Monday 12 October 2020

ஜி.ஜி.யின் 50:50 | பண்டாரநாயக்கவின் எதிர்வினை! - என்.சரவணன்

பண்டாரநாயக்க இந்திய வம்சாவளியினரை நாடு கடத்த வேண்டும் என்று பகிரங்கமாக தெரிவித்து வந்த சூழ்நிலையில் தான்  1939ஆம் ஆண்டு நாவலப்பிட்டி கலவரம் நிகழ்ந்தது. இலங்கையின் முதலாவது தமிழ் சிங்கள இனக்கலவரமாக இதைக் கொள்வது வழக்கம். சேர் பொன் இராமநாதன், சேர் பொன் அருணாச்சலம் போன்றோர் இலங்கைக்கான தேசியம், இலங்கைக்கான தேசிய ஒருமைப்பாடு என உழைத்து களைத்து, தோற்று அவ்வொருமைப்பாடு காலாவதியாகியாகி வந்த காலம் 1930கள் எனலாம். அவர்களின் சகாப்தமும் முடிவுற்று சிங்களத் தேசியவாதத்திலிருந்து தற்காத்துக்கொள்ள தமிழர்களுக்கான தனித்தேசிய அடையாளத்தின் தேவை உணரப்படத் தொடங்கிய காலம் 1930கள் எனலாம்.
 
இலங்கையின் முதலாவது இனக்கலவரம் என்று அழைக்கப்படுகிற நாவலப்பிட்டி கலவரம் கூட இதன் நடுப்பகுதியில் இன்னும் சொல்லப்போனால் 1939 இல் தான் நிகழ்ந்தது. 1939 இல் கலவரத்துக்கு காரணமாக நாம் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் மகாவம்சம் பற்றிய உரையைக் காரணமாககே கொள்வது வழக்கம். ஆனால் அதேவேளை. அந்த உரைக்குத் தள்ளிய வேறு சில நிகழ்வுகளையும் இங்கு நாம் நினைவுக்கு கொண்டு வருவது முக்கியம்.

ராஜீவ் காந்தி படுகொலை

1991-ம் ஆண்டு மே 21
இன்று ராஜீவ் காந்தி  படுகொலை செய்யப்பட்ட தினம். 

நேருவின் பேரனை, இந்திராவின் மகனை, இந்தியாவின் முன்னாள் பிரதமரை, இந்தியாவை அதிகமுறை ஆண்ட கட்சியின் தலைவனை இன்றய நாளில் கொன்றொழித்தார்கள் புலிகள் .

ராஜீவ் காந்தியை புலிகள் மே 1991 இல் கொன்றார்கள் , ராஜீவ் காந்தியின் ஆன்மா புலிகளை மே 2009 இல் முள்ளிவாய்க்காலில் நின்று கொன்றது, அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும், ஆம் கொலையை தவிர வேறெதுவும் தெரியாத புலித்தலைமைகளை 
தெய்வம் முள்ளிவாய்க்காலில் நின்று கொன்றது, இதில் அகப்பட்டுக்கொண்டு இறந்தது அப்பாவிப் பொதுமக்களும் , கட்டாயப்பயிற்சி கொடுத்து மூளைச்சலவை செய்யப்பட்ட அப்பாவிபப் புலிகளுமே .

16 வயதில் லண்டனுக்கு வந்த ராஜிவ், தாத்தா போலவே ஐரோப்பியனாகவே வாழ்ந்தார், படித்தார், ஒரு சிறந்த விமானியாகவும் மாறினார், சிரியா போல வல்லரசுகள் குதற இருந்த இலங்கையினை அவர் 1986ல் காக்க சென்றார்,படுபாவிகளால் கொல்லபட்டார்,அவர் இல்லாத இலங்கை என்னாகும் என 2009ல் அனுபவபூர்வமாக கண்டது உலகம்.

ராஜீவ்காந்தி அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு உதவுவதற்காக 1987 ஜூன் 3ம் தேதி படகுகளில் உணவுப் பொருட்களை அனுப்பிய போது அதை இலங்கை ராணுவம் தடுத்து திருப்பி அனுப்பியது. அதை தொடர்ந்து அடுத்த நாள் ஜூன்4 தேதி போர் விமானங்களின் துணையுடன் இலங்கை வான்வெளிக்குள் நுழைந்து விமானங்கள் மூலம் பாராசூட்டில் உணவுப் பொருட்களும் மருந்துகளும் கிடைக்க உதவி செய்து ,ஈழத்தமிழர்களில் சிங்கள அரசு கை வைத்தால் உணவுப் பொருட்களை போட்ட விமானத்தில் இருந்து ஜெயவர்த்தனா அரசு மீது ஒரு குண்டையும் போட முடியும் என்று சொல்லாமல் சொல்லி தட்டி வைத்தார் ராஜீவ் காந்தி.

வடமராட்ச்சியில் இலங்கை ராணுவத்தினரிடம் இருந்து  உயிரை காப்பாற்றிய ராஜீவ் காந்தியையும், மணலாற்றில் இந்திய அமைதிப் படையிடம் இருந்து உயிரைக் காப்பாற்றிய பிரேமா தாசவையும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி கொன்றனர் புலிகள்.,ராஜிவ் கொலையினை அடுத்து நடந்த விசாரணையில் புலிகள் நாங்கள் நாங்கள் இந்த கொலையை செய்யவில்லை  என்றனர், அப்படி ஒரு வெடிகுண்டு எங்களுக்கு செய்யவே தெரியாது என்றனர்,சில மாதங்களில் பிரேமதாசாவினை அதே வெடிகுண்டால் கொல்லும்பொழுது உலகம் புலிகளை நோக்கி வாய்விட்டு சிரித்தது.
ஆனால் இதற்க்கு எல்லாம் மூல காரணமாக இருந்த கிளி மூக்கன் ஜெயவர்தனாவை புலிகளால் கொல்ல முடியவில்லை , ஏன் கிட்ட நெருங்கவே முடியவில்லை அவ்வளவுக்கு கிழட்டின் நரி மூளை. ராஜீவ் காந்தியையும் புலிகளையும் சண்டையில் இழுத்துவிட்டதே அந்த கிழட்டு நரி மூக்கன் தான் .

