Sunday 31 May 2020

கச்சதீவு - புலமைப்பித்தன்

காலத்தின் கன்னத்தில் நிற்கும் கண்ணீர்த் துளி'' என்று தாஜ்மகாலை வர்ணித்தார் கவிஞர் தாகூர். அதுபோல கச்சத்தீவை ``காலக்கடலில் மிதக்கும் ஒரு ரத்தத் துளி'' என்றுதான் வர்ணிக்க வேண்டும். சும்மா இருந்த கச்சத் தீவை இலங்கைக்கு இந்தியா தாரை வார்க்கப் போய், இன்று தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்துப் பார்த்த கதையாக, தமிழக மீனவர்களின் எலும்பைப் பிடித்துப் பார்க்க ஆரம்பித்திருக்கிறது இலங்கைக் கடற்படை. கடற்படைக்குப் பலியாகும் தமிழக மீனவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு 175 - 177

175: புலிகளைத் தாக்கிய ஆழிப்பேரலைகள்!
விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுக்கோப்பு என்பது கருணாவின் நடவடிக்கையால் குலைந்தது. கிழக்கு புறக்கணிக்கப்படுகிறது என்ற புகாரைக் கூறி விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு 170 - 174


170: "நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம்!'
பிரபாகரன் பேட்டி தொடர்கிறது...
""சமாதானப் பேச்சுக்கு அமெரிக்கா இடையூறு செய்கிறதா?''
""நான் அப்படி நினைக்கவில்லை''
""மேற்குலக நாடுகள் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதித்ததால் ஆயுதங்கள் பெறமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு சமாதானத்துக்கு வந்ததாகக் கருதலாமா?''
""ராணுவத்தினருடன் நடத்தும் மோதல் மற்றும் போர்களில் இருந்தே எமக்கு ஆயுதங்கள் கிடைக்கின்றன. ஆனையிறவுத் தாக்குதலிலும், முல்லைத்தீவு தாக்குதல்களிலும் சிறியரக ஆயுதங்களில் இருந்து கனரக ஆயுதங்கள் வரை பெற்றிருக்கிறோம்''

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு 166 - 169

166: நார்வேயின் சமாதான முயற்சி!
"ஈழ வரலாற்றில், சமாதானப் பேச்சுவார்த்தையில் நார்வே நாடு கலந்துகொண்டது தற்செயலாக ஏற்பட்ட ஒரு திருப்பம் என்றுதான் கூறவேண்டும். அமெரிக்கா-சோவியத் நாடுகளிடையே நிழல்யுத்தம் நிலவி வந்த நிலையிலும்கூட, மேற்கத்திய நாடுகளின் பக்கமே இருந்தபோதிலும், ரஷியாவுடன் நார்வேக்கு எந்தப் பிணக்கும் இல்லை. அதேபோன்று, ஸ்வீடன், பின்லாந்து போன்ற அண்டை நாடுகளுடனும் மோதல் கிடையாது.

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு 161 - 165

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு 161 - 165
161: மாத்தையாவுக்கு மரண தண்டனை!
புலிகளுக்கும், சந்திரிகா அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் அடிப்படையிலேயே சில கருத்து வேறுபாடுகள் காணப்பட்டன. சந்திரிகா அரசு, பொருள் போக்குவரத்தை மட்டுமே முக்கிய அமசமாகக் கருதியது. புலிகளோ, பொருளாதாரத் தடையை முற்றிலுமாக நீக்குவதை பிரதானமாக்க முடிவு செய்திருந்தனர்.

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு 157- 160


157: யாழ்ப்பாணத்தில் பொருளாதாரத் தடை!
 
இலங்கை அரசு ராணுவத்துக்காக மட்டும் தினந்தோறும் 4 கோடி ரூபாய் செலவிடுகிறது. இந்தச் செலவு என்பது, தமிழர்களை ஒடுக்கத்தான் பயன்படுத்தப்படுகிறது. இதனைச் சமாளிக்க கொரில்லா யுத்தம் தொடங்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கில் போராளிகளைக் கொண்ட ஓர் இயக்கமாக, அமைப்பாக, மரபுவழி ராணுவமாக உருமாற்றம் பெற்ற விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான மாதச் செலவு 6 கோடி ரூபாய் ஆகிறது.

