி னை வு நாள ôன செப்டம்பர் 26- ஆம் தே தி மி கப் பெ ரி ய தாக்குதலைத் தொடுத்தன ர்.
இந்தத் தாக்குதலி ல் ராணுவத் தரப் பி ல் ஆ யி ரத்துக்கும் மேற் பட்ட வீரர்கள் பலி யான ôர்கள்.
இறு தி யி ல் கி ளி நொச் சி மீண்டும் பு லி கள் வசமான து. இத் தாக்குத லுக்குப் பு லி கள் " ஓயாத அலைகள்- 2' என்று பெயர் வைத் தி ருந்தன ர்.
1998- இல் சந் தி ரி கா, வி டுதலைப் பு லி கள் இயக்கத்துக்கு மீண்டும் தடை வி தி த்தார்.
ரா ஜீவ் காந் தி கொலை தொடர் பான வி சாரணைகளுக்காக 5- 5- 1993- இல் பூந்தமல்லி யி ல் அமைக் கப்பட்ட த னி நீ தி மன்ற ம் 1997- இல் வி சாரணையை மு டி த்தது. 1998- ஆம் ஆண்டு ஜன வ ரி 28- ஆம் தே தி , இந்த வழக் கி ல் தீ ர்ப்ப ளி க்கப்பட் டது. குற்ற ம் சாட்டப்பட்டவர்க ளி ல் ந ளி னி - முருகன் தம்ப தி உள் ளி ட்ட 26 பேருக்குத் தூக்குத் தண் டனை யும் அவர்கள் சாகும்வரை தூக் கி ல் தொங்க வி டப்படவேண் டும் என்றும் த னி நீ தி மன்ற த் தி ன் நீ தி ப தி வி . நவ நீ தம் தீ ர்ப்ப ளி த்தார்.
குற்ற வா ளி கள் சார் பி ல் உச்ச நீ தி மன்ற த் தி ல் மனு ( 16- 2- 1998) செய் யப்பட்ட தி ல், ந ளி னி , முருகன், சாந் தன், பேர றி வாள ன் ஆ கி யோ ரி ன் தண்டனை உறு தி செய்யப்பட் டது. ( 11- 5- 1999) ராபர்ட் ஜெ யகு மார், வி ச்சந் தி ரன் ஆ கி யோ ரி ன் தூக்குத் தண்டனை ஆயுள் தண்ட னை யாக்கப்பட்டது. மீதமுள்ள 19 பேர் வி டுதலை செய்யப்பட்டன ர்.
" ஓ யாத அலைகள்- 3' என்பது மாங் குள ம் பகு தி களை மீட்பது ஆகும்.
இந்தப் பகு தி யாழ்- கண் டி நெடுஞ் சாலையான " ஏ- 9'- க்கு கி ழக்கே உள்ள ஒட்டுசுட்டான் பகு தி யா கும். இந்தப் பகு தி யை மீண்டும் கைப்பற்றும் வகை யி ல் பு லி கள் இருகட்டத் தாக்குதலை மேற் கொண்டன ர். 1999- ஆம் ஆண்டு நவம்பர் 1, 5, மற்றும் 7- ஆம் தே தி க ளி ல் நடைபெறற தாக்குதல்க ளி ல் ஒட்டுசுட்டான் பகு தி யி ல் அடங் கி ய நெடுங்கே ணி , அம்பகாமம், க ரி ப்பட்டமு றி ப் பு , மாங்குள ம், கரையான்குள ம், பு ளி யங்குள ம் ஊர்களை யும் பு லி கள் கைப்பற் றி ன ர்.