புலிகள்  தோல்விக்கு ராஜீவ் காந்தி கொலையும்   ஒரு காரணமே.புலிகள் சகோதரபடுகொலைகளை
செய்தது மட்டுமன்றி ,இன்னுமொரு படி மேலே போய்  ஆசியாவிலேயே பெரிய தலைவன் என்று சொல்லப்பட்ட ராஜீவ் காந்தியையும் போட்டு தள்ளினார்கள்.

*காந்தியினை வணங்கி சுட்டான் கோட்சே, இந்திராவினை வணங்கி சுட்டான் பியாந்சிங், ராஜிவினையும் வணங்கியே கொன்றாள் தனு.
மனித குல விரோதிகளாலும், சொந்த இன மக்களை கொன்ற இனபடுகொலையாளிகளான புலிகளால் இந்தியாவின் பெரும் தலைவர் கொல்லட்ட நாள் இன்று.

* இனம் மானம் என்று உணர்வை தூண்டி ஆயுதம் ஏந்திய போராளிகளால் 20ஆம் நூற்றாண்டில் எந்த சமூகத்திற்கும் எந்த நன்மையும் நடக்கப் போவதில்லை என்பதைத் தீவிரமாக உணரவைத்த நாள் இன்று .

* புரட்சி என்று ஆயுதம் ஏந்திய கூட்டம் அது மக்களையும் அழிக்கும், அதோடு உடன்படாதவரையும் அழிக்கும், அதன் தவற்றைச் சுட்டிக் காட்டியவர்களையும் அழிக்கும், அனைத்தையும் நாசம் செய்துவிட்டு இறுதியில் தானும் அழியும். பேரழிவு மட்டுமே மிச்சம். இதைத் தெள்ளத் தெளிவாகக் காலம் உணர்த்திய நாள் இன்று.

*இந்தியாவின் மீது பெரும் தீவிரவாத தாக்குதல் நடத்தபட்ட நாள் இன்று .                                             

*அமைதி பூங்காவாக அறியப்பட்ட தமிழ்நாட்டில், 
ராஜிவ் படுகொலை என்கிற பயங்கரவாத செயல் நிகழ்த்தப்பட்ட கருப்பு நாள் இன்று!

*இராஜிவ் காந்தியை படுகொலை செய்ததனால், விடுதலைப் புலிகள் தங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்ட நாள் இன்று .

*பாம்புக்கு பால்வார்த்தல் என்றால் என்ன என்பதற்கும், நன்றிகெட்ட தனம் என்றால் என்ன என்பதற்கும் இந்தியா அர்த்தம் கண்டு கொண்டநாள் இன்று ,

*அவர்களின் ஏக திமிரான காரியங்களையும், அந்த நன்றிகெட்ட தனத்தையும் கண்டு நாணத்தால் தமிழராய் நாம் தலைகுனிந்த நாள் இன்று.

*ஈழமக்களின் போராட்டத்தை ஒரு கட்டபஞ்சாயத்து கும்பல் குழு ஒரே ஒரு குண்டுவெடிப்பு மூலம் தகர்த்த நாள் இன்று .

இதை எல்லாம் செய்தது  மட்டுமல்லாமல் ,ஒரு வல்லரசு நாட்டையே அடித்து துரத்தினோம் என்று வேற பெருமை , உங்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது இந்தியாவின் உதவியை நாடுவதற்கு ? இதில் உலகறிந்த உண்மையை சொல்லப்போனால் , இந்தியன் அதிகாரிகள் கூறிய மாதிரி ஒரு சிகரட்டை பத்தி முடிப்பதற்குள் 
அந்த குழுக்களையே அவர்களால் அளித்திருக்க முடியும் ஆனால் அவர்களுக்கு அது தேவையில்லை,
இதில ஆக தமாசான விசியம் என்னவென்றால் ராஜீவை கொன்றது ஒரு துன்பியல் சம்பவம் 
என்று கூறி விட்டு இன்னும் அவர்களின் உதவியை எதிர்பார்த்து இருப்பது ,இதை இந்திய மக்கள் மறந்தாலும் ராஜீவ் காந்தியின் குடும்பம் இவர்களை ஒரு போதும் மன்னிக்கவோ மறக்கவோ மாட்டார்கள்.

இதுகுறித்த ராஜீவ் காந்தி மகள் பிரியங்கா அவருடைய ட்விட்டர் பதிவில், இப்படி கூறுகிறார் , 
உங்களிடம் அன்பாக இல்லாதவர்களிடமும் அன்பாக இருங்கள். வாழ்கை நியாயமானது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கை எவ்வளவு நியாயமற்றதாக இருக்கிறது என்று நீங்கள் கற்பனை செய்தாலும் அதுகுறித்து பிரச்னையில்லை. வானம் எத்தனை கறுப்பாக இருந்தாலும் பிரச்னையில்லை. இதயத்தை வலிமையாக்கிக் கொள்ளுங்கள். அதனை அன்பு கொண்டு நிரப்புங்கள். அது எவ்வளவு சோகமானதாக இருந்தாலும் பிரச்னையில்லை. இதுதான் என்னுடைய அப்பாவின் வாழ்கையிலிருந்து கிடைத்த பரிசுகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி புலிகளாள் கொலை செய்யப்படாமல்   இருந்திருந்தால், வெறும் 700 ற்கும் உட்பட்ட போராளிகள் மாத்திரம் தான் இறந்திருப்பார்கள்.

