Wednesday 22 July 2020

தற்குறி பிரபாகரனின் தரம்கெட்ட கொடுஞ்செயல்.

கொடப்பிட்டிய ஜும்ஆ பள்ளிவாசலில் புலிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதல்
 
இன்று (10-03-09) இலங்கையின் தென்கரையோர நகரான மாத்தறையில் முஸ்லிம்களின் மீலாத்விழா நிகழ்வின் போது தற்கொலைப் படையை அனுப்பி பாரிய அனர்த்தம் ஒன்றை தமிழீழவிடுதலைப் புலிகள் மேற்கொண்டுள்ளனர். 10 மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதனால் லட்சக்கணக்கான முஸ்லிம்களின் மனவுணர்வுகள் துன்பத்திற்குள்ளாக்கப் பட்டுள்ளன. 

மீலாத்துவிழா எனப்படும் முகமது நபியின் பிறந்தநாளான இன்று புனித ஸ்தலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தாக்குதலானது  தற்குறி பிரபாகரனின் தரங்கெட்ட கொடுஞ்செயல்களின் தன்மையை உலகுக்கு இன்னுமொருமுறை உணர்த்தியுள்ளது.

தன்சொந்த மக்களை காப்பாற்ற முடியாது புறமுதுகு காட்டி ஓடுகின்ற புலிகள் எங்கேயே இருக்கின்ற ஒரு மக்கள் கூட்டத்தின் மீது பழி தீர்த்திருக்கின்ற இந்த நிகழ்வானது மிகவும் கீழ்த்தரமானது. அனாகரிக செயற்பாடுகளிலும் விட அகலபாதாளம் நோக்கி மானிடத்தை தள்ளிவிடுகின்ற இந்த செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இலங்கையில் ஆயுதப்போராட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே அப்பாவி மக்கள் மீது புலிகள் கட்டவிழ்த்து விட்டுவருகின்ற திட்டமிடப்பட்ட இத்தகைய தாக்குதல் இன சுத்திகரிப்பு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. அறந்தளாவை, அனுராதபுரம், காத்தான்குடி, ஏறாவூர், கெப்பிட்டிப்புலாவ..... என்று அப்பாவி முஸ்லிம்  சிங்கள மக்கள் மீது புலிகளால் நிகழ்த்தப்பட்டு வருகின்ற இத்தாக்குதல்கள்  இனமேலாதிக்கத்தின் வெளிப்பாடுகள் ஆகும். இன்றைய மீலாத்விழா தாக்குதல் ஆனாது புலிகள் இனமேலாதிக்க பாசிஸ்டுகள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
 
இலங்கையில் இருந்து இந்த புலிப்பாசிசம் அழித்தொழிக்கப்படும் நாள் அன்றே அப்பாவி சிங்கள முஸ்லிம் மக்களின் வாழ்விலும் தமிழ் மக்களின் வாழ்விலும் கூட ஒளியேற்றும் திருநாளாக அமையும். இது போன்ற கொடும்செயல்களை நிறுத்துங்கள் என்று புலிகளிடம் நாங்கள் கேட்பதை இனியாவது நிறுத்திக் கொள்வோம். ஏனெனில் அவர்கள் திருந்தப்போவதல்ல, அழியப்போவதே நிட்சயம்.

வழிபாட்டுத்தலத்தில் நடந்த தற்கொலைக் குண்டு தாக்குதலை தமிழர் விடுதலைக் கூட்டணி கண்டிக்கின்றது

தேசிய மீலாத் விழாவில் பங்கு பற்ற ஊர்வலமாக அழைத்துசெல்லப்பட்ட பிரதம விருந்தினரையும் ஏனைய விருந்தினர்களையும் தாக்கி 14 பேரை பலி எடுத்தும் 40 பேரை கடும் காயத்திற்கும் உள்ளாக்கிய சம்பவத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி வன்மையாகக் கண்டிக்கின்றது. தமது இரத்த வெறியை விடுதலைப் புலியினர் மேலும் ஒரு சம்பவத்தில் காட்டியுள்ளனர். மிகவும் விரக்தியடைந்த நிலையில் தமது கொடூரத்தை வெளிப்படுத்த கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் ஒன்றைத்தன்னும் நழுவ விட அவர்கள் தயார் இல்லை.
 

தினம் தினம் தமது செல்வாக்கை இழந்து கொண்டு போகும் விடுதலைப் புலிகள் மீது சர்வதேச சமூகமும் அவர்கள் மீதுள்ள நல்ல எண்ணத்தை மாற்றி வருகின்றனர். சர்வதேச சமூகத்தின் மத்தியில் அவர்களுக்கு இருந்த அற்ப சொற்ப ஆதரவு கூட தற்போது அடிமட்டத்திற்கு போயுள்ளது. அரசியல் இன,மத பேதங்களை மறந்து விடுதலைப் புலிகளை பூண்டோடு ஒழிக்க இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் ஒற்றுமைப்பட வேண்டும். வேற்றுமைகளை மறந்து இதை ஒரு குறிக்கோளாகக் கொண்டு செயற்படவேண்டும்.


இச்சம்பவம் மேலும் ஓர் இனக் கலவரத்தைத் தூண்ட விடுதலைப் புலிகள் எடுக்கும் முயற்சியாகும். இந்த சந்தர்ப்பத்தில் மட்டுமல்ல எதிர்காலத்திலும் இத்தகைய  முயற்சிகளில் அவர்கள் தோல்வியே அடைவர். இஸ்லாமிய சகோதரர்களுக்கு நான் விசேட செய்தியைவிட விரும்புகின்றேன். சிங்கள சகோதரர்களிடம் இருந்து நாம் கற்கணே;டிய விடயங்கள் உண்டு. மனிதன் பொறுமையின் விளிம்பை தாண்டி, இவர்களுடைய நடவடிக்கைகள் அத்தனையும் கோபத்தை தூண்டுவதாகவே அமைகின்றன. இருப்பினும் நாம் பொறுமையை கடைப்பிடித்து, அவர்களின் சூழ்ச்சிக்கு பலியாகாமல் இருத்தல் வேண்டும்.

பெறுமதி மிக்க பல உயிர்களை பலி கொடுத்தவர்களுக்கும், காயப்பட்டோரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றேன். சிறிலங்கா சுதந்திர கட்சி, இலங்கை  கொம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த பல உள்ளுராட்சி மன்றங்களில் மக்களை  பிரதிநிதித்துவப்படுத்திய முற்போக்கு இளைஞர்கள் இறந்தும், காயப்பட்டும் உள்ளனர். அவர்களின் உற்றார் உறவினர்களுக்கும் அவர்களை மிக அன்பாக நேசித்த மக்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். படுகாயமுற்ற பொதுமக்களும், அரசியல் கட்சி அங்கத்தவர்களும், கௌரவ அமைச்சர் மகிந்த விஜயசேகர அவர்களும் விரைவில் குணமடைய வேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். நான் மிக்க மரியாதை கொடுக்கும் இவ் ஆத்மாக்கள் சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

வீ; ஆனந்தசங்கரி,
தலைவா,;
தமிழர் விடுதலைக் கூட்டணி.