Saturday 30 May 2020

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு 150 156

150: புலிகள் - முஸ்லிம்கள் உறவு!
"இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் அனைவருமே தமிழ் பேசும் முஸ்லிம்கள் ஆவார்கள். மதத்தால் வேறுபட்டவர்களே தவிர மொழியாலும் இனத்தாலும் முழுக்க, முழுக்க தமிழர்களே ஆவார்கள். உருது, அரபி, பாரசீகம் மற்றும் மலாய் பேசும் முஸ்லிம்கள் தமிழீழத்துக்கு வெளியே, கொழும்பு நகரை ஒட்டி, குறைந்த எண்ணிக்கையில் வாழ்ந்து வருவதை ஆரம்ப அத்தியாயங்களில் குறிப்பிட்டுள்ளோம்.
தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுப் பூர்வமான தாயகம் என்று அழைக்கப்படுகிற பகுதியில்தான் அவர்கள் வாழ்கிறார்கள். எனவே உருவாகப்போகும் தமிழீழ நாட்டின் பிரிக்க முடியாத அங்கமாகத்தான் அவர்கள் திகழ்கிறார்கள்' இவ்வாறு புலிகள் - முஸ்லிம்கள் உறவு குறித்து "தென் செய்தி' வெளியீடு எண் 8 கூறுகிறது.

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு


ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (143-149)


ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு 143 149

143: இந்தியாவில் அரசியல் மாற்றம்!
அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில், அவ்வாறு நடந்து கொண்டிருக்கவும், அமைதிப்படையால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய ராணுவத்தினருடன் ஏற்படப் போகும் மோதலைத் தவிர்க்க பிரபாகரன் விரும்பினார். எனவே, அவர் இருவகையான யோசனைகளை வெளியிட்டார்.

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (137-142)

137: பிரபாகரன் கொலையுண்டதாகப் புரளி!

அமிர்தலிங்கத்தின் கொலையை இந்திய அமைதிப் படை பிரசார நோக்கிற்காகப் பயன்படுத்திக் கொண்டது. அமைதிப் படை இருக்கும்போதே கொலை நிகழ்கிறது என்றால், அமைதிப் படை இல்லாத நிலையை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று கூறியது.
ஆனால் உண்மையில் இந்தக் கொலை என்பது கொழும்பு நகரில், இலங்கையின் தலைநகரில் நடந்திருக்கிறது. அமைதிப் படை இருப்பதோ வடக்கு-கிழக்கில். இருந்தாலும் மேற்கண்ட வாதம் முன்னெடுக்கப்பட்டது.

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு nil


ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (131-136)


131: ஆட்சிகள் மாறின; காட்சிகளும்!
தனது ஆட்சிக்காலத்தில் எந்த அளவுக்கு, தமிழர்களின் உரிமைகளை ஒடுக்க முடியுமோ, ராணுவம் மற்றும் காவல்துறைகளைப் பயன்படுத்தி எவ்வளவு கொடுமைகளை இழைக்க முடியுமோ, அந்தளவுக்கு செயலாற்றிய இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். (டிசம்பர் 1988)

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு nil


ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (123-130)


ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (123-169)
ஆக்கம்: பாவை சந்திரன்
பிரபாகரன் எழுதிய கடிதங்களின் தொடர்ச்சியாக சென்னையில் தங்கியிருந்த கிட்டு பத்திரிகையாளர்களுக்கு அவ்வப்போது விடுதலைப் புலிகளின் நிலை குறித்து பேட்டியளித்தார்~

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு


ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (118-122)


118: புலிகளின் எதிர்த் தாக்குதல்!
அக்டோபர் 10-ஆம் தேதி மோதல் தொடங்கப்பட்டதன் நோக்கம், விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரனை சிறைப்பிடிப்பது அல்லது சுட்டுக் கொல்வது என்பதே! தலைமையைக் குறி வைத்து அழித்துவிட்டால் விடுதலைப் புலிகள் அமைப்பு சிதறிவிடும் என்பது திட்டம்.

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு


ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (111-117)

111: புலேந்திரன், குமரப்பா தற்கொலை!
சிங்களக் கடற்படையினரால் ஆயுதம் கடத்துவதாகக் கூறி, படகைச் சுற்றி வளைத்துக் கைது செய்யப்பட்ட குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்டோர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அமைதிப்படைத் தலைவருக்கும், இந்திய தூதுவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது என்று அவர்கள் சொன்னதை சிங்களக் கடற்படையினர் சட்டை செய்வதாக இல்லை.