அவைகள் மட்டும் அல்ல 90ம் ஆண்டு முதற்கொண்டு 2009 மே 18 வரை லட்சக்கணக்கான மக்கள் இறந்திருக்க மாட்டார்கள்.

50,000 ற்கு மேற்பட்ட இளைஞர்கள்,யுவதிகள்,சிறுவர்,சிறுமியர் புதைகுழிக்குள் சென்றிருக்க மாட்டார்கள்.

தமிழ்நாடில் இலங்கைத் தமிழ் அகதிகளின் சித்திரவதை முகாம் உருவாகியிருக்காது.

இராணுவ உயர்பாதுகாப்பு  வலயங்கள்  உருவாக சந்தர்ப்பம் இருந்திருக்காது..

இந்திய இராணுவத்திடம் தமிழ்ப் பெண்கள் தங்கள் மானத்தைப் பறிகொடுத்தீருக்க வேண்டி வந்திருக்காது.

வட பகுதியிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேறவேண்டி வந்திருக்காது.

அரசியல் கைதிகள் என்று யாரும் சிறையில் இருந்திருக்க மாட்டார்கள்.

வன்னிக்காடுகள் எங்கும் இராணுவப் பிரசன்னம் வந்திருக்காது.

புத்திஜீவிகள்  கல்விமான்கள், தொழிலதிபர்கள்  இலங்கையை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

கூட்டமைப்பு என்ற கூத்தாடிகள் உருவாகியிருக்க மாட்டார்கள்.

வி வாண்ட் டமில் ஈழம் என்று வெளிநாட்டு உண்டியல் குலுக்கிகள் கத்தி இருக்க மாட்டார்கள்.

முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் ஒருவர் கூட மாண்டிருக்க வாய்ப்பே இருந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது. 

பாரதப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.

பெரியாரும் பிரபாகரனும் நேரெதிர் துருவங்கள்!

இந்தியாவிலிருந்து "பரதேசியாய்" மலையகம் போனவர்களுக்கு வாக்குரிமையோ, குடியுரிமையோ கொடுக்கக்கூடாது என்று இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பே வெள்ளைக்காரனிடம் முதன் முதலில் கோரியது சிங்களவனல்ல. யாழ்ப்பாணத்தமிழன்! 

அதே யாழ்ப்பாண வெள்ளாள தமிழ்தேசியத்தலைமைதான் 10 லட்சம் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களை நாடற்றவர்களாக்க ஆதரவளித்தது. காரணம் யாழ்ப்பாணத்தான் பார்வையில் மலயகத் தமிழன் மனிதனே அல்ல. அப்புறமெப்படி தமிழனாவான்?

"வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம் வாடினேன்", என்ற வள்ளலாரின் அதிஉயர் அருட்பாவை எதிர்த்து அது அருட்பாவல்ல மருட்பா என்று நீதிமன்றம் போய் வழக்காடியவன் அதே யாழ்ப்பாணத்தமிழன்!

தமிழ்நாட்டில் இருக்கும் பூணூலை களைந்து மனிதர் அனைவரையும் சமமாக்க  பெரியார் தலைமையில் பெரும் போராட்டங்கள் நடந்தபோது, யாழ்ப்பாணத்தில் சைவத்தின் பேரால் ஜாதிய படிநிலையை காப்பதற்கு பூணூல் பொடுவது அவசியம் என்று பூணூல் கல்யாணங்கள் இயக்கமாக பரப்பப்பட்டன.

அதன் தொடர்ச்சியே பிரபாகரன் பிராண்ட் பேசும் இன்றைய தமிழ்த்தேசியங்கள்.

மானுடத்தை மேம்படுத்த போராடியது திராவிடம்!

மரபு என்கிற பெயரில் மனுவை காப்பாற்றத் துடித்தது யாழ்ப்பாண பிராண்ட் வெள்ளாள தமிழ்தேசியம்.

இந்த அடிப்படை மட்டும் சரியாக புரிந்தால் மற்ற அனைத்துமே முறையாக விளங்கும்.

அப்படி விளங்கினால் பெரியாரும் பிரபாகரனும் நேரெதிர் துருவங்கள் என்கிற அதி முக்கிய தெளிவு பிறக்கும்

அந்த தெளிவு மட்டும் பிறந்துவிட்டால் பலப்பல தோற்ற மயக்கங்கள் விலகும்!

தமிழர் அரசியல் மேம்படும். அவர்தம் வாழ்வும் வளப்படும்

 நன்றி - ஊர்சுற்றி

Friday 28 August 2020

வடக்கு கிழக்கு இணைப்பை இந்தியா தான் செய்யவேண்டும்!?

அண்மையில் இணையத்தளம் ஒன்றிற்கு வட மாகாண சபை முதல்வர் கொடுத்த பேட்டியில், வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு முதல்வர், தற்சமயம் அது சாத்தியம் இல்லை. இந்தியா தலையிட்டு ஸ்ரீலங்கா வை சம்மதிக்க வைத்தால் அது சாத்தியம் என கூறினார். 1987ல் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் வடக்கும் கிழக்கும் தமிழ் பேசும் மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்த பிரதேசங்கள், என்ற விடயம் பந்தி 1-4 ல் உள்ளது. அதனை உள்ளடக்க ஜே ஆர் சம்மதம் பெற இந்தியா செய்த விட்டுக் கொடுப்பே, பந்தி 2.3ல் உள்ள 31-12-19988 க்கு முன் வடக்குடன் தொடர்ந்தும் இணைந்து இருக்க வேண்டுமா என, கிழக்கில் மட்டும் அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்தும் விடயம். அதுவரை அவை இரண்டும் ஜே ஆர் ஆல் தற்காலிகமாக இணைக்கப்பட்டன.