இரண்டாம் கட்டமாக, மன் ன ôர் பகு தி யி ல், ராணுவம் கைப்பற் றி யி ருந்த பள்ள மடு, பெ ரி யமடு, தட்சணா மருதமடு, மடுத்தேவால யப் பகு தி கள் கைப்பற்ற ப்பட்டன. சி ங்கள ராணுவத் தி ன் தோல் வி களை வெ ளி யி ட பத் தி ரி கைகளுக் குத் தடை வி தி க்கப்பட்டது. கடும் த ணி க்கை வி தி களும் அமல்படுத் தப்பட்டன. 1999- ஆம் ஆண்டு டி சம்பர் மாதம், சந் தி ரி கா மீது நடத்தப் பட்ட தாக்குதலி ல், அவர் கண் ணி ல் காயத்துடன் உ யி ர்தப் பி ன ôர். அதன் பி ற கு நடைபெற்ற அ தி பர் தேர்தலி ல் வென்று, மீண் டும் அ தி பராகப் பொறுப்பேற்ற ôர் ( 22- 12- 1999).
165: ஆனையிறவு புலிகள் வசம்!
புத்தாயிரம்-2000-ஆவது ஆண்டில், ஜனவரி 5-ஆம் தேதி, தமிழீழத் தலைவர்களில் ஒருவரான ஜி.ஜி.பொன்னம்பலத்தின் குமாரர், குமார் பொன்னம்பலம் கொலையுண்டார். வழக்கறிஞரான இவர், சிங்கள ராணுவம், அதிரடிப்படை, போலீஸ் ஆகியவற்றின் கொடுமைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர்.
செம்மணி புதைகுழி போன்ற அட்டூழியங்களை அம்பலப்படுத்தியதாலும், ஐ.நா. மனித உரிமைக் கமிஷன், ஐரோப்பிய நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு நேரடியாகச் சென்று புகார்களை அளித்ததாலும் இலங்கை அதிபர்களின் கோபத்துக்கு ஆளானவர். இறுதியாக, 29-12-1999 அன்று தேர்தல் வெற்றிவிழா கூட்டத்தில் அதிபர் சந்திரிகா பேசிய பேச்சில் பயங்கரவாதத்தை அகற்றுவதுதான் தனது பணி என்று குறிப்பிட்ட அவர், குமார் பொன்னம்பலத்துக்கு எச்சரிக்கையும் விடுத்திருந்தார். இந்த எச்சரிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து குமார் பொன்னம்பலம் வெளிப்படையான கடிதம் ஒன்றை சந்திரிகாவுக்கு எழுதினார். அந்தக் கடிதத்தில், "விடுதலைப் புலிகளின் அரசியல் தத்துவத்தை அப்படியே ஏற்றுக்கொண்டவன் என்கிற முறையிலும் அந்த ஆழமான நம்பிக்கையுடன் தெற்குப் பகுதியில் வாழ்பவன் என்கிற முறையிலும் இக்கடிதத்தை எழுதுகிறேன். இலங்கைத் தீவில் மட்டுமல்ல; இத் தீவுக்கு வெளியேயும் இந்தக் கருத்தை எழுத்திலும், பேச்சிலும் பகிரங்கமாக வற்புறுத்த விரும்புகிறேன். உங்களுடைய பேச்சில் என்னை எச்சரித்து இருக்கிறீர்கள். உங்கள் பேச்சு நெடுகிலும் வெளிப்பட்ட அப்பட்டமான மிரட்டல்களைக் கண்டு கொஞ்சமும் அஞ்சாதவன் என்கிற முறையிலும் இக்கடிதத்தை எழுதுகிறேன்' என்று குறிப்பிட்ட அவர்,
"டிசம்பர் 19-ஆம் தேதி இரவு வரலாற்றில் மறக்கமுடியாத இரவாகும் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். இருளின் கரங்கள் படிந்த இரவாகவும் வர்ணித்து இருக்கிறீர்கள். குண்டு வெடிப்பினால் பாதிக்கப்பட்ட நீங்கள் இவ்வாறு பேசுகிறீர்கள். தமிழீழப் பகுதியில் ஆயிரக்கணக்கான விதவைகள், சொந்த வாழ்வில் எத்தனையோ இரவுகள் இருள்பிடித்த இரவுகளாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதையும் இந்த நாட்டின் ராணுவத்தின் தலைமைத் தளபதி என்கிற முறையில் உங்களுடைய இருள்படிந்த கரங்களினால் அவர்கள் வாழ்வை இழந்தார்கள் என்பதையும் நீங்கள் என்றாவது உணர்வீர்கள்' என்றும் உறுதிப்படக் கூறியிருந்தார். தொடர்ந்து அக்கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது, "விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டப்போவதாக உறுமியிருக்கிறீர்கள். உங்களால் முடியுமானால் செய்து பாருங்கள். அத்தகைய முயற்சி நடைபெறுமானால் இந்தத் தீவில் காலாகாலத்திற்கும் அமைதி என்பதே இல்லாமல் போகும் என எச்சரிக்கிறேன்- இந்தத் தீவில் பயங்கரவாத மரணக் கலாசாரம் பரவியது என்று சொன்னால் அதற்கு சிங்களவரே காரணமானவர்கள். 1956-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வன்முறைக் கலாசாரத்தைத் தொடங்கியவர்கள் அவர்களே. (சந்திரிகாவின் தந்தை பண்டாரநாயக்கா ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றத்துக்கு எதிரே போராடியவர்கள் மீது குண்டர்கள் தாக்குதல் நடந்தது.) விடுதலைப் புலிகளின் அருகே நீங்கள் செல்வதற்கு முன்னால், நீங்கள் மட்டுமல்லாமல் இந்தத் தீவில் வாழும் ஒவ்வொருவரும் முதலில் இந்த உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும். சிங்களவருடைய தயவில் அல்லது அவர்கள் தூக்கியெறியும் பிச்சையில் வாழ்வதற்காக நாங்கள் பிறக்கவில்லை. இந்தத் தீவின் ஒரு பகுதி நியாயமாக எங்களுக்கு உரியது. அதைப் போல மற்றொரு பகுதி நியாயமாக சிங்களவருக்குச் சொந்தமானது. இந்த உண்மையைச் சிங்களவர் ஏற்கவேண்டும். தமிழர்கள் ஒரு தனி தேசிய இனம் என்பதையும், தங்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதையும், அந்த உரிமையை எந்தக் காரணத்தைக்கொண்டும் அந்நியப்படுத்த முடியாது என்பதையும், அது அவர்களின் பிறப்புரிமை என்பதையும், அந்த உரிமையை நிலைநாட்டுவதற்குண்டான அறிவுக்கூர்மை தங்களுக்கு உண்டு என்பதையும், தங்களின் அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே முடிவு செய்யவேண்டும் என்பதையும் நன்றாக உணர்ந்து இருக்கிறார்கள்' என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதம் பத்திரிகைகளில் வெளிவந்த நான்கே நாளில், அதாவது ஜனவரி 5-ஆம் தேதி குமார் பொன்னம்பலம் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மரணத்துக்கு சந்திரிகாவின் ஆள்களே காரணம் என்று அப்போது கூறப்பட்டது. விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ""நேர்மைத் திறமையுடன் அபாரமான துணிச்சலுடன் அவர் ஆற்றிய பணி பாராட்டத்தக்கது. குமார் பொன்னம்பலத்தின் இனப்பற்றுக்கும், விடுதலை உணர்வுக்கும் மதிப்பளித்து அவரைக் கெüரவிக்கும் விதமாக "மாமனிதர்' என்ற விருதை வழங்குவதாக'' அறிவித்தார்.
