தமிழினி என்று அறியப்பட்ட சிவகாமி ஜெயக்குமரன் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க மகளிரணி அரசியல் பிரிவுத்தலைவியாக இருந்தவர். ஈழப்போரில் தம் ஒட்டுமொத்த
வாழ்வையும் தொலைத்த பல்லாயிரம் பெண்களில் ஒருவர்
இறுதிவரை
இயக்கத்தில் இருந்து போராடி முள்ளிவாய்க்காலின் கோரமுடிவுக்குப்பின் இலங்கை இராணுவத்திடம் பிடிபட்டு சிறைக்கொடுமை அனுபவித்து விடுதலையானதும் புற்றுநோய்க்கு பலியானவர். போராட்டமே வாழ்வென வாழ்ந்த அவர் மறைவுக்குப்பின் அவரது தன் வரலாற்று
நூலை அவர் கணவர் ஒரு கூர்வாளின்
நிழலில் என்கிற பெயரில் புத்தகமாக வெளியிடுகிறார். அதில் அவர் தன் வாழ்வின்
நேரடி அனுபவங்களை அதில் தான் கற்ற பாடங்களை விவரிக்கிறார்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.