கபூர் - ரவீந்திரன் சகோதரப் படுகொலை

 இந்திய இராணுவத்தின் வருகைக்கு முன்னரே புலிகளின் பாசிச வெறிக்கு ஏனைய இயக்க உறுப்பினர்கள் பலியாகினர். கபூர் 83 இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டு வடக்கில் வந்து வாழ்ந்தவர், கபூர் ஒரு உன்னதமான போராளி. முற்போக்கு சிந்தனை கொண்டவர். கபூரின் குடும்பமே அப்படித்தான். கபூரின் இயற்பெயர் பாலசுப்பிரமணியம். ஈ பி ஆர் எல் எஃப் தடை செய்யப்பட்ட வேளையில் தோழர் கபூர் புலிகள் இயக்கத்தால் கடத்திச் செல்லப்பட்டார்.

பாலநடராஜா ‘சின்ன பாலா’ ஐயர்:

 

எத்தனை நல்ல மனிதர்களை,எழுத்தாளர்களை, கல்விமான்களை . மனித நேயம் கொண்டவர்களை இழந்துவிட்டோம். போராட்டம் என்ற பெயரில் எல்லோரையும் புலிப் பாசிசம் அழித்துவிட்டது. துரோகிகள் பட்டம் சூட்டி அவர்களை அழித்த புலிப்பாசிசம் தமிழ் மக்களுக்கு எதனைப் பெற்றுக்கொடுத்தது? யாராவது சொல்லுங்கள்? சின்னபாலாவை எனக்கு நீண்ட நாட்களாகத் தெரியும். தோழர் நக்கீரன் வீட்டில் பலதடவை அவரைச் சந்தித்திருக்கிறேன். பால நடராஜ ஐயர். ஊருக்குள் பாலா ஐயா என்றுதான் அவரை அழைப்பார்கள். அவருக்கு சின்ன பாலா என்று பெயர் வரக் காரணம் அவர் ஈரோஸ் இயக்க உறுப்பினராக இருந்தவர். பாலகுமாரும் இருந்த காரணத்தால் இவரைச் சின்னபாலா என்று அழைத்தனர்.

Friday 14 August 2020

Oberoi Devan இன் கொலை!! அரசியல் பிண்ணணி!! 14ம் திகதி 1983

1983ம் ஆண்டு July கலவரத்தாலும், இலங்கையின் நடவடிக்கைகளாலும் அதிருப்பியடைந்த இந்திய அரசாங்கத்தின் பார்வை விடுதலைப் போராட்ட இயக்கங்களின் பக்கம் சாய்ந்தது.

 

இலங்கையை கட்டுபடுத்தி, தமக்கு சார்பாக மாற்றும் அதே நேரம் சர்வதேச பார்வையில் ஆக்கிரமிப்பு என்ற பதத்தை தவிர்க்க, அன்றய எமது சிறு எழுச்சி இந்திய அரசாங்கத்திற்கு உதவியது. கலவரத்தின் பின்னர், இந்திய அரசு போராட்ட இயகங்களின் தலைவர்களை சந்திக்க முடிவு செய்து சந்திரகாசனூடாக செய்திகள் அன்றய TELO தலைவர் சிறீ அண்ணாவிடம் அறிவிக்கப்பட்டது. அதேபோல் பிரபாகரன், உமா, பதமநாபா, பாலகுமாருக்கும் அறிவிக்கப்பட்டது.

 

Thursday 13 August 2020

Smuggling, Shipping and the Narcotics Trade in the History of the LTTE, 1970s-2015: - Gerald H. Peiris

 According to a report published in the 10 June 2015 issue of The Island, the Hon. C. V. Wigneswaran, Chief Minister (CM) of the Northern Province, has asserted that the presence of Sri Lanka’s army in Jaffna (peninsula) has contributed to a rapid spread of narcotics in the area, and that narcotics was never a problem during the war when the LTTE was around.

Tuesday 11 August 2020

மக்கள் மனதில் உறைந்து கிடந்த நெருப்பின் வெளிப்பாடு: - சீவகன் பூபாலரட்ணம்

சிவநேசதுரை சந்திரகாந்தன
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் வெற்றி மிகப்பெரியது. அந்த வெற்றி அப்படியானது, இப்படியானது’... என்றெல்லாம் மட்டக்களப்பில் வாழும் பலர் பேசித்தள்ளி விட்டார்கள். ஆகவே நான் இங்கு அதனைப்பற்றி பேசப்போவதில்லை.

ஆனால், இந்த வெற்றி எதனைக் காண்பிக்கின்றது என்பதை கொஞ்சம் உள்ளே சென்று பார்க்க வேண்டிய தேவை இங்கு இருக்கின்றது. 

Monday 3 August 2020

அந்த நாலு பேருக்கு நன்றி: - குவார்னிகா

''மன்னன் மக்களைக் காப்பாறிறியதாகச் சொன்ன காலம் போய் மன்னனைக் காக்க மக்கள் பலியெடுக்கப்படுகிறார்கள். எத்தனை மக்களைக் கொன்றாவது மன்னனைக் காப்பாற்றிவிட நமது சமூகம் முயன்று கொண்டிருக்கிறது. ஆனால் எப்படியாவது மன்னனை விட்டுவிடக்;கூடாது என்று அந்த நாலு பேர்கள் காத்திருக்கிறார்கள்.''