புலிகளின் தாக்குதல் மற்றும் மீட்பு சரித்திரத்தில் ஆனையிறவுப் போர் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மிகப் பெரும் பரப்பளவில், ஏராளமான ஆயுதங்களுடன், கனரக ஆயுதங்கள் உள்பட, குவிக்கப்பட்டு, 20 ஆயிரம் வீரர்களைக் கொண்ட பல்வேறு முகாம்களை உள்ளடக்கியது. அந்த முகாமைத் தகர்ப்பது யாழ்ப்பாணத்துடன் இதரப் பகுதிகளை இணைப்பதற்கான முயற்சியாகும். இத் தாக்குதல் தொடங்கப்பட்டால் எதிரி தலையெடுக்க முடியாதபடி, ஒரேயடியில் வீழ்த்துவது என்ற சூத்திரப்படி, அதிக நாள்கள் பிடிக்காமல், பலத்தத் தாக்குதலில் வீழ்த்த வேண்டும் என்றும் புலிகள் தரப்பில் திட்டமிடப்பட்டிருந்தது. இந்தத் திட்டப்படி பலமுனைகளில் தாக்குதல் தொடுக்கப்பட்ட 48 மணி நேரத்தில் ஆனையிறவு தளம் புலிகளின் வசமாயிற்று. 20 ஆயிரம் வீரர்களுடன் 4 ஆயிரம் புலிப் போராளிகள் மோதி வென்றனர். ஆயிரக்கணக்கில் சிங்கள வீரர்கள் இப் போரில் மடிந்தனர். சந்திரிகாவின் கடும் தணிக்கைக்குப் பிறகும் வெளிவந்த செய்திகள் மூலம் சிங்கள ராணுவத்துக்குப் பேரிழப்பு ஏற்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரியவந்தது. மூடி மறைக்கப் பார்த்தும் முடியவில்லை. வெளிநாட்டுப் பத்திரிகைகளில் ஆனையிறவுப் போர்க்காட்சிகளும், மீட்புச் செய்தியும், தென்மராட்சி, வடமராட்சி மற்றும் யாழ்ப்பாணத்தின் பெரும்பகுதிகளையும் மீட்ட செய்திகளும் அடுத்தடுத்து வெளிவந்தன. சிங்கள ராணுவத்துக்கு மிகப் பெரும் இழப்பு என்பது உறுதியாயிற்று. இதனைத் தொடர்ந்து சிங்கள ராணுவத்தின் வீரர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. இந்த சலசலப்பு முல்லைத்தீவுச் சண்டையில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான வீரர்களை சிங்கள வீரர்கள் அல்ல என்று சொன்னதில் ஆரம்பமானது. ஆனையிறவு முகாம் தகர்ப்பில் உயிரிழந்த வீரர்களுக்கும் அதே நிலை நீடித்ததால், பல ஆயிரம் ராணுவ வீரர்கள், ராணுவத்தைவிட்டு ஓடினர். அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியும் வெற்றி பெறவில்லை. விடுதலைப் புலிகள் தரப்பில் தற்கொலைப் படைப்பிரிவிலும் போட்டி போட்டுக்கொண்டு சேர்ந்து பணியாற்றும் நிலையில், சிங்கள ராணுவ வீரர்கள், பணியிலிருந்து சொல்லாமல் ஓடுவது ஏன் என்று, சந்திரிகா யோசித்தார். ஒரு முடிவாக மாவீரர் தினம் போல, "போர்வீரர்கள் தினம்' கடைப்பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்து, 7-6-2000 அன்று தேவாலய மணிகள் ஒலிக்கும் நேரத்தில் அவரவர் இருக்குமிடத்தில் இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தும் திட்டத்தை அமல்படுத்தினார்.
போர்வீரர்கள் நினைவு நாள் அனுசரிக்கப்பட்ட அதே நாளில் அமைச்சர் சி.வி.குணரத்னே குண்டுவெடிப்பில் சிக்கி பலியானார். அவருடன் மேலும் 20 பேர் உயிரிழந்தனர்.
முகமலை கிளாலி பகுதியில் புலிகள் தங்களது தாக்குதலைத் தொடங்கினார்கள். இந்த அதிரடித் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மடிந்தனர். ஏராளமானோர் படுகாயமுற்றனர். இந்தத் தாக்குதல் மூலம் "ஓயாத அலைகள்-3' ஆரம்பமாகின்றது என்று புலிகள் அறிவித்தனர். புலிகளின் திருகோணமலைத் தாக்குதல் (அக்டோபர் 23) ஆரம்பமானது. இந்த அறிவிப்பு வெளியான சமயத்தில் சந்திரிகாவின் தாயார் ஸ்ரீமாவோ பிரதமர் என்ற நிலையிலும், அடுத்தப் பிரதமரும் அவரே என்ற நிலையிலும் காலமானார். மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவையில் மகிந்த ராஜபட்ச மீன்வளத்துறை அமைச்சரானார்.


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.