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (103-110)


103: இந்தியாவை நேசிக்கிறேன்!
ஒப்பந்த நகல் எரிப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அன்று மாலையே விடுதலை செய்யப்பட்டனர். பழ.நெடுமாறன் சென்னை வந்ததும் அவரிடமும், கி.வீரமணியிடமும், விடுதலைப் புலிகள் ஆலோசகர் ஏ.எஸ்.பாலசிங்கம், நடேசன், பேபி சுப்ரமணியம் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (100-102)

100: ராஜீவ் காந்தி தாக்கப்பட்டார்!
1987 ஜூலை 29 அன்று இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவும் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் இணைப்பாக சில அம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்தன.

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (96-99)


96: எம்.ஜி.ஆருடனான கடைசி சந்திப்பு
உங்களுடைய ஒத்துழைப்போ, ஆதரவோ இல்லாவிட்டாலும் ஒப்பந்தம் கையெழுத்தாவது உறுதி என்கிற வெளியுறவுச் செயலர் தீட்சித்தின் பேச்சிலேயே வெறுப்படைந்து விட்டிருந்த பிரபாகரன், அந்தமானில் சிறை வைக்கப்படுவீர்கள் என்று அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தார்.

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (91-95)


91: பிரபாகரனின் தளபதிகள்!
கிட்டு - மாத்தையா - கே.பி. கரிகாலன் - பொட்டு அம்மான் - சுப.தமிழ்ச்செல்வன் - காசி ஆனந்தன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வீச்சும் பிரபாகரனின் சாதனைகளும் ஒப்பிட முடியாதவை. இயக்கமும், பிரபாகரனும் வெற்றியடைய பலர் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். போராளிகளாக பல்லாயிரம் இளைஞர்கள் சேர்ந்து, பயிற்சி பெற்று பல்வேறு பகுதிகளில் செயலாற்றியும் வந்திருக்கிறார்கள்.

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (83-90)


83: ராஜீவுக்கு நேர்ந்த நெருக்கடி!
உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை, நெல்லியடி பகுதிகள் ராணுவமயமானது. "48 மணிநேரத்தில் யாழ்ப்பாணம் ராணுவம் வசமாகும்' என்று பிபிசி வானொலியின் செய்தியில் நிருபர் மார்க்துலி தெரிவித்தார்.

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (82) தப்பினார் பிரபாகரன்!

82 missing

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (76-281)


76. 'டெசோ' மாநாட்டில் தேசியத் தலைவர்கள்!
மதுரையில் நடைபெற்ற "டெசோ' மாநாட்டில் கலந்துகொண்டு ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ராமராவ் ஆற்றிய உரையின் சில பகுதிகள் வருமாறு:

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (67-75)


67: அணுகுமுறை மாறுகிறது!
ராஜீவ் காந்தி ஜெயவர்த்தன ரொமேஷ் பண்டாரி இலங்கைத் தமிழர் பிரச்னையில், இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகு பதவிக்கு வந்த ராஜீவ் காந்தியின் அணுகுமுறையில் மிகப்பெரிய மாற்றம் காணப்பட்டது. இந்திரா காந்தியின் பழுத்த அரசியல் அனுபவத்தின் காரணமாக அவர் என்ன விரும்புவாரோ அதே திசையில் சிந்தித்த அதிகார வர்க்கத்தினர், ராஜீவ் காந்தி காலத்தில் தங்களது - விருப்பு வெறுப்புக்கேற்ப அவரை மாற்றுவதற்கு முற்பட்டனர்.

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (60-66)


60: போராளிகளுக்குப் பயிற்சி முகாம்!
1983-இல் ஏற்பட்ட இனக் கலவரத்தையொட்டிய தீர்வுகாண பேச்சுவார்த்தைக்கு ஜெயவர்த்தனா உடன்படமாட்டார். அப்படி உடன்பட வைக்க வேண்டுமானால் ரகசியமான மாற்றுத் திட்டம் ஒன்றையும் செயல்படுத்த வேண்டியது அவசியமாகும் என்று, பிரதமர் இந்திரா காந்தியின் கொள்கை வகுப்பாளர்களான பாதுகாப்பு ஆலோசகர் ராமேஷ்வர் நாத் காவ் மற்றும் பிரதமரின் அலுவலக நிர்வாகிகள் நினைத்தனர்.

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (51-59)


51. பின்னிப் பிணைந்த உறவும் வரலாறும்!
புத்தளத்திற்கு வடக்கே பொன்பரப்பியில் கண்டெடுக்கப்பட்ட ஈமத்தாழிகளும், தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட ஈமத்தாழிகளும் ஒரே வகை என்பதையும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பதையும் முன்பே கண்டோம்.
மதுரையில் சங்கம் நடத்தியபோது பூதன் தேவனார் ஈழத்திலிருந்து வந்ததையும், பாடல்கள் பாடியதையும் சங்கப் பாடல்கள் அகநானூறு (88,231,307), குறுந்தொகை (189,343,360), நற்றிணை (365) தெளிவுபடுத்துகின்றன.