முஸ்லிம் மக்களும் தேசிய இனப் பிரச்சினையும் - ஒரு வரலாற்றுப் புரிதலை நோக்கி: - எஸ். எம். எம். பஷீர்

முஸ்லிம் மக்கள் என்று சொல்லுகின்ற பொழுது இவர்கள் ஒரு தேசிய இனமா? அல்லது தமிழ் மக்களும் சிங்கள மக்களும் மாத்திரம்தான் ஒரு தேசிய இனமா? அல்லது முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களுக்குட்பட்ட வெறும் குழுவா? ஸ்டாலினியத் தத்துவத்துக்குட்பட்டு தேச வரையறைக்குட்பட்ட வரைவிலக்கணங்களுக்குள் தமிழர்களாக கருதப்பட வேண்டியவர்களா? என்ற ஒரு கேள்வி இருக்கின்றது. இது என்றுமே சர்ச்சைக்கு ரியதாக இருந்து வருகின்றது.

Friday 31 July 2020

இலங்கை: சாதியும் தேசியமும்!!

''அநகாரிக தர்மபால, ‘சிங்கள பௌத்ததேசியத்தை விதைக்கும் போது, சாதிகளைக் கடந்த இன-மத தேசியமாகவே அதைக் கட்டமைத்திருந்தார். ஆனால், அநகாரிக தர்மபாலவின் சமகால எதிரிணையாகக் கருதப்படும் ஆறுமுகநாவலரின் சுதேசிய மறுமலர்ச்சி, ‘யாழ்ப்பாணத் தமிழ், சைவ, வௌ்ளாளமறுமலர்ச்சியாக அமைந்திருந்தது

மிஷனரி ஆதிக்கத்தின் கீழாக, கொலனித்துவத்துக்கு எதிரான சுதேசிய மறுமலர்ச்சி எழுச்சியின் போதுகூட, சிங்களவர்கள் சாதிகளைத் தாண்டியதொருசிங்கள-பௌத்ததேசியம் பற்றிய பிரக்ஞையை உருவாக்கிய போதும் கூட, இலங்கைத் தமிழர்களிடையேயான சாதிப் பிரக்ஞை கைவிடப்படவில்லை.''

Monday 27 July 2020

இஸ்லாமிய மத அடிப்படைவாதமும் இலங்கை குண்டுவெடிப்புகளும் !

 * முஸ்லிம்களில் ஏகப்பெரும்பாலானோரின் வீட்டு மொழி தமிழ் என்ற காரணத்தை முன்னிறுத்தி, அவர்கள் தமிழர்கள் என்றும் முஸ்லிம்கட்குத் தனிப் பிரதிநிதித்துவம் தேவையில்லை என்றும் இராமநாதன் முன்னர் வாதித்தமையும் நோக்கத்தக்கது.
முஸ்லிம்கள் கிழக்கிலங்கையிற் கணிசமானளவு பிரதேசத்திற் செறிவாக வாழ்கின்றனர். வடக்கிலும் மேற்குக் கரையோரமாயும் முஸ்லிம்கள் கணிசமாக வாழும் பிரதேசங்கள் உள்ளன. ஆயினும் ஏகப் பெரும்பாலோர் பல இடங்களிற் சிங்கள மக்களிடையே ஒரு குறிப்பிடத்தக்க சிறுபான்மையாக உள்ளனர். எனவே அவர்கள் தமிழருடன் ஒப்பிடத்தக்க மொழிப்பற்று உடையோராயினும், அவர்களின் தனித்துவம், மொழியை விட முக்கியமாக மதமும் பண்பாடும் சார்ந்திருந்தது.

அவர்களுடைய தனித்துவத்தை இராமநாதன் நிராகரித்தார். முற்றிலும் யாழ், குடாநாட்டை மையப்படுத்திய தமிழ்த் தேசிய அரசியலை அவருக்குப் பின் வந்த ஜி.ஜி. பொன்னம்பலம் முன்னெடுத்தார்.

* விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் வலுத்த போர்ச் சூழலில், முஸ்லிம்களும் தமிழ் மக்களைப் போல தமக்குக் கீழ்ப்பட்டு நடக்க வேண்டுமென எதிர்பார்த்த விடுதலைப் புலிகளின் அணுகுமுறையால் முஸ்லிம்கள் அதிருப்தி அடைந்தனர். அதன் பயனாகக் கிழக்கில், குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில், முஸ்லிம்களை வலிந்து தாக்கலும் முஸ்லிம்களின் எதிர்த் தாக்கலும் சில முஸ்லிம்கள் அரசாங்கத்துடன் நிற்பதுமாகத் தமிழ் முஸ்லிம் நல்லுறவுக்குக் கேடு விளைந்தது.

குறுக்குச் சமரில் சிக்குண்ட முஸ்லிம்கள்: - எஸ்.எம்.எம் பஷீர்

உலகளாவிய ரீதியில் முரண்பாடுகளைத் தவிர்ப்பதற்காக செயற்படும் சர்வதேச நெருக்கடிக் குழு (International Crisis Group) தனது ஆசிய நாடு தொடர்பான ஆய்வறிக்கை இலக்கம் 134இல் இலங்கை இனப்பிரச்சினைக்காக நிகழும் இருபுறச் சமரில் இடையில் சிக்குண்ட முஸ்லிம்களின் வாழ்வியல் அம்சங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதான ஒரு விரிவான அறிக்கையினை இவ்வருட மே மாதத்தில் வெளியிட்டுள்ளது. தனது அறிக்கையின் முடிவில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் இடையில் சிக்குண்ட முஸ்லிம்களை மூன்றாவது தரப்பாகக் கண்டு சில பரிந்துரைகளையும் செய்துள்ளது. சர்வதேச பிரதிநிதித்துவத்தினைக் கொண்ட இச்சிபாரிசுகள் முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

LTTE இயக்கத்தின் தோல்விக்கு முக்கியக் காரணம் ” வெருகல் படுகொலை” !


