Tuesday 14 July 2020

முஸ்லிம் மக்களை தேர்தலில் புறக்கணித்தனர்: புலிகள் குற்றச்சாட்டு


வடகிழக்கு மாகாணசபை மோசடித் தேர்தலினால் பதவியில் அமர்ந்தபின்னர் கூட இவர்கள் ஈழத் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையையும் செய்யவில்லை. இவர்கள் பதவியேற்றபின் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்துக்களைக் கொண்டிருந்த ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்திருக்கிறார்கள்.

தமிழ்பேசும் மக்களில் ஒரு பெரும் பிரிவினரான முஸ்லிம் மக்களை தேர்தலில் புறக்கணித்ததுடன், அவர்களை வேட்டையாடி அவர்களின் உடமைகளை சூறையாடி தீவைத்து பெரும் அனர்த்தங்களை இவர்களும் இவர்களின் கூட்டாளி குழுக்களும் தொடர்ந்து செய்து வந்திருக்கின்றனர்.

தமிழீழம், குரல்18 - டிச 89 ஜன 90 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.