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (44-50)


44. மீண்டும் கொலைவெறித் தாக்குதல்!
அதேவேளை சி-3 பிரிவில் இருந்த ஈழப் போராளிகளையும் அன்றே கொல்வதற்கு இனவெறிக் கூட்டம் ஓடிவந்து இரும்புக் கதவுகளை உடைத்தபோது அங்கு வந்த சில சிறை உயர் அதிகாரிகள், ""இன்று இவ்வளவு போதும் சென்று ஓய்வெடுங்கள் வீரர்களே! உங்களுக்கு ஒன்றும் நடக்காது'' என்று கூறியபோது, அக்கும்பலின் வெறி தற்காலிகமாகத் தணிந்தது.

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (40-43)


40: தீக்கிரையானது யாழ் நூலகம்!
ஈழத் தமிழரின் போராட்ட வரலாற்றில் கண்ணீர் துளிகளாலும், அடக்கவொண்ணா துக்கத்தாலும் எழுதப்பட வேண்டிய சம்பவம் ஒன்று இருக்குமானால் அது நிச்சயமாக யாழ் நூலக எரிப்பாகத்தான் இருக்கும்.

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (34-39)


34. சாஸ்திரி - ஸ்ரீமாவோ ஒப்பந்தமும் விளைவுகளும்!

சுதந்திரத்திற்குப் பின், இலங்கையும், இந்தியாவும் இரு மாநாடுகளை நடத்தின. 1953-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் லண்டனில் நேரு-டட்லி சேனநாயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. பிரஜா உரிமையற்ற மலையகத் தமிழர்களை யார் ஏற்றுக் கொள்வது என்பதுதான் பேச்சுவார்த்தையின் உள்ளடக்கம். ஆனால் இப்பேச்சுவார்த்தை எந்தத் தீர்வும் இன்றித் தோல்வி அடைந்தது.

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு - (21-30)


ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு - (21-30)

ஆக்கம்: பாவை சந்திரன்
புதிய அரசமைப்புச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் (1961) சிங்களப் பேரினவாத மனப்பான்மையுடைய சிங்களவர்கள், ஆங்கிலேயர் ஆட்சியில் தங்கள் நலன்களுக்குப் பாதகமான சட்ட முன்வடிவங்களை ஆங்கிலேயர் வைக்கயில் அவை தமிழர்க்கு ஒரு சில சலுகைகளையே அளித்த போதிலும், அவற்றுக்கு முட்டுக்கட்டையிட்டு, தடுத்து நிறுத்தியது மட்டுமல்லாமல் அவற்றுக்கு எதிராகத் தங்கள் மக்களின் எதிர்ப்புக் குரல்களை ஒன்றிணைக்க முயற்சித்தனர்.

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (11-20)

11. யாழ்ப்பாணத் தமிழரும், மலையகத் தமிழரும்!
இலங்கையின் மக்கள்தொகை சுமார் இரண்டு கோடியாகும் (2006). சிங்களவர்கள் (74%) மத்திய மற்றும் தென் பகுதிகளில் பரவலாக வசிக்கின்றனர்.

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (1-10) - பாவை சந்திரன்

இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்தும், ஈழம் குறித்தும், அங்குள்ள மக்களின் எதிர்காலம் குறித்தும் ஆதியோடந்தமாக கட்டுரைத் தொடர் வெளியிட வேண்டும் என்கிற எண்ணம் கடந்த ஆறு மாதமாகவே "தினமணி' ஆசிரியர் குழுவுக்கு இருந்து வருகிறது. இப்படி ஒரு தொடரை எழுதுவதற்குத் தனக்கு எந்தவித விருப்பு வெறுப்போ, அரசியல் முலாமோ இல்லாத ஒரு பத்திரிகையாளர்தான் பொருத்தமாக இருப்பார் என்பதும் எங்கள் தேர்ந்த முடிவு.

அதற்கு 1985-ஆம் ஆண்டிலேயே "இலங்கைத் தமிழர் போராட்ட வரலாறு' என்ற புத்தகத்தை வெளியிட்ட மூத்த பத்திரிகையாளர் பாவை சந்திரனைவிட பொருத்தமான ஒருவர் இருக்க முடியாது என்பது எங்கள் ஆசிரியர் குழுவின் ஒருமித்த கருத்து.