2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி கருணா பிரிவின் பின் வன்னியில் இருந்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் படையெடுப்பில் முதலாவது சமர் ஆரம்பித்த இடமாக மட்டக்களப்பு வாகரை வெருகல் மலை அமைந்துள்ளது. இலங்கை தீவில் நடந்தேறிய ஒரு வெலிகடை படுகொலை போல, ஒரு கொக்கட்டிச்சோலை படுகொலை போல, ஒரு குமுதினிப்படகு படுகொலை போல, ஒரு கந்தன் கருணை படுகொலை போல, வெருகல் படுகொலையும் கிழக்கு மக்களின் நெஞ்சங்களைவிட்டு இலகுவில் அகன்று விடாதவொன்றாகும்.

Saturday 25 July 2020

யாழ்பாணத் தமிழ் நடுத்தரவர்க்கத்தின் ஏகாதிபத்தியமோகம். கம்பர்மலை-அழகலிங்கம் (ஜேர்மனி)

1983ல் புலிப் பாசிசவாதிகள் தின்னவேலியில் 13 இராணுவத்தைக் கொன்று ஆத்திரமூட்டி இனக்கலவரத்தைத் தொடக்கிவிட்டு சிங்களவன் அடிக்கிறான் என்று குய்யோ முறையோ என்று கூச்சல்போட்டுக் கொண்டு இந்திய முதலாளிகளிடம்; சரணாகதி அடைந்தார்கள். 1987 இல் இந்தியா அடிக்குதென்று சொல்லிக் கொண்டு பிரேமதாசா ஊடாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திடமும் தஞ்சம் புகுந்தார்கள். 1995ல் யாழ்பாணத்தை விட்டு வன்னிக்கு ஓடினார்கள். இன்று இதன்விழைவு பிரபாகரன் சுடுகிறான் என்று சொல்லிக்கொண்டு மீண்டும் இலங்கை ஆயுதப்படைகளிடம் ஓடுகிறார்கள். ஓடினார்கள் ஓடினார்கள் பிற்போக்கின் அந்தலைக்கே ஓடினார்கள்.
-April 28, 2009

சாத்தியமே இல்லாதது தமிழீழம்: என்.ராம்

அடிப்படையிலேயே இனவாதக் கோரிக்கை அது. இங்கிருந்து நாம் இலங்கைத் தமிழர்கள் என்ற சொல் வழியே பார்க்கும் மக்கள் வேறு; அங்குள்ள மக்கள் வேறு. மலையகத் தமிழர்கள் தனித்திருக்கிறார்கள், தமிழ் பேசும் முஸ்லிம்கள் தனித்திருக்கிறார்கள்; அவர்களுடைய பிரச்சினைகள் இங்கு பேசப்படுவது இல்லை. ஈழத்தின் பரப்பாகக் கேட்கப்பட்ட வட - கிழக்கு மாகாணங்களை எடுத்துக்கொண்டால், கிழக்கு மாகாணத்தில் மூன்றில் இரு பங்கினர் தமிழர் அல்லாதவர்கள்; வட பகுதியோடு இணைவதில் விருப்பம் இல்லாதவர்கள்; அவர்களுடைய நியாயங்களை விவாதிக்க இங்கு அனுமதிக்கப்படுவதுகூட இல்லை.

அப்புறம், அரசியல்ரீதியாக, பொருளாதாரரீதியாக, புவியரசியல்ரீதியாக நீடிக்க வாய்ப்பே இல்லாதது அது. முக்கியமாக, வியூக முக்கியத்துவம். அந்தப் பகுதியை ராணுவரீதியாக யாரும் விட்டுவைக்க மாட்டார்கள் - ஒருபோதும் அது நீடிக்க முடியாதது. கடைசியில் அதுதான் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், ஒன்றுபட்ட இலங்கை என்ற அமைப்பின் கீழ், சுயாட்சிக்கு இணையான உச்சபட்ச அதிகாரப் பகிர்வுதான் இலங்கைத் தமிழர்களுக்கு அமைதியையும் நன்மைகளையும் தருமேயன்றி பிரிவினை அல்ல.

என்.ராம் 01 Jan 2014 

புலிகளின் தமிழீழம் சாத்தியமா?

* இராணுவ பலத்தினால் மட்டும் புலிகளை வெற்றி கொள்ள முடியுமானதாக இருந்திருந்தால் இலங்கையில் இந்திய அமைதிப்படையிருந்த காலத்தில் ஒரு சில மாதங்களுக்குள் புலிகளை இந்திய இராணுவத்தினர் அழித்தொழித்திருப்பார்கள். அவ்வாறு செய்ய முடியாமல் போனமைக்குப் பிரதான காரணம் மக்கள் அன்று புலிகள் அமைப்புக்கு அளித்துவந்த ஆதரவும் பாதுகாப்புமாகும். 

அன்றைய நிலையைவிட பலநூறு மடங்கு பலம்வாய்ந்தவர்களாகவிருந்த புலிகள் இன்று மிக இலகுவாகத் தோற்கடிக்கப்பட்டமைக்கு புலிகள் மீது மக்களுக்கிருந்த வெறுப்பே பிரதான காரணமாக இலங்கை அரசுக்கு உதவியது. அன்று எவ்வாறு புலிகள் அமைப்பு சகல மக்களின் நேசத்திற்குள்ளாகியிருந்ததோ அதேபோல் இன்று புலிகள் அமைப்பு முற்றுமுழுதாக தமிழ்பேசும் மக்களினால் புறக்கணிக்கப்பட்டிருந்தது.

13 மே, 2009

புலிகள்தான் மக்கள் மக்கள்தான் புலிகள் -கிழக்கான் ஆதம்


''இந்தியாவும் சர்வதேசமும் புலிகளுக்கு காட்டிய கருணையை அவர்களின் பலம் என்று நினைத்துக் கொண்டு தான்தோன்றித் தனமாக செயற்பட்டதால் இந்தியா என்ற பூதத்தை பகைத்துக் கொண்டதுடன் அவர்களின் இராணுவத்தை தோற்கடித்தாக கதையும் விட்டுவிட்டு இன்று தன்னிலை அரசால் உணர்த்தப்பட்டவுடன் ஆதரவளிக்காவிட்டால் பரவாயில்லை இலங்கை அரசுக்கு உதவிசெய்யவேண்டாம்என்று இந்தியாவிடம் பிச்சை கேட்க வேண்டியுள்ளது''

Friday 24 July 2020

தமிழரின் தாகம் தமிழீழ தாயகமா? - கிழக்கான் ஆதம்

கிழக்கின் விடுவிப்பின்போது அங்கு சென்ற ஜனாதிபதிக்கு மாலை அணிவித்த இந்து மத குருவை புலிகள் சுட்டுக் கொன்றனர். இது எதனைக் காட்டுகிறது எனறால் புலிகள் எவ்வளவுதான் அவர்களின் அடாவடித்தனங்களை பாமர மக்கள் மீது பிரயோகித்தும் சகோதர படுகொலைகள் புரிந்தும் இன்னும் மக்கள் மனதார புலிகளை ஆதரிக்கவில்லை என்பதையும் அவர்கள் அமைதியான சுபீட்சமான வாழ்வையே விரும்புகின்றனர் என்பதையுமே காட்டுகிறது.


அல்பிரட் துரையப்பா முதல் இன்று சிறைபிடித்து சுட்டுக்கெல்லப்படுகின்ற வன்னி பாமர மக்கள்வரை அனைவர் மீதும் புலிகள் தொடர்ந்து தங்கள் ஆயுதகங்கால் மட்டும் தமிழ் மக்களை ஆண்டு வந்திருப்பது புலிகளின் தாகம் தமிழரின் தாகமல்ல என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

“தலைவர் சொல்லாமல் அடிப்பதை ஜனாதிபதி சொல்லியடித்தார்” -கிழக்கான் ஆதம்

இனி நான் சும்மா இருக்க மாட்டேன்! இந்த 2006ம் ஆண்டு பெப்ரவரி இருபத்தி மூன்றாம் திகதி ஜெனிவாவில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்தைக்குப் பிறகு புலிகள் இருபது குண்டுவெடிப்புச் சம்பவங்களை நடத்தியிருக்கிறார்கள் நாற்பத்தேழு இராணுவ அதிகாரிகளையும் இருபத்தெட்டு அப்பாவி மக்களையும் கொன்றிருக்கிறார்கள் நூற்றி முப்பத்தொன்பது பேருக்கு படுகாயம் ஏற்பட்டிருக்கிறது

-2006
ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் திகதிய இரானுவத் தளபதி மீதான தற்கொலைத் தாக்குதலின் பின்னர் மேதகு ஜனாதிபதியாற்றிய உரையிலிருந்து-

Thursday 23 July 2020

கிழக்கு பிளவும் வெருகல் படுகொலையும் விட்டுச்சென்றவை – (வெருகல் படுகொலை நினைவு தினம்.10.04.2004)


அன்றொருகாலம் தமிழீழ விடுதலை புலிகள் “அசைக்கமுடியாத சக்திகளாய் இருந்தனர்.1976ம் ஆண்டு உருவாக்கப்பட்ட புலிகள் அமைப்பின் தலைவரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் யாராலும் வெல்லப்பட முடியாதவர் அனுமானுஷ” சக்தி படைத்தவர் என்கின்ற ஒளிவட்டங்களின் சொந்தக்காரராய் இருந்தார்.

இந்த புலிகள் அமைப்பானது தனது 27வருடகால வரலாற்றில் கடந்துவந்த சவால்களும், நெருக்கடிகளும் எண்ணற்றவை.ஆனால் அவையனைத்தையும் தாண்டி வென்று நின்றவர்கள்தான் புலிகள். ஆனால் 2004ம் ஆண்டு புலிகள் எதிர்கொள்ள நேர்ந்த கிழக்கு பிளவுஅவர்களுக்கு மாபெரும் சவாலொன்றை விடுத்தது.

புலிகளின் பௌத்த மதத்திற்கு எதிரான தாக்குதல்கள்:- எஸ்.எம்.எம் பஷீர்

உலகமெல்லாம் வலம்வரும் வீரமும், விவேகமும் கொண்ட தமிழர்களாக தங்களைக் கருதுபவர்கள் புலிகளின் மதரீதியான திட்டமிட்ட தாக்குதல்கள் குறித்து தங்கள் நிலைப்பாட்டினை எவ்வாறு வெளிக்காட்டி வந்திருக்கின்றார்கள் என்பது வரலாறு பதிவுசெய்துகொண்டே வருகின்றது

உள்ளுரப் பெருமிதம்கொண்டு அத்தகையத் தாக்குதல்களை தமிழர்களின் வீரமாய் ஆராதிப்பதும் மறுபுறம் நாக்கூசாது உது சிங்களக் காடையன்கள் கiதிகளைக் கொண்டு செய்விச்சதல்லோஎன்றோ அல்லது இனம்புரியாத நபர்களன்றோ நேர்மைத் திறனின்றி வஞ்சனையுடன் கூறுமிவர்கள்தான் இன்று புலம்பெயர் உலகின் பெரும்பான்மை மக்கள்.

Wednesday 22 July 2020

தற்குறி பிரபாகரனின் தரம்கெட்ட கொடுஞ்செயல்.

கொடப்பிட்டிய ஜும்ஆ பள்ளிவாசலில் புலிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதல்
 
இன்று (10-03-09) இலங்கையின் தென்கரையோர நகரான மாத்தறையில் முஸ்லிம்களின் மீலாத்விழா நிகழ்வின் போது தற்கொலைப் படையை அனுப்பி பாரிய அனர்த்தம் ஒன்றை தமிழீழவிடுதலைப் புலிகள் மேற்கொண்டுள்ளனர். 10 மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதனால் லட்சக்கணக்கான முஸ்லிம்களின் மனவுணர்வுகள் துன்பத்திற்குள்ளாக்கப் பட்டுள்ளன. 

மீலாத்துவிழா எனப்படும் முகமது நபியின் பிறந்தநாளான இன்று புனித ஸ்தலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தாக்குதலானது  தற்குறி பிரபாகரனின் தரங்கெட்ட கொடுஞ்செயல்களின் தன்மையை உலகுக்கு இன்னுமொருமுறை உணர்த்தியுள்ளது.

Tuesday 21 July 2020

வடகிழக்கு மாகாணசபைத் தேர்தல்களில் இருந்து (1989) முஸ்லீம் காங்கிரஸ்சின் சுயாதீனத்தன்மை வரை: - எஸ்.எம்.எம்.பஷீர்

* பிரேமதாசாவுக்கும் புலிக்குமிடையே நடந்துகொண்டிருந்த தேன்நிலவைப் பேணுமுகமாக முஸ்லிம்கள் புலியின் கருணையில் மாத்திரம் தப்பிப் பிழைக்க விடப் பட்டிருந்தனர். 
 * ஜனவரி 30, 1990இல் முஸ்லிம் காங்கிரஸ்சின் 70 அங்கத்தவர்கள் புலிகளால் கடத்தப்பட்டனர். பிரேமதாசா அரசாங்கத்தின் பிரதிநிதிகள் புலியோடு கதைத்து அவர்களில் 50 முஸ்லிம்களை விடுதலையாக்கினர்.
கல்முனை பொலிஸ் பாசறை புலிகளால் சுற்றிவளைக்கப் பட்டதைத் தொடர்ந்து வடகிழக்கு மாகாணசபை அங்கத்தவர் மொகமட் யூனுஸ் லெப்பே, முகமட் மன்சூர் (முஸ்லிம் காங்கிரஸ்) கொல்லப்பட்டனர்.
* புலிகள் முஸ்லிம் காங்கிரசைத் தடைசெய்தனர்.
மாகாணசபை அங்கத்தவரான எம் .வை .எம் மன்சூர் அவர்களும் வடகிழக்கு மகாணசபை அங்கத்தவரும் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதியுமான அலி உத்துமான் அவர்களும் முறையே புலியாலும் ஈ என் டி எல் எப் பாலும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
- எஸ்.எம்.எம்.பஷீர்

பிரதேசவாதம் உண்மையும் கற்பனையும்: - எஸ்.எம்.எம் . பஷீர்


* பரீஸ் கூட்டத்திற்குப் பின்பு முஸ்லீம்கள் சம்பந்தமாகக் கருணாவைக் கேட்டபொழுது "அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் புலிகளே முஸ்லீம்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவார்கள். அதன் பின்பு புலிகள் முஸ்லீம்களோடு பேசி அவர்களின் தேவைகளை அறிவார்கள்" புலிகள் முஸ்லீம்கள் சம்பந்தமாகத் தசாப்தங்களாக வைத்திருந்த நிலைப்பாடே கருணாவினது நிலைப்பாடாகும்.

* முஸ்லீம்கள் ஒரு தேசிய இனக் குழு. அவர்களுக்கென்று ஒரு கலாச்சார அடையாளமுண்டு. அவர்களின் கலாச்சார அடையாளத்தையும் காணி வைத்திருக்கும் உரிமையையும் பாதுகாக்கும் அதே வேளையில் அவர்கள் தமிழ் மக்களோடு ஐக்கியப்பட்டு சேர்ந்துவாழ்வதன் மூலம் மாத்திரம்தான் அவர்களது சமூக அரசியல் பொருளாதார நலன்கள் பாதுகாக்கப்படும். சிங்களவர்களும் சுயநல முஸ்லீம் அரசியல்வாதிகளுமே தமிழ் முஸ்லீம் மக்களுக்கிடையே பிரச்சனையை உருவாக்கப் பார்க்கிறார்கள்" -பிரபாகரன் 

கிழக்கு முஸ்லீம்களைப் பொறுத்தமட்டில் கிழக்கிலே நடைபெற்ற முஸ்லீம்களின் படுகொலைக்கு கருணாவும் கரிகாலனும் பொறுப்பாளிகள் என்ற நிலைப்பாடே உள்ளது.
 - எஸ்.எம்.எம் . பஷீர்